Home » » மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு - மின்சாரசபை

மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு - மின்சாரசபை

மட்டக்களப்பில் 01.12.2014ஆம் திகதி  திங்கட்கிழமை தொடக்கம் 05.12.2014 வெள்ளிக்கிழமை  வரையிலான ஐந்து தினங்களுக்கு மின்சாரத் தொகுதிகளின் பராமரிப்பு பணிகளின் பொருட்டு பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தலினை இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருக்கும் குறித்த பிரதேசங்களில் காலை தொடக்கம் மாலை வரையிலான மின் வெட்டு கீழ் குறிப்பிடப்படும் அட்டவணைக்கு அமைவாக அமுல்படுத்தப்படும் என்பதனை பொதுமக்கள் நலன்கருதி முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அறியத்தருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 065 222 4439 அல்லது 065 222 2639 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |