திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களில் நீண்ட காலம் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர்களுக்கு எதிர்வரும் 01ஆம் திகதி முதல் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முஸ்ஸில் தெரிவித்தார்.
இந்த இடம்மாற்றங்கள் அனைத்தையும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார வழங்கியுள்ளதாகவும் தொடர்ச்சியாக 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றியோருக்கு இவ்வாறான இடமாற்றங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
0 Comments