Home » » கிளிநொச்சியில் 16வயது மாணவியைக் காணவில்லை! – தொடர் சம்பவங்களால் மக்கள் பதற்றம்

கிளிநொச்சியில் 16வயது மாணவியைக் காணவில்லை! – தொடர் சம்பவங்களால் மக்கள் பதற்றம்

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல்போன சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவிதத் தகவல்களும் இல்லாத நிலையில் பெற்றோர் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டிருந்ததுடன், அந்த படுகொலையானது அங்கு பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் 12 வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.வடக்கில் சிறுமிகள் மீதான குறிப்பாக, பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், கொலைகள் என்பன அங்கு பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கின் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க கல்வி அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன் கடந்த 14 நாட்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது காணாமல் போயுள்ள 16 வயது மாணவியான மணியம் விதுஸாவிற்கு என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியாத மனநிலையில் கிளிநொச்சி மக்கள் திகைத்துப் போயுள்ளனர்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |