இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம்..

Monday, October 31, 2022



31-10-2022.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று (31) நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருள் விலை குறைவடையும் என்ற எதிர்பார்ப்பில், எரிபொருளுக்கான முன்பதிவுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க இறுதியாக 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையானது 40 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

டீசல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு தற்போது 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜயரத்ன தெரிவித்தார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு சுகாதார அமைச்சு கட்டுபாட்டினை விதித்து வழிகாட்டல் கோவையையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் பயணிகளுக்கான பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

எனினும் குறித்த விதிமுறைகள் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது குறிதத விதிமுறைகள் அகற்றப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா என சூரியன் இணையத்தள செய்திப்பிரிவு கெமுனு விஜயரத்னவிடம் வினவியது.கொரோனா விதிமுறைகள் அகற்றப்பட்டாலும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பதிலளித்தார்.

'பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களில் விலை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலையில் உணவக உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைத்து பயணிகள் பேருந்து மூலம் ஜீவனோபாயத்தை முன்னெடுக்கும் தரப்பினர் எவ்வாறு உயிர்வாழ்வது' என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

READ MORE | comments

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது

 


2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் பெறுபேறுகளை நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்

READ MORE | comments

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இவ்வருடத்திற்குள் பரீட்சை மூலம் ஆசிரியர்களாக உள்வாங்கப்படுவர்

 






READ MORE | comments

மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !

 


வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வணவுணதீவு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


4ம் குறுக்கு வீதி வவுணதீவு பிரதேசத்தைச்சேர்ந்த (19) வயதுடைய கணேசலிங்கம் விதுஷயா என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.

கா.பொ.த. உயர் தரத்தில் மட்டக்களப்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவி சம்பவ தினத்தன்று ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கு போவதாக கூறிவிட்டு பின்னர் தான் போவதில்லை என தாயாரிடம் கூறிய நிலையில் தாயார் வேலையின் நிமிர்த்தம் வெளியில் சென்று வீடு திரும்பியபோது மாணவி தனது கற்கை அறையில் தூக்கிட்டிருந்தாகவும் பின்னர் தூக்கிலிருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குறித்த மாணவி அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்;டாhர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

தேசிய பாடசாலைக்கு முற்றுப்புள்ளி கொத்தணி பாடசாலைகள் ஆரம்பம்

 


31-10-2022.

அனைத்து பாடசாலைகளுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் தேசிய பாடசாலை கருத்திட்டத்திற்கு தான் கொள்கை அளவில் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு வலக கல்வி பணிமனையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக பல பாடசாலைகளை இணைத்து பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது, நாடு முழுவதும் 1200 பாடசாலை கொத்தணிகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பாடசாலை கொத்தணிக்குள் காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு இடையில் முகாமைத்துவ செயற்பாடுகளின் ஊடாக பௌதீக மற்றும் மனித வளங்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறமை கிடைக்கும் என்பதுடன், செலவீனங்களை குறைப்பதற்கான பொறிமுறையாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த செயற்பாட்டின் ஊடாக, பாடசாலைகள் அல்லது வளங்கள் இடமாற்றப்படவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ முடியாது என கூறிய அவர், பௌதீக மற்றும் தொழில்நுட்ப முறைகள் மூலம் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


READ MORE | comments

அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Saturday, October 29, 2022

 


இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ பிரதிச் செயலாளர் ஜோன் பேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் முதன்முதலில் 1948 இல் இலங்கையில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








READ MORE | comments

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை !

 


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்றது.


இந்திய கடன் திட்டத்தின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ததன் மூலமும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை திறந்த கணக்கு முறையின் ஊடாக நிர்வகிப்பதன் மூலமும் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் விலை அதிகரிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்போது வரை அத்துடன் அடுத்த மூன்று மாதங்களில் இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள இந்த பொருட்களின் அளவுகள். எதிர்வரும் சில மாதங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்பார்த்த அளவு தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 
READ MORE | comments

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

Friday, October 28, 2022

 


பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர்  வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் நடந்த பரீட்சை கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

517,486 பரீட்சார்த்திகள் 

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு | Gce Ol Examination Results

சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் புதிய திட்டம்! வெளியாகிய தகவல்

 


அரச சேவை

அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் புதிய திட்டம்! வெளியாகிய தகவல் | New Scheme For Civil Service Recruitment

கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.    


READ MORE | comments

இலங்கையில் கிரிப்டோ கரன்சி மோசடி , 8000 பேருக்கு ஏமாற்றம் ! 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ! சீன பிரஜைகள் உள்ளிட்ட மூவர் கைது

 


கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

”ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு கிடைத்தது. இந்த வியாபாரம் தொடர்பான விசாரணையில், கீர்த்தி பண்டார என்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்”

”அவர் ஒரு சீன ஆணுடன் உறவு வைத்திருந்தார். ஷாங்காய் என்ற ஆண். அவரது காதலி வான் என்ற பெண்.”

”இந்த மூவரும் சேர்ந்து இந்தத் தொழிலை நடத்தினார்கள்.”

”இந்த இரண்டு சீன பிரஜைகளும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த முயற்சித்த போதிலும், அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.”

”அவர்கள் செய்தது வெவ்வேறு நபர்களை கிரிப்டோகரன்ஸிகளுக்கு ஈர்ப்பதாகும். 2020;ம் ஆண்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இங்கு பணத்தை முதலீடு செய்த பிறகு, அவர்களுக்கு வெவ்வேறு நன்மைகளைப் பெற்று தருவதாக கூறியுள்ளனர்”

”அதற்கென தனியான கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிரிப்டோ கரன்சி வாங்குவதாகக் காட்டி இந்தத் தொழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.”

”ஆனால், வாடிக்கையாளர்கள் பலன்களைப் பெறப் போகும் போது, ​​எந்த வகையிலும் அவற்றைப் பெற முடியாமல், மேலிருந்து கீழாக இணைப்பை உடைத்து, கீழே உள்ள இருவருக்குள்ளும் உள்ள தொடர்பை மட்டுமே காட்டியுள்ளனர்.”

”இவ்வாறு, இலங்கையில் சுமார் 8,000 பேர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். சந்தேகநபர்கள் 2020ஆம் ஆண்டு முதல் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

“சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

READ MORE | comments

விரைவில் இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை !

 


இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Sarwat Jahan ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுடன் இது தொடர்பில் அவரது கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் சாகல ரத்நாயக்க இந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.

பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
READ MORE | comments

கோயிலில் பிணக்கு : நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்த ஊர் மக்கள்

 





கோயிலில் பிணக்கு : நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்த ஊர் மக்கள் 

கோயிலில் ஏற்பட்ட பிணக்கொன்றினையடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கோயிலொன்றில் கடந்த மாதம் ஏற்பட்ட பிணக்கொன்றினை அடுத்து இரு ஊர் மக்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததுடன், பலரும் காயமடைந்த நிலையில் அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இம்மோதல் காரணமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குப்பட்ட நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு என்ற இரு ஊர்கள் பிளவு பட்டதுடன், சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, குறித்த கோயிலில் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பலர் கைதாகி, சிலர் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த மோதலில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்முனை பொலிஸாரும் அவர்களைக் கைது செய்வதற்காக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தவிர, மனித உரிமை ஆணைக்குழுவும் குறித்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில், இக்கோயிலில் ஏற்பட்ட மோதலில் எதிரொலியாக தமக்கு நீதியைப் பெறுவதில்  பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி நற்பிட்டிமுனை  மக்கள் நேற்று (27) நற்பிட்டிமுனைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் தஞ்சமடைந்து  கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் மகஜரொன்றினைக் கையளித்துள்ளனர்.

இம்மகஜரில் வருடாவருடம் நடைபெறும் காளி கோயில் சடங்கில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து எங்கள் தரப்பினரும் உள்ளனர். எனினும் இதுவரை அவர்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 

முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் பொலிஸ் தரப்பில் எமக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும், இதற்கு மாறாக, பொலிஸ் தரப்பினரால் எமது இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் என்பவர் எங்களுக்கு நீதி கிடைப்பதில் தடையாக இருக்கின்றார்.

எனவே, இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் இவ்விடயம் குறித்த நடவடிக்கை ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே, சமூகப்பிரச்சினைகளை இரு சம்பந்தப்பட்ட தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு ஊர்வலகமாகச் சென்ற நற்பிட்டிமுனை பொதுமக்கள் ஊடகங்களுக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.

READ MORE | comments

இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து !

Tuesday, October 25, 2022


 யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த நோபேர்ட் நிலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனை பின் புறமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற பேருந்தினை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

அதன் போது பேருந்தின் சாரதி மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தின் சாரதியையும் , பேருந்தினையும் இளவாலை பொலிசாரிடம் ஊரவர்கள் ஒப்படைத்தனர்.
READ MORE | comments

தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு !

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன.


பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
READ MORE | comments

நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் !

 


எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை மேலும் உயரலாம் என்றும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சுசந்த மல்லவாராச்சி தெரிவித்தார்.


கண்டியில் நடைபெற்ற இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் வருடாந்த விஞ்ஞான அமர்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,
முட்டை பெறும் கோழிகளுக்கு தாய் விலங்குகள் இல்லாததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம். வருடாந்தம் குறைந்தபட்சம் 80,000 தாய் விலங்குகள் தேவைப்பட்டாலும் இம்முறை கிட்டத்தட்ட பத்தாயிரம் தாய் விலங்குகளை மட்டுமே இறக்குமதி செய்ய முடிந்தது.அதற்கு முக்கிய காரணம் நமது நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியாகும்.

நிதிப் பிரச்சினை காரணமாக கால்நடை துறைக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அதனால் தாய் விலங்குகளின் இறக்குமதி மிகவும் குறைந்துள்ளது. இது நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கும்.

இப்போது தேவையான தாய் விலங்குகளை கொண்டு வந்தாலும் அவை முட்டையிட்டு குஞ்சுகளை வளர்க்கும் போது எங்களுக்கு முட்டை கிடைக்க குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். இது குறித்து இதுவரை முறையான திட்டங்கள் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும். மேலும் இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்கு பிறகு முட்டை விலை உயரலாம் என தெரிவித்தார்.

READ MORE | comments

பதிவு செய்யாமல் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது !

 


பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது உள்ளது போல், பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் எரிபொருள் வழங்கினால், எல்லோருக்கும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் : தேர்தல் ஆணைக்குழு !

Monday, October 24, 2022

 


இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.


புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மக்கள் மீது சுமத்தப்பட உள்ள ​மேலும் 04 வரிகள்…!

 


நாட்டுக்காக இதையும் சுமப்பதற்க்கு தயாராகுங்கள் 

மக்கள் மீது சுமத்தப்பட உள்ள ​மேலும் 04 வரிகள்…!

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் ஆண்டு நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2056 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.

அந்தப் பரிந்துரைகளுக்கமைய, புதிய வரிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை !

 


பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற 22 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.


சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட முற்பட்ட போதே அவர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நீர்கொழும்பு அண்டிஅம்பலம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
READ MORE | comments

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப எரிவாயு விலை குறையலாம் : லிட்ரோ !

 


உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக வங்கியிடமிருந்து லிட்ரோ நிறுவனம் பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். மேலும் மீதமுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது !

 


ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (7) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆளங்குளம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5 பகுதியை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 9 கிராம் 880 மில்லிகிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்டபிள்களான ராஜபக்ஸ (24812) அபேரட்ன (75812) நிமேஸ்(90699) பியுமக (94143) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

புதிய தொழிநுட்பத்தின் ஊடான பேருந்து பயணச்சீட்டு அறிமுகம்

Sunday, October 23, 2022

 



23-10-2022.*, 

பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பயணச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறைமையின் கீழ் நடத்துநர் அல்லது வாகன உதவியாளர் இன்றி பயணிகளிடம் கட்டணத்தை அறவிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்துவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய பயணச்சீட்டு இயந்திரங்கள் பேருந்துகளில் பொறுத்தப்படும்.

நடத்துனர் இன்றி அல்லது நடத்துனருடன் பேருந்துகள் பயணத்தை மேற்கொள்ள முடியும்.எனினும் நடத்துனர்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.குறித்த இயந்திரங்களில் கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.

இதனை விரைவில் அறிமுகப்படுத்துவதற்காக முழுமையாக தரவுகள் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

 


21 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் இரத்மலானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றின் ஊழியர் ஒருவர் 21 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுவதற்காகச் சென்று கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கி காயப்படுத்திவிட்டு குறித்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​சந்தேகநபர்கள் இருவர் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு கொள்ளைக்காக பயன்படுத்திய வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

சூடுபிடிக்கும் ரஸ்யா - உக்ரைன் போர்..! அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல்

Friday, October 21, 2022


தாக்குதல்

உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவ நிபுணர்களை ரஸ்யா கிரிமியாவில் நிறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஸ்யா கடந்த திங்களன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த ட்ரோன்கள் ரஸ்யாவால் அனுப்பப்பட்டது. ஆனால் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

நேரடியாக களத்தில் ஈரான்

சூடுபிடிக்கும் ரஸ்யா - உக்ரைன் போர்..! அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல் | Iranian Experts In Crimea Drone Strikes On Ukraine

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, கிரிமியாவில் ஈரானிய ராணுவ வீரர்கள் களமிறங்கி ட்ரோன் தாக்குதலில் ரஸ்யாவுக்கு உதவியதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான ஈரானியர்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறார்கள் என்றும் ரஸ்ய வீரர்கள் ட்ரோன்களை இயக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை பாதிக்கும் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஈரான் நேரடியாக களத்தில் உள்ளது.

உக்ரைன் மக்களுக்கு எதிராக ஈரான் ஆயுதங்கள் வழங்குவதை அம்பலப்படுத்தவும், தடுக்கவும் அமெரிக்கா எல்லா வழிகளிலும் முயலும் என்று கிர்பி கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ரஸ்யாவுக்கு உதவியதற்காக மூன்று ஈரானிய ஜெனரல்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான ஷாஹத் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் மீது இங்கிலாந்து தடைகளை அறிவித்துள்ளது.

'காமிகேஸ்' டிரோன்கள்

சூடுபிடிக்கும் ரஸ்யா - உக்ரைன் போர்..! அமெரிக்கா வெளியிட்ட பகீர் தகவல் | Iranian Experts In Crimea Drone Strikes On Ukraine

கடந்த திங்களன்று ரஸ்யா, உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த ட்ரோன்கள் 2-ம் உலகப் போரில் தற்கொலைப் படையாக செயல்பட்ட ஜப்பானிய போர் விமானிகளின் நினைவாக 'காமிகேஸ்' டிரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஸ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருகின்றது.

உக்ரைன் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யா அழித்துள்ளது. இதையடுத்து உக்ரைனில் மின்சாரம் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

READ MORE | comments

நாளைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு

 




நாளை (22) சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு விபரங்கள்




READ MORE | comments

காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் கிழக்கு மாகாணத்தில் சஞ்சரிப்பு !


 (பாறுக் ஷிஹான்)



காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இம் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. 

ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், , சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. வலசை வந்து ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன.

 23 க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




READ MORE | comments

மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்து : சஜித் பிரேமதாச !

 


மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதே  தவிர,  நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான மனநிலை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டை நாசமாக்கிய அரசாங்கம் இன்று நல்லவர்கள் போன்று கதைத்துக்கொண்டு 22ஆம் திருத்தத்தை கொண்டுவருவது வேடிக்கையானது என்றார். 

பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

நாட்டை சிறப்பாக கட்டியெழுப்புவோம் என கூறி அரசியலமைப்பின்  20ஆம் திருத்தச்சட்டத்தை  கொண்டுவந்தவர்கள், அதன் பின்னர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தனர். இந்த சர்வாதிகார போக்கினை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள்  வீதிக்கு இரங்கி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததன் விளைவாகவே இவர்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டுவருகின்றனர். ஆகவே மக்கள் போராட்டத்தின் விளைவாகவும்,  மக்களுக்கு அஞ்சியுமே  22ஆம் திருத்தும் கொண்டுவரப்படுகிறது என்றார். 

அரசாங்கத்தில் அடிமைகளாக இருந்துகொண்டு, ஏழு மூளைகள்  இருப்பவரின் கதைகளை கேட்டுக்கொண்டு, இந்த நாட்டையே நாசமாக்கினர். இறுதியாக ஏழு மூளைகளைக் கொண்டவரையும் மக்களே விரட்டியடித்தனர். ஜனாதிபதியையும் மக்களே விரட்டியடித்தனர். இவற்றை மறந்துவிட்டு தூய்மையானவர் போன்று கதைக்க வேண்டாம். இந்த நாட்டை நாசமாக்கிய அரசாங்கம் இன்று நல்லவர்கள் போன்று கதைத்துக்கொண்டு 22ஆம் திருத்தத்தை கொண்டுவருவது வேடிக்கையானது என்றார். 

22ஆம் திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும் என கூறினாலும், சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துவோம் என கூறினாலும் அவை வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமேயாகும். உண்மையான நோக்கம் இருக்கும் என்றால் பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவத்தை  எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவற்றை முன்னெடுக்கவில்லை. தேசிய பேரவை என்பது இன்றும் ஒரு முடக்கப்பட்ட சபையாகவே உள்ளது. எனவே இவற்றுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கவேண்டும்  எனவும் வலியுறுத்தினார். 

எவ்வாறு இருப்பினும், எமது மூன்று கோரிக்கைகளுக்கு அமைய நாம் இதற்கு இணக்கம் தெரிவிக்க தீர்மானித்துள்ளோம். குறிப்பாக இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்படல், அரசியல் அமைப்பு பேரவையை பலப்படுத்தல், பாராளுமன்றம் இரண்டரை ஆண்டுகளில் கலைக்கப்பட வேண்டும், ஆகிய மூன்று கோரிக்கைகளுக்கும் இணங்கினால் மட்டுமே  22ஐ நாம் ஆதரிப்போம் என தெரிவித்தார்.

READ MORE | comments

இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு*



இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முடிவுறுத்தப்படும்.

பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21 வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம்bn 17ஆம் திகதிவரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |