ஆட்டோவில் பயணம்செய்த கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சாரதியின் மூக்கை அறுத்த பயணி - சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தில் சம்பவம் !

Friday, December 31, 2021

 


அம்பாரை நகரிலிருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஆட்டோவில் வருகை தந்த பயணி ஒருவர் ஆட்டோ கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக  ஆட்டோ சாரதியின் மூக்கை  அறுத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது

நேற்று மாலை அம்பாறை நகரில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தருவதற்காக  போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் இல்லாத நிலையில் அம்பாறை நகரில் தரித்திருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த இளைஞன் ஒருவன் சாய்ந்தமருது வொலிவேரியன் என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இறங்கி விட்டு ஆட்டோக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல  முனைந்துள்ளார்

இதன்போது  மாற்றுமத சகோதரரான ஆட்டோ சாரதி குறித்த இளைஞன் பிடித்து ஆட்டோ கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட போது, அவ்விளைஞன் தனது பணப்பையில் இருந்த சிறிய கத்தியை எடுத்து ஆட்டோ சாரதியின் மூக்கை அறுத்து விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார்

இதனை அடுத்து முக்கறுந்த நிலையில் செய்வதறியாது ஓட்டம் பிடித்த ஆட்டோ சாரதியை சாய்ந்தமருது பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த மக்கள் காப்பாற்றி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன்  மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார் 

இது தொடர்பில் சாய்ந்தமருது பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

READ MORE | comments

14 எண்ணெய் குதங்களை மேலும் 50 வருடங்களுக்கு இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கத் தீர்மானம்

 


திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதில் CPC 51% பங்குகளையும், LIOC 49% பங்குகளையும் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 24 எண்ணெய் குதங்கள் சி.பீ.சி.யின் கீழ் பராமரிக்கப்படும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பை மடக்கி பிடித்த மக்கள்!

 


திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.


நேற்று (30) அதிகாலை இந்த பாம்பு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் இந்த மலைப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை அப்பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரோன்! இலங்கை அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள்

 


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரோன் வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய தொற்றாளர்கள் 41 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தினை சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.

READ MORE | comments

Thursday, December 30, 2021

 பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதனால், நாடு எரிபொருள் நெருக்கடியை சந்தித்தாலும், மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும்.

பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையில் வறட்சியான காலநிலை பதிவாகும். அதுவரை மின்வெட்டு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

79 வயதிலும் திருந்தாத திருடன்

 


சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா தும்பிரியபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, இதற்கு முன்னர் தான் திருடிய 17 மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் 16 வருட சிறைதண்டனை அனுபவித்து வந்துள்ளதோடு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திருட்டுச் சம்பங்களில் இவர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
READ MORE | comments

இலங்கைப் பெண்களை குறி வைக்கும் சீனப்பிரஜைகள்- அம்பலமான மோசடி!


இலங்கையில் திட்டங்களை செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவதும் தெரியவந்துள்ளது.

READ MORE | comments

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Wednesday, December 29, 2021

 


இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் கிழக்கு கடலில் 4.3 ரிச்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படும் அபாயம் கிடையாது என நிலையம் தெரிவித்துள்ளது.   

READ MORE | comments

2022இல் ஆவது வாகன விலை குறையுமா? வெளியான புதிய அறிவிப்பு..!

 


உலகின் பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அதிகளவில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை உயர்ந்துள்ளது.

2022 க்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை குறையக்கூடும் என்று காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.

ஆனால் அதுவரை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மேலும் உயரலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கார் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பிற நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தியதால் புதிய காரின் விலையும் உயர்ந்துள்ளது.

சமீபத்திய கார் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக காக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கூறுகிறது.

இதேவேளை, இலங்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

READ MORE | comments

போதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

 


கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையில் குற்றம் உறுதியானமையால் இருவரும் மறு அறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கையின் மொத்தக் கடனையும் நான் அடைக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுமா ஐக்கிய நாடுகள் சபை? போராட்டத்தில் இறங்கிய தனிநபர்

 


இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து குறித்த நபர் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Gallery Gallery
READ MORE | comments

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

 


அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில் அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அதற்கமைவாக அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

READ MORE | comments

2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு?

Tuesday, December 28, 2021

 

    

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.


ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், மின்சார சபைக்கு பிரச்சினை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரான எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சார சபை பெற முடியாவிட்டால், மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஒன்பது வயது சிறுவனின் உயிரை பறித்த பந்து!

 


மெதிரிகிரிய, குசும்பொகுன பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் குசும்பொகுண ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் எச்.கே சமந்த கவிந்து சந்தருவன் குமார என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. பந்தை எடுத்து தருமாறு பலமுறை கேட்டும் தந்தை மறந்துள்ளாா்.

தாய் தனது இளைய சகோதரனுடன் அயல் வீட்டிற்கு சென்றிருந்த போது கிணற்றிலிருந்து பந்தை எடுக்க முற்பட்ட போதே சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவன் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் மெதிரிகிரிய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததன் பின்னா் பல்வேறு இடங்களில் பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனா். இருந்தபோதும் சிறுவன் கிடைக்கிவல்லை.

கிணற்றில் விழுந்ததாக கூறப்படும் பந்து முற்றத்தில் காணப்பட்டுள்ளதுடன், இரவு 7.00 மணியளவில் தோட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மெதிரிகிரிய பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.
READ MORE | comments

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

 


சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் பாதுகாப்புச் சின்னம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதனைத் தம்வசம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாணயத்தாளை கொண்டுவந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், பணத்தாளின் மதிப்பு மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

அல்லது குற்றப் புலனாய்வு துறையின் போலி நாணயப் பிரிவினரின் 0112422176 மற்றும் 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு காவல்துறை மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

READ MORE | comments

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – கைதான பொலிஸ் உத்தியோகத்தரிடம் தொடர் விசாரணை!

Monday, December 27, 2021

 


திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது தாயாரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்வதற்கு விடுமுறை கிடைக்கப்பெறாமை காரணமாக, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகநபர் விசாரணைகளில் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இறுதியாக ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் அவர் விடுமுறை பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் வாக்குமூலம்குறித்து பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

விடாது துரத்தும் சீனா! திணறும் சிறிலங்கா

 


இலங்கையின் நிறுவனங்கள் வேண்டும் என்றே மேற்கொண்ட செயல் காரணமாக தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் ஷீவின் பயோடெக் (Seawin biotech) நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் ஹெனா சோங்க் (Hena Chong) தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கி இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்ததையடுத்தே இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா அமைச்சரவையில் தமது நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை இணங்கினாலும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் நஷ்டத்திற்காக சிறிலங்காவிடம் கட்டாயம் இழப்பீடு பெற்றே தீர்வோம் என சீனாவின் சேதனப் பசளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மத்தியஸ்த நீதிமன்றத்தின் ஊடாக சிறிலங்காவிடம் கட்டாயம் இழப்பீடு பெறப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. சீன நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நேற்று இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு சேதனப் பசளையை வழங்கும் கேள்வி மனுக்கு அமைய தாம் 100 வீதம் நேர்மையான விலையை வழங்கியதாகவும் சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

பஸ் கட்டணங்களும் அதிரடியாக அதிகரிப்பு

Sunday, December 26, 2021


 எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த பஸ் கட்டணங்கள் அமையுமென அவர் அறிவித்துள்ளார்.

பஸ்கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் நாடளாவிய ரீதியில் பணிநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

"குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு" கண்ணீர் விட்டழுத மக்கள்

 


அரசாங்கம் இன்று "உழவுப் போர்" பற்றி பேசினாலும், நாட்டில் “பஞ்ச யுத்தம்” ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையான முடிவுகளின் காரணமாக நாட்டின் விவசாயத்தை அழித்த அரசாங்கம், வீடு வீடாக எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் நாடாக இந் நாட்டை மாறியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள சந்தைப்பகுதிகளுக்குச் சென்று 'மனிதாபிமானத்தின் பயணம்' எனும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததோடு இந் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் மக்களுக்கு நிவாரணப் பொதி கொடுப்போம் என்று தம்பட்டம் அடித்தாலும், மனச்சோர்வு, பணவீக்கம், துக்கம், கண்ணீர் மற்றும் வலி ஆகியவை மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரே நிவாரணப் பொதி.

17 வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தமாக வந்த சுனாமி அனர்த்தம் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்து விட்டது. தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தத்திற்குப் பதிலாக, தாங்களே உருவாக்கிய பேரழிவைக் கொண்டு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. 

அன்று இயற்கை சுனாமியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றும், இன்று 'பொஹொட்டு சுனாமி'யால் முழு நாட்டு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடந்து கொண்டிருப்பது வெள்ளை டை கொள்ளை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தமக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ மக்களுடனான டீல் மட்டுமே உள்ள என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நகரத்திற்கும் சந்தைக்கும் வந்திருந்த மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட "குடும்ப ஆட்சியே, நாட்டின் அழிவு" என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தையும் அவர்களிடையே விநியோகித்தார்.


Gallery Gallery Gallery
READ MORE | comments

MBBS பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்த தணிகாசலம் தர்ஷிகா என்பவர் சாணக்கியன் MP அவர்களால் கௌரவிக்கப்பட்டார்...

 


கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா என்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவி MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.





கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து அவரை பாராட்டி கௌரவப்படுதினோம்.

Today I had the opportunity to congratulate Dr.Thanikasalam Tharshika from Alayadivembu, Ampara. She received 13 gold medals from the University of Colombo. Proud moment for us in the Eastern Province.


#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka

READ MORE | comments

பாண்டிருப்பை புரட்டிப்போட்ட 2004 ஆழிப்பேரலை! (17 வருட நினைவலைகள்)

 


(செ.துஜியந்தன்- அன்றுகிராமத்தின் அழிவை பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய பதிவு) 

இயற்கை எழில் கொஞ்சும் சிற்றூர்

இறையருள் விஞ்சி நிற்கும் திருவூர்

இதிகாசம் இசைக்கின்ற நல்லூர்

இதுவே எங்கள் பாண்டியூர்'

கடந்த 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்ட்டிருந்தன.

ஆழிப்பேரலையினால் கல்முனை தமிழ்ப்பிரிவில் 1364 பேர் உயிரிழந்திருந்தனர். 1050 பேர் காயப்பட்டிருந்தனர். 6380 குடும்பங்களைச் சேர்ந்த 24151 பேர் பாதிக்கப்பட்டும் 3667 வீடுகள் சேதமடைந்திருந்தன. அன்று 5595 குடும்பங்கள் முற்றாக இடம்பெயர்ந்து 19909 பேர் 15 இடைத்தங்கள் முகாமில் தங்கியிருந்தனர். அந்தளவிற்க்கு ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியிருந்தது. 

இதில் பாண்டிருப்புக் கிராமம் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப் பிரிவில் பாண்டிருப்பு கிராமம் அமைந்துள்ளது. கிழக்கே கடல் வளம், மேற்கே வயல்வளம், எங்கும் வற்றாத நீர்வளம், வடக்கும், தெற்கும் நகர்வளம் சூழ நடுவில் அமைந்திருக்கின்றது அழகிய வனப்பு மிக்க பண்பாட்டுக்குப் பேர்போன கிராமம் பாண்டிருப்பு. 

தன் கஷ்டங்களை தன்னோடு தாங்கிப்பிடித்து தலைநிமிர்ந்து நடக்கும் தைரியசாலிகளும், கற்றோரும், பாமரரும் நாகரிகத்தோடும் நிதானத்தோடும் சிந்தித்து செயற்படும் நல் உள்ளங்கள் வாழுகின்ற சிறப்பான சிற்றூர் பாண்டிருப்பு. 

ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு. பத்தினித்தாய் பாஞ்சாலிக்கும், பாண்டவர்களுக்கும் திரௌபதை அம்மன் ஆலயம் அமைத்து பண்டாரப் பொட்டிட்டு பாரம்பரியங்களை பேணுகின்ற ஊராகவும் பாண்டிருப்பு இருக்கின்றது. 

நெருக்கமான வீடுகளும், உருக்கமான உறவுகளுமாய் ஊரவர்கள் வாழ்ந்தார்கள். விசாயம், மீன்பிடி, வியாபாரம், குடிசைக்கைத் தொழில் ஆகியவற்றையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் நித்தமும் அரங்கேறும் இசைத்தமிழ் ஊர் என்றும் பாண்டிருப்பு அழைக்கப்படுகின்றது. 

இயற்கையின் வனப்பில் இரண்டறக்கலந்து வாழக்கையின் வசந்தத்தை அனுபவித்துவந்த இம் மக்களின் வாழ்வை 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை புரட்டிப்போட்டது. பொங்கிவந்த கடலலையில் அலை அலையாய் மக்கள் மாண்டனர். இத் துயரச் சம்பவத்தின் பின்பு பாண்டிருப்பின் இயற்கை வளம் சிதைந்து போனது. ஏற்கனவே இப்பகுதியில்  1990 இல் ஏற்பட்ட வன்முறைகளினால் அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த கிராமமாகவும், அதிகமான யுத்த விதவைகளைக் கொண்ட கிராமமாகவும் பாண்டிருப்புள்ளது. இங்கு தான் முதன் முதலில் யுத்த்த்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1990-06-11 ஆம் திகதியன்று இக்கிராமத்தின் பிரபலமான வைத்தியர் சண்முகநாதன் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் பிடிக்கப்பட்டு உயிரிழந்தும், காணாமல் போயியும் இருந்தனர்

அதன் பிற்பாடு 2004 ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் 486 பேர் உயிரிழந்திருந்தனர். 2004 இல் ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியதில் பாண்டிருப்புக்கிராமத்தில் 486 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போயிருந்தனர். 119பேர் காயமடைந்தனர். 2726 குடும்பங்களைச் சேர்ந்த 8969 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1744 குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்தனர். 1203 வீடுகள் சேதமடைந்திருந்தன. இதில் 955 வீடுகள் முழுமையாகவும், 248 வீடுகள் பகுதியளவிலும்சேதமடைந்திருந்தன. அத்துடன் இரு இந்து ஆலயங்கள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம், ஒரு பாடசாலை, இரு முன்பள்ளிகள், ஐந்து பொதுக்கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்திருந்தன. 


ஆழிப்பேரலையினால் தமது வாழ்வாதாரத்தை 2428 பேர் இழந்திருந்தனர். இதில் கூலித்தொழிலாளர்கள் 2019 பேர், வியாபாரம் 125 பேர், விவசாயம் 19 பேர், மீன்பிடி 13 பேர், தனியார் நிறுவன ஊழயர்கள் 61 பேர், அரச உத்தியோகஸ்தர்கள் 191 பேர் என குடும்பத்தை பொருளாதார ரீதியில் தாங்கிப்பிடித்தவர்களின் வாழ்வாதாரம் முற்றாக இழக்கப்பட்டிருந்தது. 

இன்று ஆழிப்பேரலை ஏற்பட்டு 17 வருடங்கள் ஆகின்றபோதிலும் அது ஏற்படுத்திச் சென்ற வலிகளும், வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை. பாண்டிருப்பில் ஆழிப்பேரலையில் அள்ளுண்டு போனவர்களின் நினைவாக பாண்டிருப்பு சவக்காலை வீதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத் தூபிதான் உயரமான நினைவுத் தூபியாக இருக்கின்றது. டிசம்பர் 26 இல் இவ் நினைவுத் தூபிக்கு முன்பும் கடலில் மலர் தூவியும் மக்கள் உயிரிழந்த உறவினர்களின் நினைவாக அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

= மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் 

பாண்டிருப்பில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேட்டுவட்டைப் பகுதியில் வீட்டுத்திட்டம் ஒன்றை அமைத்து வசிக்கின்றனர். இவ் வீட்டுத்திட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் நிலவுகின்றன. இன்னும் இங்கு கட்டிமுடிக்கப்படாத வீடுகள் இருக்கின்றன. இவர்களக்கான வீட்டுத்திட்டத்தை அமைத்த என்.சீ.எம். லங்கா எனும் நிறுவனம் அம் மக்களின் வீடுகளை முழுமையாக நிறைவு செய்து கொடுக்காத நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளனர். 

இதனால் பாதிக்கப்ட்ட மக்களே தங்களது உடமைகளை விற்று வீடுகளை நிறைவு செய்திருந்தனர். இன்று அங்குள்ள வீடுகள் வெடிப்பு ஏற்பட்டு நிலம் தாழ் இறங்கிய நிலையிலுள்ளன. மேற்கூரைகள் கறையான் அரித்து இத்துப்போன நிலையிலும் உள்ளன. இவ் வீட்டுத்திட்டத்தை ஒப்பந்தத்திற்க்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள் தரமற்ற கட்டிடப்பொருட்களையும், தளபாடங்களையும் கொள்வனவு செய்து அவர்கள் லாபம் சம்பாதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையே வீடுகள் தரம் அற்றதாக அமையாகக் காரணமாகும் எனத்தெரிவிக்கின்றனர். 

அன்றை நிலையில் எப்படியோ தமக்கொரு வீடு கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலே மக்கள் இருந்தனர். இதனை சாதகமாகப்பயன்படுத்திய பல ஒப்பந்தக்காரர்கள் மக்களை ஏமாற்றி தரமற்ற கட்டிடப்பொருட்களை பெற்று வீடுகளை நிர்மாணித்தமை துரதிஷ்ட சம்பவமாகும். இவ் வீட்டுத்திட்டத்தில் வீதிக்கட்டமைப்பு இன்னும் முழுமையாக பூர்திசெய்து கொடுக்கப்படாதுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளத்தினால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவர்களை வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க குடியிருப்பு மனையைச் சுற்றி அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு மண் போட்டு நிலம் உயர்த்தப்படவேண்டும். அத்துடன் இம் மக்கள் தங்களது பொதுத்தேவைகளை நிறைவு செய்வதற்கென ஒரு பொதுக்கட்டிடம் இல்லாதுள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு இடத்தில் பல்தேவைக் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றனர்.

யுத்தத்தாலும் இயற்கை சீற்றத்தாலும் நித்தம் அழிவுகளைச் சந்தித்த கிராமமாக பாண்டிருப்புக் கிராமம் இருக்கின்றது. எத்தனை அழிவுகள் ஏற்பட்டபோதிலும் பாண்டிருப்புக் கிராமம் பண்பாட்டையும், மரபுகளையும் இன்றும் கட்டிக்காக்கும் அழகியதொரு கிராமமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

( அகரம் செ.துஜியந்தன்)

READ MORE | comments

12 வயது மாணவரொருவரை ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவர் கைது


 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை அவரது கால்களைப் பிடித்து பா லத்திலிருந்து ஆற்றில் வீசிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரைக் கொடக்கவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 
கல்வி நடவடிக்கைக்காக சென்றுக்கொண்டிருந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மா ணவர் ஒருவரே இவ்வாறு ஆற்றில் வீசப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட பிரதேச மக்கள் குறித்த மாணவனை மீட்டு வைத்தியசாலை யில் அனுமதித்துள்ளனர். சந்தேக நபரான பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
READ MORE | comments

துப்பாக்கி பிரயோகம்

 


அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தார். அவர் பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது
READ MORE | comments

மியன்மாரில் அரங்கேறிய கொடூர செயல்! 30 அப்பாவி மக்களை சுட்டுகொன்று எரித்த இராணுவத்தினர்

 


மியன்மாரில் அப்பாவி மக்களை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் சமீப காலமாக இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மியன்மாரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றனர்.

இதன்போது அவர்களை இராணுவ வீரர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கைது செய்த 30 பேரின் கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றனர். அதனை தொடர்ந்து அவர்களின் உடல்களில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர் என தெரிவித்துள்ளார்

READ MORE | comments

பெண் கான்ஸ்டபிலுக்கு பாலியல் தொல்லை பொலிஸ் OIC கைது

Saturday, December 25, 2021

 


கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நேற்று (24) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட OIC தற்போது மாத்தறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

READ MORE | comments

கொலைக்கு பின்னரும் “தாய் பாசத்தை மறக்காத“ பொலிஸ் அலுவலர்

 


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸார் பலியானதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேலும் இரு பொலிஸார் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தமிழர், முஸ்லிம் என இரு பொலிஸாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சார்ஜன் தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி  இரு துப்பாக்கி மற்றும் ரவை குண்டுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயை பார்த்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன் பொலிஸ் நிலையத்தில் முன்காவல் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவரின் துப்பாக்கியை பறித்தே ஏனைய உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

இவர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலங்கள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.   

READ MORE | comments

பிள்ளையார் ஆலயத்தில் குடியேறிய புத்தர்!! தமிழர் பகுதியில் திடீர் பதற்றம்

 


திருகோணமலை - மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், இன்று குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்து ஆலயத்தில் இனந்தெரியாத விசமிகளால் நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அச் சிலையானது மூதூர் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது மூதூர் கொட்டியாராம விகாராதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது சற்று பதற்ற நிலையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமானது பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை - மட்டக்களப்பு வீதியூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற ஆலயமென்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்விடத்தில் தொடர்ந்தும் இந்துக் குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலையானது யாரால் வைக்கப்பட்டதென்று தெரியாது. இது தொடர்பாக விசாணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

READ MORE | comments

பால்மா” விலை அதிகரிப்பு உறுதியானது!

 


உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.


மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிவர்வத்தியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.
READ MORE | comments

இரத்த ஆறான பொலிஸ் நிலையம்..! நடந்தது என்ன? முழு விபரம்

 


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் OIC உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (24) இரவு 10 மற்றும் 11 க்கு இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் நிலைய பிரதான நுழைவாயிலில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கியால் பொலிஸ் நிலையத்திற்குள் இருந்த அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்காக வெளியேறிய OIC ஜீப்பில் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் ஜீப் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த OIC உட்பட நான்கு அதிகாரிகள் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொரு அதிகாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜென்ட், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான அத்திமலை பிரதேசத்திற்கு தனது தனிப்பட்ட கெப் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.






பின்னர் அவர் இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 தோட்டாக்களுடன் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, விடுமுறை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த குறித்த சார்ஜன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தற்போது விசேட விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

READ MORE | comments

மனைவியின் தகாத உறவு அம்பலம்; மனைவி தாக்கி கணவன் பலி !

 


நுவரெலியா - பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்லால் தாக்கப்பட்டு காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் உள்ள தகாத உறவு அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் கணவரை மனைவி தாங்கி கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீதவானின் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்றுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் சடலம் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
READ MORE | comments

அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் Www.kurunews.com குழுமத்தினர்....

 


அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் Www.kurunews.com குழுமத்தினர்....

READ MORE | comments

Challenge wins college கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கல்முனை சலஞ் வின்( challenge wins college )கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் தவிசாளர் முஸ்தபா முபாரக் தலைமையில் " தரமான கல்வி தரமான எதிர்காலம் "எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க வின் இணைப்பாளர் நிப்ராஸ் யூசுப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டம் (   ICT )பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
READ MORE | comments

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூட்டில் பொலிஸார் #மூவர் #பலி ! OIC உட்பட மூவர் வைத்தியசாலையில்

 


திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிஸ்  உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததுடன் மேலும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10.55 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்து கொண்டு நிலையத்திலிருந்த நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தனது வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வேறு நிலையங்களிலிருந்து பொலிஸார் , இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர் .


பின்னர் படையினருடன் இளைஞர்களும் இனைந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர் .

மேலதிக சிகிச்சைக்காக நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் , சியம்பிலாந்துவ சேர்ந்த துஷார, மற்றும் பிபில சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களே இன்றைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்   உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜெண்ட் , இரண்டு T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைகள் என்பவற்றுடன் ஆயித்திமலை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

கனடாவில் நிரந்தர குடியுரிமை! - வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Friday, December 24, 2021

 


அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் தற்காலிக அடிப்படையில் நாட்டில் வசித்து வருவதாக குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்தார்.

கனடா தற்போது தனது மக்கள் தொகையை அதிகரிக்கவும், அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் திறமையான பணியாளர்களை நியமித்து வருகிறது.

கனடா நாட்டில் வயது முதிர்ந்த மக்கள்தொகை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடு என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது ஒரு நூற்றாண்டில் இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவிட் தொற்றுநோய் காரணமாக, 2020 இல் 185,000 பேருக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. இது 2019 உடன் ஒப்பிடும்போது 45% குறைவு.

தற்போது நாட்டின் மக்கள்தொகை சுமார் 38 மில்லியனாக உள்ளது, மேலும் அதை ஆண்டுதோறும் 1% அதிகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 411,000 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |