Advertisement

Responsive Advertisement

தமிழரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் கைது: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை மதியம் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன் கிழமை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரனை கைது செய்ய வருகைதந்த பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் ஆவணம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரமமே இது என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எந்த காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.

Post a Comment

0 Comments