உலகம் முழுவதும் லிங்கா படம் 5000 தியேட்டர்களில் ரிலீஸ்

Sunday, November 30, 2014

லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12–ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாளையும், லிங்கா படம் ரிலீசையும் ஒன்றாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
லிங்கா ரிலீசுக்கு முன்பு பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷிடம் இருந்து படத்தின் மொத்த உரிமையும் ஈராஸ் பட நிறுவனம் வாங்கி விட்டது. ரூ.165 கோடிக்கு கைமாறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன் பிறகு செட்டிலைட் தியேட்டர் உரிமைகள், வெளிநாட்டுக்கான உரிமைகள் என ரூ.200 கோடி வரை வியாபாராமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை ரூ.70 கோடி கொடுத்து வேந்தர் மூவிஸ் வாங்கி இருக்கிறது. ரஜினியின் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு போனது இல்லை என்கின்றனர்.
வேந்தர் மூவிஸ் ஏற்கனவே தலைவா, எதிர்நீச்சல், பாண்டிய நாடு, பூஜை போன்ற படங்களை வாங்கி வெளியிட்டு இருக்கிறது. லிங்கா படம் உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதுவும் சாதனையாக கருதப்படுகிறது.
இதுவரை ரஜினி படங்கள் எதுவும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டது இல்லை.
தமிழகத்தில் மட்டும் 700 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. இதுவரை 650 தியேட்டர்கள் ‘லிங்கா’ படத்துக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதி 50 தியேட்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 65 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்களில் திரையிடுகின்றன. அங்கும் இவ்வளவு தியேட்டர்களில் வேறு எந்த படமும் திரையிடப்பட்டது இல்லை.
லிங்கா படத்தில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அணை தகராறை மைய கருவாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘யு’ சான்று அளித்துள்ளனர்.
READ MORE | comments

ஆலையடிவேம்பில் இரத்ததான நிகழ்வு

சத்திய சாயி பாபாவின் 89வது ஜனனதினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட  இரத்ததான நிகழ்வு நேற்றையதினம் (29)சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.

கிழக்கு பிராந்திய  சத்திய சாயி நிலையங்களினால்   அம்பாரை மாவட்டத்திற் குட்பட்ட காரைதீவு திருக்கோவில் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு சாயி நிலையங்களின் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு சத்திய சாயி மண்டபத்தில் இடம்பெற்றது.




READ MORE | comments

ஹொஸ்னி முபாரக் விடுதலை

அரபு வசந்தத்தின் போது 2011இல் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொன்றமை குறித்த வழக்கின் மீள் விசாரணையில் இருந்து எகிப்திய நீதிமன்றம் ஒன்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்கியிருக்கிறது.
முபாரக்கின் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் மீதான வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முபாரக்குக்கு நீதிமன்றம் ஒன்று ஆயுள் சிறை விதித்தது.
ஆனால், வழக்கு நடத்தப்பட்ட முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அது மீள்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
முபாரக் மற்றும் அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊழல் குறித்த இன்னுமொரு வழக்கில் இன்னும் சில மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருப்பதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக மாட்டார்.
READ MORE | comments

ஆலையடிவேம்பு பிரதேசசபை ஆளும் தமிழ் சேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு தாவல்

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் ஆளும் தமிழ் சேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கட்சி தாவியுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2015ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் அண்மையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தியாகராஜா எதிர் கட்சியான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கட்சிதாவி தனது ஆதரவினை தொடர்து ஜனாதிபதியின் தலைமையிலான கட்சிக்கு வழங்கவுள்ளதாக பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் ரகுபதி தெரிவித்தார்

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்வில் ஐவரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்வில் இருவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்வில் ஒருவரும் மேலும் சுயேட்சை குழு சார்வில் ஒருவருமாக  மொத்தம் 09 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இத்தறுவாயில் ஆளும்தரப்பு உருப்பினர் ஒருவரின் மாற்றம் சபையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமேன எதிர்பார்க்கப்படுகின்றது
READ MORE | comments

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. HMM Harees

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தலைமையிலான குழுவுக்கும், ஜனாதிபதி தலைமையிலான அரச குழுவுக்குமிடையில் நேற்று (29) இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை.
இன்று காலையில் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்த வேலை, நேற்று (29) இரவு 7.30 மணிக்கு எனது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே மேற்படி ஜனாதிபதியுடனான சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தலைவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் அரசின் முக்கியஸ்தர்களுடன் எமது சமூகத்தின் கோரிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினேன். அதில் குறிப்பாக கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுவது போல் மேலதிக அரசாங்க அதிபரை நியமித்து விட்டு முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக காட்ட முட்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தலைவரிடம் எடுத்துக் கூறினேன்.
இவ்வாறான சூழ்நிலையில் இன்றைய ஜனாதிபதியுனான சந்திப்பில் கலந்து கொள்ள எனது மனச்சாட்சிக்கு உருத்தலாக உள்ளது. எனவே என்னை வற்புறுத்த வேண்டாம் என தலைவரிடம் வேண்டினேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்; தொடர்பாக கட்சி இன்னும் ஆழமாக சிந்திப்பதுடன் மக்களின் அபிப்பிராயங்களை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும் என தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மேலும் எனது முகநூலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முகநூல் நண்பர்களின் அபிப்பிராயங்களை கோரியிருந்தேன். அதனடிப்படையில் 300க்கும் மேற்பட்டவர்கள் எனது முகநூலில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் இத்தேர்தல் தொடர்பிலான நிலைப்பாட்டினையும் தலைவருக்கு எடுத்துக் கூறினேன்.
மேலும் இது தொடர்பான மேலதிக விடயங்களை எனது முகநூல் நண்பர்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வேன்.
READ MORE | comments

முன்பள்ளிச் சிறார்களுக்கான கலை விழாவில் மாஸ்ரர் சிவலிங்கம் Viedio Photos


சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழாவில் சிறுவர்களால் மாமா என அழைக்கப்படும் மாஸ்ரர் சிவலிங்கம் கதை சொன்னார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனையிலுள்ள மியானி மண்டபத்தில் நடைபெற்றது.

READ MORE | comments

மகிந்த அரசாங்கத்தினை ஒருபோதும் உடைக்கமுடியாது – சந்திரகாந்தன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் உடைக்கமுடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்னும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டுச்சென்றாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்கட்சிகளால் இல்லாமல் செய்யமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிடத்தின் திறப்பு விழா  நடைபெற்றது.2


மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் செவ்வேள்,பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மகிந்த சிந்தனையின் கீழான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடுசெய்த பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த பல்தேவைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக ஒன்றுகூடுவதற்கான மண்டபம் இல்லாமையினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.இந்த பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தினையும் மாகாணசபை உறுப்பினர் ஆரம்பத்துவைத்ததுடன் மரநடுகை திட்டத்தினையும் ஆரம்பித்துவைத்தார்
READ MORE | comments

மட்டக்களப்பு திமிலைத்தீவு பல்நோக்கு கட்டிடத்திறப்பு விழா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்திறப்பு விழா மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்v தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் s. சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.முன்னாள் மாகாணசபை உறுப்பினர் p.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலக உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனார்
              
READ MORE | comments

யாருக்கும்ஆதரவின்றி மௌனமாக இருக்கபோறோம் அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் முஸ்லிம் காங்கிரஸிடம் இல்லை.

Saturday, November 29, 2014


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த தரப்புக்கும் ஆதரவின்றி மௌனமாக இருக்க தீர்மானித்திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் முஸ்லிம் காங்கிரஸிடம் இல்லை.
அதேவேளை எதிர்வரும் 10ம் திகதி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகும் நிலையில்அதனையும் முஸ்லிம் காங்கிரஸ் ஆராயும்.

எனினும் இந்த விடயத்தில் எந்த தரப்பையும் குறிப்பிட்டு ஆதரிக்காதிருக்க தீர்மானித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு - மின்சாரசபை

மட்டக்களப்பில் 01.12.2014ஆம் திகதி  திங்கட்கிழமை தொடக்கம் 05.12.2014 வெள்ளிக்கிழமை  வரையிலான ஐந்து தினங்களுக்கு மின்சாரத் தொகுதிகளின் பராமரிப்பு பணிகளின் பொருட்டு பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தலினை இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருக்கும் குறித்த பிரதேசங்களில் காலை தொடக்கம் மாலை வரையிலான மின் வெட்டு கீழ் குறிப்பிடப்படும் அட்டவணைக்கு அமைவாக அமுல்படுத்தப்படும் என்பதனை பொதுமக்கள் நலன்கருதி முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அறியத்தருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 065 222 4439 அல்லது 065 222 2639 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.


READ MORE | comments

கூட்டமைப்பின் ஆதரவு மகிந்தவுக்குத் தேவையில்லையாம்! – அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை. இது தொடர்பாக பேச்சு நடத்த எண்ணவுமில்லை. அங்குள்ள மக்கள் எமக்கே வாக்களிப்பர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர். வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும். ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எந்த விமர்சனத்தையும் நாம் முன்வைக்க முடியாது.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. மேலும் எதிரணியினரின் செயற்பாடுகள் மாறுப்பட்டவையாக இருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர்கள் பகல்கனவு காண்கின்றனர். என்றார்.
READ MORE | comments

சவூதியில் இறந்த நாவிதன்வெளி குடும்பஸ்தரின் சடலம் இரண்டு மாதங்களின்பின் இலங்கை வந்தது

சவூதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி மாரடைப்பின் காரணமாக இறந்த இலங்கையின்அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளியைச்சேர்ந்த குடும்பஸ்தரின்சடலம் நேற்று முன்தினம் இலங்கை வந்துசேர்ந்தது. சடலம் உறவினரால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை வீட்டுக்குக்கொண்டுவரப்பட்டு அஞ்சலியின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாவிதன்வெளி ஏழாம் கிராமத்தைச்சேர்ந்த கோவிந்தபிள்ளை ரத்னசிங்கம்(வயது 43) என்ற குடும்பஸ்தரே இவ்விதம் மரணமானவர். இவர் 3 பிள்ளைகளின் தந்தையாராவார்.
இருவருடங்களுக்கு முன்னர் குடும்பகஸ்டம் கருதி சவூதி சென்றிருந்தார். சவூதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ம் திகதி மாரடைப்பின் காரணமாக இறந்த கோவிந்தபிள்ளை ரத்னசிங்கத்தின்சடலத்தையும் ஆவணங்களையும் பெறுவதற்காக அவரது  மைத்துனரான கோ.ரத்னசிங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்கின்ற தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக செயற்பட்டு வருகின்ற மனித அபிவிருத்தி தாபனத்தின்  கிழக்கு பிராந்திய காரைதீவிலுள்ள  காரியாலயத்திற்கு சென்று முறையிட்டார்.
கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்.ஸ்ரீகாந் தலைமையிலான குழுவினர்  இரவுபகலாக மேற்கொண்ட முயற்சியின்காரணமாக சடலமும் அதற்கான ஆவண பிரதிகளையும் உறவினர் பெற்றுக்கொண்டனர். இவர்கள்  இதுபோன்று ஏலவே சவூதியில் மரணித்த பலரது சடலத்தையும் அதற்கான நஸ்ஈட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சடலமானது 27.11.2014ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கோவிந்தபிள்ளை ரத்னசிங்கம் என்பவரின் மைத்துனரான எஸ்.சுதாகரன் கையில் பி.ப 3.00 மணியளவில் விமான நிலைய பொதிகள் பிரிவு உத்தியோகஸ்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நாவிதன்வெளி ஏழாம் கிராமத்திலுள்ள மரண வீட்டிற்கு மனித அபிவிருத்திதாபன இணைபபாளர் ஸ்ரீகாந் உதவிஇணைப்பாளர்பங்களசை;செலு றியாழ் ஆகியோர் சென்று தமது அனுதாபங்கை செலுத்தியுள்ளனர்.
அங்கு அவரது  மைத்துனரான கோ.ரத்னசிங்கம் என்பவரின் சடலம் மனித அபிவிருத்தி தாபனத்தின்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் நலன்நோக்கு பிரிவினரின் பாரிய முயற்சியின் காரணமாக கிடைக்கப்பெற்றது என்று நன்றியுடன்  எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிககையில் எமது மைத்துனரின் மரணச்செய்தியைக் கேட்டவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்கின்ற தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக செயற்பட்டு வருகின்ற மனித அபிவிருத்தி தாபனத்தின்  கிழக்கு பிராந்திய காரியாலயத்திற்கு (இல:-02,பிள்ளையார் கோயில் வீதி, காரைதீவு – 05 ) சென்றோம்.
அன்று தொடக்கம் எமது மைத்துனரின் சடலம் எமக்கு கிடைக்கும் வரை மனித அபிவிருத்தி தாபனம் எமக்கு பக்கபலனாக இருந்தது. தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.ரியாழ் அவர்களின் வழிகாட்டலில் நாம் செயற்பட்டோம். இவை அனைத்திற்கும் முதற்கண் மனித அபிவிருத்தி தாபனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றார்.
கோ.ரத்னசிங்கம் என்பவர் பல வருடங்களாக சவூதி நாட்டில் தொழிலுக்கு சென்று வந்த அனுபவமிக்கவர். இவரது மனைவி 03 குழந்தைகளையும் பராமரித்து வந்தார். ஒரு ஆண் பிள்ளையையும், 2 பெண் பிள்ளைகளையும் முறையாக கற்பித்து வந்துள்ளார். மூத்தபெண்பிள்ளை இளவயதில் திருமணம் முடித்துள்ளார். மகன் பாடசாலையைவிட்டு இடைவிலகியுள்ளார். இந்நிலையில் பொருளாதார தேவை நிமித்தமே அவர் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கோ.ரத்னசிங்கம் என்பவரின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி இடைநடுவே நின்றுவிடும் என்னும் அச்சம் இறந்தவரின் மனைவியான கோமதி (வயது 40) என்பவருக்கு காணப்படுகின்றது. நிர்க்கதியாகியுள்ள அவர்களது குடும்ப வாழ்வியலுக்கு உதவுவார்களா? என தாபனத்தினர் கேட்டுள்ளனர்.

READ MORE | comments

சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் கொழும்பு கைக் பார்க்கில் முதலாவது கொழும்பு அமர்வு-

எதிர்கட்சிகளின் பொதுவேற்பாளர் மைத்திரிபாலசிறிசேனாவின் முதலாவது மாபெரும் மக்கள் சந்திப்பு 2ஆம் திகதி பி.பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி அறிவித்தலுக்குரிய போஸ்டர் கொழும்பு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இம் மைதாணம் கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள மைதாணமாகும்.
இதில் மாதுலுவாவே சோபித்த தேரர், மைத்திரிபாசிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க,ஜே.வி.பி அனுரகுமார திசாநயாக்க, ரணில் விக்கிரமசிங்க, ரீ.என்.ஏ சுமந்திரன், மனோகணேசன், சரத் பொண்சேகா மற்றும் ஏனைய கட்சிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய ஜனாதிபதிமுறை குடும்ப ஆட்சி, இராணுவ ஆட்சி, பொதுசொத்துக்கள் சுரையாடுதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
READ MORE | comments

முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுகிறது..!! கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது.
முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்களையும், அழுத்தங்களையும் கொடுத்த பொதுபல சேனா அமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை.
பொதுபல சேனா ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரி வருகின்றனர்.
முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பொதுபல சேனா ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது துரோகச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்றிரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் விசேட கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற்றுக்கொண்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தையும் அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸின் ஆதரவு கலைகிறது. கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதிவரை கிழக்கு மாகாணசபையின் 2015 வரவு செலவுத் திட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்போது அந்த வரவுசெலவுத்திட்டத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால், கிழக்கு மாகாணசபையை கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களான அமீர் அலி, ஷில்பி பாரூக் மற்றும் எம் எஸ் சுபைர் ஆகியோர் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கி தனித்து செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸ்சுக்கு 7 உறுப்பினர்களும் மூன்று சுயாதீன உறுப்பினர்களும் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 11 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் 2 போனஸ் உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லி;ம் கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாக இருந்தால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் இணைந்த ஆட்சி ஒன்றுக்கு வழியேற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
READ MORE | comments

மட்டக்களப்பு விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியல் சான்றிதழும், தையல் இயந்திரமும் வழங்கல்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சமூக நலன்புரிஅமைப்பினால்ஆரம்பித்துவைக்கப்பட்ட விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூhp மூன்றாம்நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவினால் சான்றழிக்கப்பட்ட பயிற்சிநெறிகள்நடைபெற்றுவருகின்றது
அதில் முதலாவது பகுதி கணினிப் பயிற்சியினை பூh;த்திசெய்த பயிலுனா;களுக்கானதேசிய தொழில்தகைமை சான்றிதழ் (NVQ) வழங்குதல், மற்றும் தையல்பயிற்சியினை பூh;த்திசெய்த யூவதிகளுக்கான சான்றிதழும், தையல் இயந்திரமும் வழங்கும் நிகழ்வு சமூக நலன்புhp அமைப்பின்தலைவாதிரு.எஸ்.திருநாவூக்கரசு அவா;களின் தலைமையில் 28.11.2014 இல் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மாவட்ட உதவி அரசாங்க அதிபாஎஸ்.கிhpதரன் அவா;கள், கிழக்குப்பல்கலைக்கழக பிள்ளைநலத்துறைபேராசிhpயாஎம்.செல்வராஜா, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளா.துரைநாயகம், கல்லூhpக்கு உதவிவழங்கிக்கொண்டிருக்கம் நன்கொடையாளா;கள், பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தா;கள், பிரதேசத்தில் உள்ள சிறுவா;பாராமாpப்பு இல்லங்களின் பொறுப்பாளா;கள், அமைப்பின் நிருவாக உறுப்பினா;கள், போதனாசிhpயா;கள், பயிலுனா;கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனா;.

இந்நிகழ்வின் போது தையல் பயிற்சியினை பூh;த்திசெய்தவா;களுக்கான சான்றிதழுடன் அவா;களின் வாழ்வாதாரத்தைவிருத்திசெய்யூம் நோக்கில் அவா;களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கணினிப் பயிற்சியினைபூh;த்திசெய்தவா;களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டதுஅத்தோடு சுவிஸ் நாட்டில்வசிக்கும் விஜயகுமாரன் ஜீவா தம்பதிகளினால் கஷ்டப் பிரதேசத்தில் இருந்து கணினிப் பயிற்சியினைப் பெற்றக்கொண்டிருக்கும்குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சோ;ந்த பயிலுனாஒருவருக்கு அவாpன் போக்குவரத்து சிரமத்தினையும், செலவினையும்,குறைக்கும் நோக்கில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்புச்செய்யப்பட்டதுடன் கல்லூhpக்கு உதவிவழங்கிக்கொண்டிருப்போhpனை கௌரவித்து அவா;களுக்கான சேவை கௌரவ சின்னமும் வழங்கப்பட்டது.

பிரதேசத்தில் நிலவுகின்ற வறுமையினை குறைக்கும் நோக்கில் இளைஞா; , யூவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெறத்தக்க வகையில்இவ்வாறான பயிற்சிநெறியினை நடாத்தி அவா;களுக்கான தேசிய தரமுடைய சான்றிதழினைவும் வழங்கிவரும் விவேகானந்ததொழில்நுட்பக் கல்லூhpயின் சேவையினால் பல இளைஞா; , யுவதிகள் பயன்பெற்று வருகின்றனாஎன்பது குறிப்பிடத்தக்கது.




















READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |