பிள்ளையானை விடுதலை செய்வதாக உறுதியளித்த மஹிந்த!

Thursday, October 31, 2019

பிள்­ளை­யானை விடு­தலை செய்வேன் என்று கூறும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சியல் அரு­வெ­றுக்கத்தக்­கது அமைச்சர் அஜித் மன்­னம்­பெ­ரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மேலும் தெரி­விக்­கையில்,
சஜித் பிரே­ம­தாச விவாதம் பற்றி தனிப்­பட்ட ரீதி­யிலும் நாமும் பல சந்­தர்ப்­பங்­களில் அவ­ருக்கு நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். 
எனினும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இதற்கு தனிப்­பட்ட ரீதியில் எவ்­வி­த­மான பதி­லையும் கூற­வில்லை. 
விவா­தத்தில் பங்­கு­பற்ற முடியும் என்றால் முடியும் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் அவர் பகி­ரங்­க­மாகக் கூற வேண்டும்.
இந்த விவா­தத்தில் கலந்து கொள்­வதில் என்ன பிரச்­சினை? ஏன் அவர் இதனை புறக்­க­ணிக்­கிறார். அவ­ருக்கு உடல் நலக்­கு­றைவு என்று கூறினால் பிர­தான வேட்­பா­ள­ருக்கு உடல் நலம் சரி­யில்லை என்­பதால் இந்த விவா­தத்தை கைவிட நாம் தீர்­மா­னிக்­கலாம்.
கோத்­த­பா­யவின் கடந்­த ­கால, நிகழ்­கால மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் பற்றி உண்­மையைக் கூறினால் அவர் தோல்­வி­ய­டை­வது உறு­தி­யாகும்.
எனவே கோத்­த­பாய ராஜ­பக்ஷவை தேர்­தலில் வெற்றி பெறச் செய்­வ­தற்­காக மஹிந்த ராஜபக் ஷ எதையும் செய்­வ­தற்கு தயங்க மாட்டார். இதனால் தான் சிறைச்­சா­லைக்குச் சென்று பிள்­ளை­யானை சந்­தித்து தமக்கு ஆத­ர­வ­ளித்தால் விடு­தலை பெற முடியும் என்று கூறி­யி­ருக்­கிறார். 
ஜன­நா­யக ரீதி­யான தலை­வ­ராகக் காணப்­பட்ட ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை­யுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டி­லேயே பிள்­ளையான் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கிறார். 
சக நாடாளு­மன்ற உறுப்­பி­னரின் கொலை குற்­றத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பரை தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக விடுவிப்பதாகக் கூறும் மஹிந்த, கோத்தாவிடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்?
இது வெறுமனே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல. 
பிள்ளையானை விடுவிப்பதாக மஹிந்த வழங்கியுள்ள வாக்குறுதி மிகப் பாரதூரமான தாகும். இது வெட்கப்பட வேண்டிய விட யமாகும். 
எனவே நாட்டிலுள்ள சகல மக்களும் மஹிந்த குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனித படுகொலை யுடன் தொடர்புடைய சந்தேகநபரை விடு விப்பதாகக் கூறும் மஹிந்தவின் அரசியல் அருவெறுக்கத் தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு~சஜித் அசத்தல் !

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (வியாழக்கிழமை) காலை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.
இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, “புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப்போவதாக கூறினார்.
நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் செய்துகொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சுர்ஜித் தொடர்பில் சிறுவன் ஒருவன் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்...!


குழந்தை சுஜித்தை நானே மீட்டு இருப்பேன்… இங்கு இருந்தவர்கள் தடுத்து விட்டனர் என்று வேதனை தெரிவித்துள்ள சிறுவன் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.

செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து இவ்வாறு வினவியுள்ளார் “இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக ?” என்று. அதற்கு அந்த சிறுவன்  இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் செய்கின்றார்கள் என்று.

அதற்கு செய்தியாளர்  “நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும்?” அதற்கு அந்த சிறுவன் "  நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் நிறைய அனுபவம் உள்ளது.

எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார். இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார். அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும் விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.

அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து வருவேன்.

அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.என்று சிறுவர் கூறியுள்ளார்.

சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் " நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான், அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது.

உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை. ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால். வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம் ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை.

பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று . யாரும் அதை பொருட்படுத்தவில்லை, அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது. “சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார்?” என்று செய்தியாளர் கேட்டுள்ளார்.

இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது. நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டதாக குறித்த 15 வயது சிறுவன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
READ MORE | comments

சுஜித்தின் மரணத்திற்கு பெற்றோரும் பொறுப்பு-சமுக ஊடகங்கள்! கண்ணீருடன் கருத்து வெளியிட்ட பெற்றோர்! செய்திப்பார்வை

கடந்த 4 நாட்களாக தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம். இந்திய அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
இந்நிலையில் சமூக ஊடகங்கள் சில சுர்ஜித் இறந்ததற்கு, அவனுடைய பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தன. இந்நிலையில் அவனுடைய தாயார் கலா மேரி கூறியதாவது, “அந்த ஆழ்துளைக்கிணறை விவசாயத்திற்காக நாங்க கட்டவில்லை. அது சுர்ஜித்தின் தாத்தா காலத்தில் கட்டப்பட்டது. அப்போது என் கணவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நாங்கள் இந்த பகுதியில் 10 வருடங்களாக வசித்து வருகிறோம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
சுர்ஜித்தின் தந்தை கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறப்பது கடைசியாக என்னுடைய குழந்தையாக தான் இருக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நிகழாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தினர் அனைவரும் மிகவும் துரிதமாக செயல்பட்டனர்” என்று கூறினார். இருப்பினும் அரசாங்கத்தினர் மேற்கொண்ட மீட்புப்பணி குறித்து அப்பகுதி மக்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நம்மால் மறுக்க இயலாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

சாய்ந்தமருது மாணவன் செரோன் அனஸ் அவர்களுக்கு சர்வதேச விருது...

Wednesday, October 30, 2019


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கடந்த ஒக்டோபர் மாதம் 19 , 20 திகதிகளில் ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற NYMUN 2019 ( தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைவிழாவில் General Assembly Third committee இல்அவுஸ்திரேலியா நாட்டின் பிரதிநிதியாக தனது ஆய்வை சமர்ப்பித்து விவாதங்கள்தீர்வுகளில்கலந்து கொண்ட சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட நூறுல் ஜின்னா செரோன் அனாஸ்இம்முறை" Best Novice Delegate " இற்குரிய விருதை பெற்று தனது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரே இத்தகைய விருதை பெற்ற முதல் கிழக்கு மாகாண பிரதிநிதி ஆவார்இவர் தனதுஆரம்பக் கல்வியை சாய்டந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைஉயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலும் கற்று தற்போதுஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதோடு நாட்டில் சகலமாவட்டங்களையும் பிரதிநிதித்துவபடுத்தி 500 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.இவர் கல்விக்கு மேலதிகமாக பல இணைப்பாட விதான செயற்பாடுகளில் தேசியமட்டத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
இவர்  சாய்ந்தமருது  நூறுல் ஜின்னா , ஆமினா உம்மா  தமபதிகளின் புதலர்வராவார்.
READ MORE | comments

குழந்தை சுஜித் உயிருடன் இருக்கிறானா இல்லையா.!? உண்மை நிலவரம் இது தான்..!!

Monday, October 28, 2019

திருச்சி குழந்தை சுஜித் பற்றிய எதிர்பார்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டது. காரணம் இனி குழந்தை உயிர் தப்புவதற்கு 1% வாய்ப்புகள் கூட் இல்லை. வெறும் கை மட்டுமே இது வரை தெரிந்து வந்த நிலையில் நேற்றிரவு குழிதோண்டும் அதிர்வினால் தற்போது 85 அடி வரை குழந்தை சென்றுவிட்டது. ஏற்கனவே இரண்டாவது ரிக் இயந்திரம் குழி தோண்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 50 அடி கூட தோண்டப் படவில்லை.
குழந்தை 85 அடியில் இருந்தால் 90 மேற்பட்ட அடி குழி தோண்ட வேண்டும். அது மட்டும் இன்றி கீழே சென்று சுரங்கம் தோண்ட வேண்டும். கீழே சுரங்கம் தோண்டும் போது கல் பாறைகள் இருந்தால் அது இன்னும் கடினமாகும். குழி தோண்டவே இன்னும் 5 மணி நேரங்கள் தேவைபடுகிறது என மீட்பு குழுவினர் கூறி வருகின்ற நிலையில்
சுரங்கம் தோண்டும் வழியில் பாறை இருந்தால் அதற்கும் சில மணி நேரங்கள் தேவை படுகிறது. ஆக குறைந்தது 8 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்பது முடியாத விடயமாகும். அம்மா காப்பாற்றுவேன் என்றார் காப்பாற்றுவாள் என ஏங்கிக் கொண்டிருந்த குழந்தை தனது மரணம் வரை நம்பிக்கையோடு இருந்திருக்கும். விதி யாரையும் விட்டு வைப்பதில்லை.
READ MORE | comments

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

2020ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான குறைநிரப்பு நிதி ஒதுக்கீடின் ஊடாக அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படும்.
இந்த அதிகரிப்பின் அரைவாசி பகுதி அடுத்து வருட ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும். மீதிப் பகுதி 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.


READ MORE | comments

100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை காப்பாற்றுவதில் சிக்கல் - போராடும் மீட்பு பணியாளர்கள்


தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
70 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் கற்பாறைகள் நிறைந்துள்ளமையினால் துரிதமாக மீட்பு பணியை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட போதும் கடினமாக பாறைதான் இருப்பதாக தெரிகிறது.
அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு 38 அடி ஆழம் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு இரண்டாவது ரிக் இயந்திரம் வந்ததிலிருந்து ஆறு மணி நேரம் துளை போடும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. தற்போது 40 அடி ஆழத்தை கடந்திருந்தாலும்கூட தொடர்ந்து அந்த பகுதியில் கடினமான பாறைதான் இருக்கிறது.
தற்போது பாறையை தகர்க்க முடியாமல் ஊழியர்கள் துளையிடும் பகுதியில் தண்ணீரை ஊற்றி வரும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று வகையான ட்ரில்லிங் டூல்களை அங்கே வைத்திருக்கிறார்கள். அவைகளை கொண்டு மாற்றி மாற்றி அந்தப் பாறையை ஓரளவு தகர்த்து அங்கிருந்து துகள்களாக வெளியே எடுத்து வர முயற்சி செய்துவருகிறார்கள்.
உள்ளே செல்வதற்கும் ஒவ்வொரு அடியும் தோண்டுவதற்கும் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அடி வரை பள்ளம் தோண்டி இருக்கிறது.
அதேபோல் இந்த இயந்திரம் அதிக திறன் கொண்டது என்றாலும் பாறை தன்மை மிகவும் கடினமாக இருப்பதுதான் இந்த இயந்திரம் அவ்வளவு எளிதாக துளையைப் போட முடியவில்லை. ஆனால் முயற்சி கைவிடப்படாமல் தொடர்ந்து மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
READ MORE | comments

குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்!

Sunday, October 27, 2019

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குழந்தை 82 அடி ஆழத்திலேயே இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லையென தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றிரவு (26) குழந்தையின் உடல் உஷ்ணம் இருந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் புகுவதை தடுக்க ஏற்பாடுகள்


திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ள நிலையில் மீட்கும் பணி, 49 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் குழிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வகையில், மீட்புப் படையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அத்துடன் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

அன்னம் மொட்டை தோற்கடிக்கும் : அடித்துக் கூறுகிறார் ஹசன் அலி !!


(அபு ஹின்ஷா)


எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களில் மனிதாபிமானமாக மக்களோடு சகஜமாக பழகக்கூடியவர் எங்களுடைய வேட்பாளர். அமைச்சராக இருந்து கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களின் பிரச்சினைகளை காலடியிலேயே பேசி தீர்வு தந்த  அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களே. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு சகல வகைகளிலும் பொருத்தமானவராக நான் பார்க்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம் ஏ ஹசன் அலி தெரிவித்தார்.

இன்று காலை புதிய ஜனநாயக முன்னணியின் சம்மாந்துறை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய எம். எ. ஹசன் அலி அவர்கள் அங்கு மேலும் பேசுகையில்,

பிரதேச சபை உறுப்பினராக கூட இருந்திராத மக்களின் அன்றாட பிரச்சினைகளை அணுவளவும் தெரிந்திராத மொட்டின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று இந்த நாட்டை எவ்வாறு சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. ஒருகாலத்தில் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களை கண்டு ஊடகங்கள் தெறித்து ஓடியது. ஆனால் இப்போது தலைகீழாக மாறி ஊடகங்களை கண்டு அவர் தடுமாறிக் கொண்டு பதிலளிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். ஊடகவியலாளர் சந்திப்பில் பக்கத்தில் இருப்பவர்கள் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பதை சமீபகாலத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஏனைய மாகாணங்களிலும், பிரதேசங்களிலும் தானே நேரடியாக சென்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் தான் நேரடியாக வராமல் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் விதமாக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் தன்னுடைய நண்பர்களையும் அனுப்பி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். ஒரு ஜனாதிபதி தேர்தலில் குடிசையில் வாழ்கின்ற மகன் தொடக்கம் கோபுரத்தில் வாழ்கின்றவர்  வரையிலான வாக்குகள் தேவை. ஆனால் வடகிழக்கில் வாழ்கின்ற மக்களின் வாக்கு தேவையில்லை என்று புறக்கணித்து கோத்தாபய ராஜபக்ச அவர்கள் செயற்படுவதை நாங்கள் எல்லோரும் கவனத்திற்கொண்டு ஏழைகளின் பசியை அறிந்த எம்மோடு நெருங்கிப் பழகுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஆளுமையற்ற கோதாபய ராஜபக்ஷ அவர்கள் படுதோல்வி அடைந்து எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

நாங்கள் தற்போது எதிர் கொள்வது ஜனாதிபதி தேர்தல் மாத்திரமல்ல இந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சார்ந்த கட்சிகளே எதிர்வருகின்ற 2020 ஆம் ஆண்டில் நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் சில வருடங்களின் பின்னர் வரப்போகின்ற உள்ளுராட்சி மன்றம் என சகலத்திலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.இந்தத் தேர்தலானது 5 வருடத்திற்கான தேர்தலாக நாங்கள் நினைத்து விடாமல் 25-30 வருட காலங்கள் இந்த ஆட்சி அதிகாரம் நிலைத்து நிற்கும் என்பதை மனதில் வைத்து என்னுடைய வாக்குகளை நாங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் செலுத்தவேண்டும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்த நாட்டில் கள்ளத்தனமாக ஆட்சியை கைப்பற்ற மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்பட்டு அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதல்கள் போன்றவற்றை நடாத்தி இந்த நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திய  மஹிந்த குடும்பத்தின் ஆட்சி வர வேண்டுமா என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையான இனப்பிரச்சினை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு தரக்கூடியவரை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைக்க வேண்டும். எதிர்வருகின்ற 16 ஆம் திகதி சஜித் பிரேமதாஸ அவர்களே எங்கள் ஜனாதிபதி. அதன் மூலம் நாங்கள் எங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் உதவிகளையும் , தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை எனும் ஒரே நாட்டில் ஒரே சட்டம் மட்டுமே இருக்க வேண்டும் !!



-அபூ ஹின்ஸ்-

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம். எனும் இலக்கை கொண்டு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இருந்த  சிரேஷ்ட சட்டத்தரணி நாக நந்த  கொடிதுவக்கு அவர்களுக்கு பயந்து அவர் போட்டியிட இருந்த கட்சியை குழப்பி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்து விட்டார்கள் என சிரேஷ்ட சட்டத்தரணி நாகநந்த கொடிதுவக்கு அவர்களின் புதிய அரசியலமைப்பை மக்கள் மயப்படுத்தும் அமைப்பினுடைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஆர்.ஜே சரிப் தெரிவித்தார்

இன்று மாலை மாளிகைக்காடு தனியார் உணவகம் ஒன்றில் நடைபெற்ற இலங்கை குடியரசின் மக்கள் அங்கீகரித்த அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தும்  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் பக்கத்து வீதியில் இருக்கின்ற மாணவர்களையே சேர்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பாடசாலை கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரச மற்றும் தனியார் வாகனங்களில் சாரதிகளும் வாகன நடத்துநர்களும் சீருடை அணிய வேண்டிய சட்டத்தை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.

எந்த அரசியல்வாதியும் செல்கின்ற சொல்லை செயலில் காட்டுவதில்லை. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், முக்கியஸ்தர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஊழல் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள். 

ஒரே நாட்டில் , ஒரே இனமாக , ஒரே சட்டத்தின் கீழ் இலங்கையர்கலாக நாங்கள் வாழ வேண்டும். முஸ்லிம்களுடைய தலாக் சட்டங்கள் எதுவும் இந்த நாட்டில் எழுத்து மூலம் நடைபெறுவதில்லை வாய்மொழி மூலமே இடம்பெற்று வருகின்றது ஆகவே சகல இனத்தவர்களும் ஒருமைப்பாட்டோடு  இலங்கையர்கள்  வாழ தனிநபர் சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும் இஸ்லாமிய சட்டம் , தேசவழமைச் சட்டம் , கண்டிச் சட்டம் என்பதோடு எல்லா தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கி ஒரே நாட்டில் ஒரே சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு செலவினங்களை குறைக்கும் முகமாக அமைச்சரவையின் தலைவராக உள்ள பிரதமர் அவர்களே நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக கொண்டு புதிய சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும். சிறியதொரு நாடான இலங்கைக்கு மாகாண சபை முறைமை தேவையற்ற ஒன்றாகும் என்றார்.

ஜி
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

மெதடிஸ் திருச்சபை புகலிட சிறார்களின் சிறுவர் தின விழா



மட்டக்களப்பு மெதடிஸ் திருச்சபை புகலிட பாடசாலை சிறார;களின் சிறுவர; தின விழா புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா அவர;களின் தலைமையில் நேற்று காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில் இனிதாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர; யூ.சிவராசா,சிறப்பு விருந்தினர;களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை தலைவரான சு.சந்திரகுமார;, கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர;; கலாநிதி சி.ஜெயசங்கர; மற்றும் மட்டக்களப்பு சிறுவர; நன்னடத்தை உத்தியோகத்தர; ச.மணிவன்னன் ஆகியோர; இந்நிகழ்வில் கலந்து கொண்டனர;. மேலும் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட எ.பிரபாகரன் மற்றும் இந்நிகழ்விற்கு தலமை தாங்கிக் கொள்கின்ற புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா  ஆகியோரையும் இப் பாடசாலை சிறார;களினால் மலர; மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர;.இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.இதனை தொடர;ந்து சிறுவர;களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இச்சிறுவர; நிகழ்சியை பார;வையிடுவதற்காக இப்பாடசாலை சிறார;கள் இவர;களின் பெற்றோர;கள் மற்றும் இப்பாடசாலை ஆசிரியர;கள்; இப் பாடசாலையின் பழைய மாணவர;கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர;கள் சிறப்பித்தனர;.
இச் சிறுவர; நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்பாடசாலை மாணவர;களின் ஆளுமை திறன்; மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் ஓர; இடமாகவே இடம்பெற்றது எனலாம்.இந்நிகழ்வில் தலமை உரையினை புகலிட நிர;வாக பணிப்பாளரான அருட்திரு.எஸ்.எஸ் ரெரன்ஸ் ஐயா அவர;கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர;கள் இவ்வுலகத்தில் சாதிக்கப்பிறந்தவர;கள் இதனை எடுத்துக்காட்டாக அகராதியில் மூன்று சொல்லான நடக்காது முடியாது சாத்தியமில்லை என்ற பதங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிலும் உதிக்கக் கூடாது என்பதனை இப்பாடசாலையில் கற்கும் மாற்றுதிறன் திறன் கொண்ட ஒவ்வொரு மாணவர;களின்  கலைச்செயற்பாடுகளின் ஊடான வெளிப்பாடு எடுத்துக்காட்டுக்காட்டுகின்றது என்று கூறினார;.
அத்துடன் சிறப்பு விருந்தினர;களாக கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாசார நுண்கலைத்துறை தலைவரான சு.சந்திரகுமார; அவர;கள் சாதாரண மாணவர;களுடன் கலை ஆக்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது அவர;களோடு இணைந்த ஒரு படைப்பாக்கத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 6 மாதகாலங்கள் தேவைப்படும் அது கூத்தாக இருந்தாலும் சரி நவீன நாடகம் என்றாலும் சரி குறைந்த காலத்துக்குள் உருவாக்குவது கடினமாக இருக்கும் ஆனால் இந்நிகழ்வில கதாநாயகர;களாக திகழும் சிறார;களின் கலை நிகழ்ச்சிகளை பார;வையிடும் போது மிகவும் சிறப்பாகவும் காத்திரமான நிகழ்சிகளை தந்ததோடு நாங்களும் சாதாரணவர;களோடு ஒப்பிடும் போது சளித்தவர;கள் இல்லை இப் புகலிட சிறார;கள் எடுத்துக்காட்டினார;கள் என கூறினார;.மேலும்; கிழக்குப் பல்கலைக்கழக கலைக் கலாசார பீடத்தினால் இறுதி நான்காம் வருட இறுதி வருட மாணவி எஸ்.பா.ஷர;பின் அவரினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி வருட ஆய்வான “மாற்றுத்திறனாளிகளின் திறன் வெளிப்பாட்டில் கலைப்படைப்புக்கள்: மட்டக்களப்பினை மையப்படுத்தியதான பங்குகொள்ஆய்வு.”என்பதால் மெதடிஸ் புகலிட அமைப்பில் கடந்த 8 மாத காலம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவை கொண்ட மாணவர;களோடு இணைந்து இசை, நாடகம், நடனம், ஓவியம்,கைப்பணி மற்றும் கணனி வடிவமைப்பு தொடர;பான பல்வேறு கலை செயற்பாடுகளில் ஈடுபட்டதையொட்டி பெருமையடைவதாகவும் என கூறினார;.
அதேபோல் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர; யூ.சிவராசா அவர;கள் கூறுகையில் இம்மட்டக்கப்பு மாநகர சபையினால் சிறுவர; நேய மாநகரமாக நுனிசெப் இனால் ஒரு செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு 5 வருட செயற்திட்டம் செய்வதற்கான ஓர; யோசனை இருப்பதாகவும் அதன் நோக்கம் என்னவெனில் இவ்வாறான பிள்ளை நேய நலன் முதல் தடவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் உட்பட்ட வகையில் பிள்ளை நேய நலன் கொண்ட சபையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் இதில் சதாரண மாணவர;களுடன் இணைந்தவகையில் விசேட தேவை கொண்ட மாணவர;களை இணைத்து கொள்வது தொடர;பான வகையில் செயற்படுவதற்கு எதிர;கால திட்டத்தில் புகலிட அமைப்புடன் தொடர;பு கொண்டு அவர;களின் ஆலோசனைகளை பெற்று பிள்ளை நேய செயற்பாட்டில் இவ்வாறான விசேட தேவை கொண்ட பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர;பாக கலந்துரையாட உள்ளதாக கூறினார;.
இவ்வாறு இந்நிகழ்சியில் சிறுவர; தினத்தை முன்னிட்டு அனைத்து நிகழ்வுகளும் புகலிட விசேட ஆற்றல் கொண்ட மாணவர;களின் திறன் வெளிப்பாட்டால் வரவேற்பு நடனம்,  பட்டம் விடுதல், சிறுவர;களுக்கு முகவர;ணம் பூசுதல் மற்றும் புகலிட ஆசியர;கள் மாணவர;கள் கொண்ட நாடகம் போன்ற கலை நிகழ்சிகள் சிறுவர;களின் ஊடாக இடம்பெற்று இனிதாக இந்நிகழ்வு நிறைவேறியது.

READ MORE | comments

இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை : மக்கள் விடுதலை முன்னணியின் சலீம் ஆதம் !!



அபு ஹின்ஸா 

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என யாரும் போட்டியிடாத ஒரு முக்கிய ஜனாதிபதித் தேர்தலாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நோக்கலாம். வெள்ளையர்களிடம் இருந்து இந்த நாடு சுதந்திரம் பெற்ற போது எந்த ஒரு இலங்கைப் பிரஜையும் ஒரு ரூபாய் கூட கடனாளியாக இருந்திருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சலீம் ஆதம் தெரிவித்தார்.

நேற்று மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைமை உரை நிகழ்த்தும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

2019ஆம் ஆண்டு ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் ஐந்து லட்சத்து 30 ஆயிரம் கடனுடன் வாழ்கின்றோம். 98 சதவீதமான உழைக்கும் மக்களை இரண்டு சதவீதமான முதலாளித்துவ மக்கள் ஆட்சி புரிவதனால்தான் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது.

மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஊழலற்றவர் ஏழைகளின் பசி அறிந்த அவர் நன்கு படித்தவர் இந்த நாட்டை ஆட்சி புரிவதற்கு சகல திட்டங்களும் கொன்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இருந்தாலும் வெல்வாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அனுரகுமார நல்லவர்தான் ஆனால் வெல்ல மாட்டார் என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

இம்முறை ஆட்சியை தீர்மானிக்க போகும் வாக்குகள் இளைஞர்களின் வாக்குகளாகவே இருக்கும். அரசியல் தலைவர்கள்  தங்களுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ள பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி புதிய சொற்களை அறிமுகப்படுத்தி எங்களை பயமுறுத்துகிறார்கள் ஆனால் என்னைப் பொருத்தவரையிலும் என்னுடைய கட்சியை பொறுத்தவரையிலும் இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்று இல்லை. எல்லோரும் இலங்கையர்.

சிறுபான்மை எனும் சிறிய வட்டத்திற்குள் உங்களை அமுக்கிவிட்டு வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே அரசியல்வாதிகள் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். எங்களுடைய குழந்தைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலைகலே இல்லாமல் கஷ்டப்படுவது போன்று அல்லாமல் அவர்களுடைய பிள்ளைகள் மிக வசதியாக தன் எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கின்றார்கள் நாங்கள் கேட்பதெல்லாம் எல்லோருக்கும் சமனான ஒரு இலங்கை தான். அதற்கான கொள்கையும் திட்டமிடலும் எங்களிடம் இருக்கின்றது. பல வருடங்களாக இந்த நாட்டை ஆண்ட எல்லோரும் சொல்கிறார்கள் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக. கடந்த காலங்களில் நாம் செய்த அரசியல் தெரிவின் பிழைகள் காரணமாக இப்போது நாம் கஷ்டப்படுகிறோம். இவற்றையெல்லாம் மாற்றியமைக்க முஸ்லிங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் தொடர்ந்தும் குரல்கொடுக்கும் அனுரவே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்றார்.



UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று பொதுஜன பெரமுன   ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் கூட்டம்  வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது .

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்  பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது கருத்தில் 



கல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும்.தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல.இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை.அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன்.மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன்.ஆனால் நாங்கள் ஆட்சியமைத்தால் நகர சபையாகவும் மாற்றி தருவேன்.பயங்கரவாத பிடியில் இருந்து உங்களை பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டடுவந்தவர்கள் நாங்கள்.ஆனால் இந்த ஆட்சியில் தான் முஸ்லீம்களுக்கான தொழுகையை கூட முடக்கியது இந்த ஆட்சியில் தான் .ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சர் தன்மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்.தானும் செல்லவில்லை.ஆனால் தாக்குதலில் அப்பாவி 400  மக்கள் உயிரிழந்தார்கள்.அந்த அமைச்சரும் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது.அந்த அமைச்சர் வேற யாரும் அல்ல.இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வலது கை ஊடக பேச்சாளர் ஆவார் மேலும் குண்டுவெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

தொடர்ந்தும் எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம்.இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக  உணவு உண்ணாமல்  பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.ஆனால் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார்.இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள்  பார்க்கவா முடியும்.ஆனவே தான் எங்களுக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய   பரிபூரண ஆதரவை தாருங்கள் .நாங்கள் நாயை போன்று   எங்களது ஆட்சியில் உங்களை பாதுகாப்போம்.இருந்த போதும் இந்த நாய்க்கு பைத்தியம் பிடித்தால் எவ்வாறு உங்களை பாதுகாக்கும் என்பதையும் அறிவீர்கள் என்று தெரிவித்தார்.

இதில்  தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா   முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சிரியாணிவிஜயவிக்ரம  மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
READ MORE | comments

மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு


-அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் சர்வதேச ரீதியில்தான் எமது பிரச்சினையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் வாய்கிழிய பேசும் சம்பந்தன் அவர்கள் தான் பேரம் பேசி எமக்கான தீர்வை பெறவேண்டிய சந்தர்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு அரசை சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பாதுகாத்து வருகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிதான் எமக்குரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் அவருக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார் பின்பு ஆட்சிக்கு வந்ததும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இவர்களால் ஒருவிடயத்தை கூட நகர்த்த முடியவில்லை.

இதேபோல் ஜனாதிபதித்தேர்தலில் சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிப்பதற்கும் எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்து தமிழர்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்.

இவ்வாறக தமிழர்களின் வாக்குகளை பகடைக்காயக வைத்து தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டு இருக்கின்ற இவர்கள்தான் தங்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருபவர்கள்.

கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் எவ்வாறான தந்திரோபாயத்தை கடைப்பிடித்தாரோ அதைத்தான் இந்த தேர்தலிலும் கடைபிடித்துவருகிறார் அதாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவை அறிவிக்கின்றோம் என்று கூறிவிட்டு இறுதித் தருணத்தில் தங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவளிக்கும் உபாயத்தை கையாண்டு வருகின்றார் சம்பந்தன் அவர்கள்.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை புரிந்து வருகின்றனர்இஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை வாங்கிக்கொண்டு ஆதரவு அளித்தது மட்டுமன்றி ஐநா மனித உரிமை பேரவையில் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளை நீர்த்துப்போக செய்திருக்கின்றார்கள்.

பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமயக் குருமார் புத்திஜீவிகள் ஆகியோரின் முயற்சியால் ஜந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் 13 முக்கிய அடிப்படை கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து அதற்கு சரியான தீர்வை எந்த ஜனாதிபதி வேட்பாளர் தருகின்றாரோ அவருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்கபட்டது. ஆனால் தமிழரசுக்கட்சி இவற்றுக்கெல்லாம் சம்மதம் தெரிவித்துவிட்டு பின்பு மறைமுகமாக சஜித்பிரேமதாசாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக் கழக மாணவர்களும் புத்திஜீவிகளும் சமயத்தலைவர்களும் எடுத்த முயற்சியையும் அங்கு கையொப்பமிட்ட ஆவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு அவர்களை முட்டாள்கள் ஆக்கி  தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டி அரசியல் அரங்கில் இருந்து இவர்களை ஓரங்கட்டவேண்டும் என்பதுடன் சர்வதேசம் இவ்வாறன தமிழ் தலைமகளுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
READ MORE | comments

இனவாத சம்பவங்களின் போது சஜித் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியதற்கான ஆதாரங்களை முஸ்லிம்களால் முன்வைக்க முடியுமா? : அனுரகுமார சவால் !!



(நூருல் ஹுதா உமர்)

கேட்கப்படுகின்ற கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளிக்கின்ற அல்லது பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றன 82, 84 வயதை உடைய முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதை 65 ஆக கட்டுப்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொத்துவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்தார்.

இன்று மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலான பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு கட்சியில் தேர்தல் கேட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பின்னர்  கட்சி தாவுகின்ற கலாச்சாரம் இல்லாதொழிக்க படவேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில் எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கோரி நிற்கின்றார்கள் இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும் தான் கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார் அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தினால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மிகத் திறமையான பொலிஸ் திணைக்களம் எமது நாட்டில் இருக்கின்றது அவர்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாமல் இருப்பதற்கு பிரதான காரணம் ஊழலில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களுமே. வசீம் தாஜுதீனின் கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட ஆகியோரின் கொலை பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பிரதானமான காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் நீதியை நிலைநாட்ட முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன். எமக்கு தேவையானது எல்லாம் நிம்மதியாக வாழக்கூடிய நமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அதற்காகவே தான் நான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னர் கண்டி திகன அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அல்லது ஊடகங்கள் முன்னிலையில் வாய்திறந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசி  இருக்கிறாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். அப்படி அவர் பேசி இருப்பதற்கான ஆதாரத்தை உங்களிடம் இருந்தால் சமர்ப்பிக்க முடியுமா என்று சவால் விடுக்கின்றேன் என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.






UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2019

Thursday, October 24, 2019



மட்/சிவாநந்த வித்தியாலயம்  தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2019
READ MORE | comments

பிச்சைக்காரனின் புண்ணை போல அவருக்கு நுரைச்சோலை வீட்டுத்திட்டம் : றிசாத்துக்கு பதிலளித்த அதா !!




( நூருல் ஹுதா உமர் )

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகலம் நீளம் கூட அமைச்சர் றிசாத்துக்கு தெரியாது. இதை தடுப்பது பற்றி நான் ஜனாதிபதி மைத்திரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. என்னுடை பிரதேச மக்களின் பிரச்சினை இது. எனது பிரதேச மக்கள் வாழவேண்டிய பூமி, அக்கரைப்பற்று பிரதேசத்தின் காணி அதனால் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகல,நீளம் அதாவுல்லாஹ்வாகிய எனக்கு தெரியும். அமைச்சர் றிஸாத்தின் சொந்த பிரதேச பிரச்சினைகளே அவருக்கு தெரியாது என முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார். 

கடந்தவாரம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் றிசாத், சவூதி அரேபிய நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாத நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க விடாமல் ஜனாதிபதியிடம் பேசி தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தடுப்பதாக குற்றம் சாட்டினார். 

நேற்று (23) இரவு நிந்தவூர் தனியார் உணவு விடுதியொன்றில் தேசிய காங்கிரஸினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களிடம் குறித்த குற்றசாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இப்ராஹிமும் அவருடைய மகன்மாரும் அமைச்சர் றிசாத் அவர்களுடனே தான் இருந்தார்கள். அவர்களையே அறியாத அவருக்கு அவர்களினால் இயக்கப்பட்ட செம்பு தொழிற்சாலையை அறியாத அவருக்கு நுரைசோலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிச்சைக்காரனின் புன்னைப்போல அவருக்கு இந்த பிரச்சினை இப்போது தலைக்கு வந்துள்ளது. 

தொடந்தும் நாங்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளை போல அல்லாது கடந்த காலங்களில் மஹிந்த அரசில் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் வடகிழக்கு பிரிப்பும், யுத்த முடிவும் நிறைவடைந்துள்ளது மீதமாக இருக்கும் சகல இலங்கை மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய யாப்பை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன வேட்பாளர் கோத்தாபாயவை ஆதரிக்கிறோம். 

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தியில் செத்து கிடப்பார் என்றோம் அது நடந்திருக்கிறது, வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்றோம் பிரிந்தது, உலகமே நம்பாத மஹிந்த-மைத்திரி இணைவை பற்றி பேசினோம். எங்களுக்கு தலைகழண்டுவிட்டது, பைத்தியம் பிடித்துவிட்டது
 இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றார்கள். காலம் அவர்களுக்கு பதிலளித்தது போல எங்களுடைய இப்போதைய கோரிக்கைகளும் வெல்லும் என்றார்.

 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
READ MORE | comments

ஐந்து கட்சி கூட்டுத் தீர்மானத்தை மீறும் தமிழரசுக் கட்சி

எதிர்வரும் நவம்பர் பதினாறாம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில்  தேர்தலில் போட்டியிடுகின்ற மூன்று முக்கிய வேட்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைளான அரசியல் தீர்வு,அரசியல் கைதிகள் விடுதலை,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உட்பட 13 தீர்மானங்களை ஜந்து கட்சிகளும் மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடைய தலைமையில்  முக்கிய தீர்மானங்களாக  நிறைவேற்றப்பட்டு இன்னும் சில நாட்களில் வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட இருக்கின்றது. 

இந் நிலையில் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறின கதையாக தமிழரசுக் கட்சினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட பதின்மூன்று கூட்டு தீர்மானங்களை நீர்த்துபோக செய்யும் வகையில் தன்னிச்சையாகவும் இரகசியமாகவும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கவேண்டும் என்று தேர்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.இவர்களின் இவ் நடவடிக்கையானது சம்பந்தன்,மாவைசேனாதிராசா போன்றவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலுமே நடைபெறுகின்றது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.  

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியதன் விளைவினால் தமிழ் மக்கள் இன்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள். 

காலத்தின் தேவையறிந்து தேசியத்தின்பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொது இணக்கப்பாட்டின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் இராஜதந்திரிகளிடமும் கையளிப்பதற்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் எடுத்த முயற்சி அளப்பரியது ஆகும். இவ் முயற்சிக்கு ஒட்டு மொத்த வட-கிழக்கு வாழ்  தமிழ் மக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கின்றது.ஆனால்  தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான இவ் நடவடிக்கையானது பல்கலைக்கழக மாணவர்களையும் புத்திஜீவிகளையும் செல்லாக் காசக்கி மறுபடியும் தமிழ் மக்களின்  தலையில் மண்ணை அள்ளி போடும் வேலையில் இறங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

ஜக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு பல்கலைக் கழக மாணவர்களினதும் சமயத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் ஏற்பாட்டில் ஜந்து கட்சிகளும் சேர்ந்து எடுத்த தீர்மானங்களிலிருந்து தமிழரசுக் கட்சியினர் விலகி கடந்த முறைபோன்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு திரைமறைவில் இவர்கள் செயற்பட்டால் இவ் கூட்டு அமைவதற்கு காரணமாகவிருந்தவர்கள் அடுத்துவரும் தேர்தல்களிற்கு முன்பாக இவர்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தவேண்டும். 

மேலும் ஐக்கியத்தின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என பல்கலைக் கழக மாணவர்கள்,சமயத்தலைவர்கள்,புத்திஜீவிகள் எடுத்த இவ் முயற்சி தொடரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களினது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
READ MORE | comments

புத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா,

புத்தளம் கல்வி வலய முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்  இஸட்.ஏ. சன்ஹிர் அவர்களை இதழாசிரியராகக்​ கொண்ட “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை (26/10/2019), காலை 9.00 மணிக்கு புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை இடம்பெறவுள்ள முதலாவது அமர்வில் வரவேற்புரை, தலைமையுரை , வாழ்த்துரை, வித்தியாலயத்தின் மறுபக்கம் ஆகிய நிகழ்வுகளும் காலை 10.30 முதல் பி.ப 1.30 மணி வரை இடம்பெறவுள்ள இரண்டாவது அமர்வில்  புத்தளத்தில் கல்வி – அன்று,    புத்தளத்தில் கல்வி – இன்று, புத்தளத்தில் கல்வி அபிவிருத்தி, எமது வித்தியாலயங்கள், நுழைவாயில் – பழமையும் புதுமையும் என்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் இடம்பெறுவதுடன் இதழாசிரியர் இதயத்திலிருந்து, பிரதம அதிதி உரை ஆகியனவும் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி U.M.B. ஜெயந்திலா,  விசேட அதிதியாக ஓய்வுபெற்ற மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு J.G.N. திலகரட்ன மற்றும் சிறப்பு அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு W.P.S.K. விஜேசிங்ஹ  ஆகியோர் கலந்து சிறப்பிப்பதுடன் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையினரிடம் அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்களின் பிரதான அடிப்படை கோரிக்கைகள்  தொடர்பாக எவரும் வாய்திறந்ததாக தெரியவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் பெரிதாக பேசப்படவில்லையென்றாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதித் தேர்தலை பெரியவிடயமாக பார்க்கின்றார்கள். கடந்தகாலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம் காற்றில் பறக்கவிடப்பட்டதே வரலாறு இம்முறை ஒன்றும் புதிதாக நடந்துவிடப்போவதில்லை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடக இருக்கின்றது.

இலங்கையில் ஜனாதிபதியாக வந்தவர்கள் எல்லோரும் ஒரு இனம் சார்ந்த ஜனாதிபதியாகவே இருந்து வந்தார்கள் இனியும் அவ்வாறுதான் இருக்கப்போகின்றார்கள் இது எழுதப்படாத விதி.பெரும்பாண்மை மக்களை பகைத்து எந்த ஜனாதிபதி வேட்பாளர்களாலும் இலங்கையில் ஆட்சி செய்யமுடியாது.

இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு எவ்வாறு அமையும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரு பக்கத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை 13 கோரிக்கைகளாக முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் அதை சமர்ப்பித்து அவர்களின் வழங்கும் பதிலை வைத்தே முடிவெடுப்போம் என கூறுகின்றனர்.மறுபுறத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு தமிழர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் இன்னொரு சாரார் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர்.

இந்நிலைகளை நோக்கும்போது தமிழ் மக்களிற்கான தலைமைத்துத்திற்கு இன்னும் வெற்றிடம் இருப்பதுபோலவே தோன்றுகின்றது.அரசியல் கட்சி என்பது மக்களுக்கு பின்னால் செல்வதல்ல மக்களை வழிநடத்துவதே அரசியல் கட்சிக்குரிய வரைவிலக்கணமாகும்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கையை ஆளுகின்ற ஜனாதிபதியால் மட்டும் முடிகின்ற காரியமல்ல இலங்கையின் ஜனாதிபதியையும் அரசியல்வாதிகளையும் தீர்மானிப்பது வெளிநாட்டு தூதுவராலயங்களே என்பது நிதர்சனமான உன்மை.தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைக்காக எந்த நாடும் முண்டி அடித்துக்கொண்டு உதவப்போவதில்லை தங்கள் நாட்டின் நலன் இல்லாத எந்தவிடயங்களிலும் உலகநாடுகள் தலையிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தமிழரின் உரிமைக்காக உலக வல்லரசு சக்திகளை எதிர்த்து தமிழர்கள் போரடியபோது அவை எமக்கு எதிராக திரும்பி எம்மையே அழித்தது என்பது வரலாறு அந்தவகையில் சர்வதேச சக்திகளிடமிருந்துதான் எமக்கு தீர்வு வரும்மென்பதும் இலவுகாத்த கிளியின் செயற்பாட்டுக்கு ஒப்பாகும்.சர்வதேசத்தின் நலனும் தமிழ் மக்களின் நலனும் எப்பொழு ஒரு புள்ளியில் சந்திக்கின்றதோ அப்போது தான் எமக்கான ஒரு தீர்வு கிடைக்கும் அதுவரைக்கும் தீர்வு என்பது வெறும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களிலுமே காணப்படும்.

ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரை இலங்கை மக்கள் என்பதை தாண்டி சிங்கள மக்களுக்கான தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. இதில் தமிழ் மக்களை வெறும் வாக்குகளின் எண்ணிக்கைகளாவே அவர்களால் உணரப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு இவ் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பரசீலிக்கப்படும் என்று கூறும் எதாவது ஒரு கட்சி சார்ந்து வாக்களிக்கப் போகின்றார்களா? அல்லது இத் தேர்தலின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வும் கிட்டபோவதில்லை என்று தேர்தலை புறக்கணிக்கப் போகின்றார்களா? அல்லது தமிழரின் பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்து சொல்லப்போகின்றோம் என தமிழர் ஒரு வருக்கு வாக்களிக்கப் போகின்றார்களா? அல்லது மூன்றாவது ஏதும் அதிர்ச்சிகர முடிவை தமிழர்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  
READ MORE | comments

இலங்கையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து ஒருவர்பலி 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

மின்னேரியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது



கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |