இலங்கை போர்க்குற்ற சாட்சிகள் 60 பேர் கடந்த ஆண்டில் வெளிநாடுகளில் தஞ்சம்! - ஐ.நா அறிவிப்பு

Tuesday, March 31, 2015

கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் 6792 இலங்கையர்கள் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக அரசியல் புகலிடம் கோரியவர்களின் மொத்த எண்ணிக்கை 6792 எனத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 12 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரும் நேபாளத்திற்கு சென்று அங்கு காத்மண்டுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் புகலிடம் கோரியுள்ளனர். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க முன்வந்த 60 சிங்கள மற்றும் தமிழர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

யாழ், மட்டக்களப்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்! - வியாழன் முதல் நடைமுறைக்கு வருகிறது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2ம் திகதி முதல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ். - கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான அதிபர் வ. பிரதீபன் தெரிவித்தார்.
  
காலை 7.10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்லும் யாழ்தேவி புகையிரதம் காலை 6.30 மணிக்கு யாழில் இருந்து புறப்படவுள்ளது. அதேவேளை, காலை 11.00 மணிக்கு யாழில் இருந்து செல்லும் நகர் சேர் கடுகதி 10.10 மணிக்கு புறப்படும் அதேநேரம், இரவு நேர தபால் 7.05 ற்கு சென்ற புகையிரதம், இரண்டாம் திகதி முதல் இரவு 7.00 மணிக்கு தனது பயணத்தினை ஆரம்பிக்கும்.
அதேநேரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 7.15 ற்கு வருகை தரும் யாழ்தேவி புகையிரதம் 6.05ற்கு அங்கிருந்து தனது பயணத்தினை ஆரம்பிக்கும். கொழும்பில் இருந்து 6.15 ற்கு பயணத்தினை ஆரம்பிக்கும் இரவு தபால் பிகையிரதம் எதிர்வரும் 01ம் திகதியில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும். காலை 5.50 மணிக்கு பயணத்தினை கல்கிஸ்ஸையில் இருந்து ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரதம் 5.45 மணிக்கு கல்கிஸ்ஸையிலிருந்து புறப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும், 10.00 மணிக்கு யாழிலிருந்து புறப்படும் புகையிரதம் இரண்டாம் திகதிக்குப் பின்னர் காலை 9.10 மணிக்கு யாழில் இருந்து புறப்படுமென்றும் யாழ். புகையிரத பிரதான அதிபர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 க்கு புறப்படும் பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். அதுபோல் வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடு மீன் நகர கடுகதி சேவை புகையிரதம் 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10 க்கு வரும் புகையிரதம் 7.15 க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றம் இல்லை அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்து சேரும்.
மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பிற்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும். மட்டக்களப்பிலிருந்து காலை 5.10 க்கு புறப்படும் புகையிரத பஸ் கல்லோயாவில் 9.02க்கு சென்றடையும் மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30க்கு புறப்பட்டு மட்டக்களப்பிற்கு மாலை 4.55க்கு வந்து சேரும் எனவும் புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

க.பொத சா.தரப் பரீட்சை முடிவு - முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் மாணவர்கள் இல்லை!

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க. பொ. த. பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதல் 10 பேர் என்ற பட்டியலில் எந்தவொரு தமிழ் முஸ்லிம் மாணவர்களின் பெயரும் உள்ளடங்கவில்லை. க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற 10 பேரின் பட்டியலில் சிங்கள மொழி மூல பாடசாலைகளின் மாணவர்கள் பெயர்கள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
அதேவேளை, கொழும்பில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 9 ஏ பெற்று 14 மாணவர்கள் சித்தியடை ந்துள்ளனர். பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 14 மாணவிகளும், வேம்படி மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 28 மாணவிகளும். வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியில் 9 ஏ பெற்று 25 மாணவிகளும் திருமலை கோணேஸ்வரா வித்தியாலயத்தில் 9 ஏ பெற்று 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை வெளியாகிய பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் 28 மாணவிகள் 9 ஏ தரத்தில் சித்தியடைந்துள்ளனர். அதேநேரம் 49 மாணவிகள் 8ஏ சித்தி களைப் பெற்றுள்ளதாக அதிபர் வேணுகா சண்முகரத்தினம் அறிவித்துள்ளார்.
இப்பரீட்சைக்கு தோற்றியவர்களின் வினாத்தாள் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் பரீட்சை முடிவுகளுடன் சகல பாடசாலைக ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
READ MORE | comments

மீண்டும் டாக்டர் திருக்குமார் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்


சுகவீன விடுமுறையில் சென்றிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.


பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றலாகி சென்றுவிட்டதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,



கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சுகவீனம் காரணமாக விடுமுறையில் இருந்தேன்.சிறிய சத்திரசிகிச்சையினை எதிர்கொண்டதன் காரணமாக விடுமுறையில் இருந்தேன். தற்போது பூரண சுகமடைந்த நிலையில் மீண்டும் எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன்.



கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

Australia celebrates 2015 Cricket World Cup victory

Monday, March 30, 2015

The newly-crowned Cricket World Cup champions went on parade showing off their 2015 ICC World Cup before the Australian cricket fans in Melbourne on Monday,   March 30 following their win over neighbouring New Zealand the previous night at the MCG.
The Deputy Prime Minister Warren Truss, who was present at the celebration, called the cricketers “the pride of the nation” as he thanked them for the great pleasure they have given the nation and congratulated the team on the World Cup win.
The Kangaroo’s fifth World Cup win also let the skipper, Michael Clarke, sign-off in style from the ODI format of cricket. Clarke, who top scored Australia’s stomping seven-wicket victory over New Zealand, said that it was a great way to end his ODI career.
Over 93,000 people were present at the MCG to witness the final and many were back in town to pay tribute to their heroes on Monday morning.
Australia boasts the most amount of World Cup titles, as they hold the World Cup bragging rights for 1987, 1999, 2003 and 2007. No other country claimed the trophy for more than twice.

READ MORE | comments

Free WIFI from today

One of the promises given during the last presidential election, Wi-Fi free internet facility program was inaugurated this morning under the patronage of Prime Minister Ranil Wickremesinghe.
The main ceremony was held in front of Fort Railway station and on the sideline of the ceremony in Colombo, another ceremony was held in Jaffna.
Accordingly steps will be taken to set up more Wi-Fi Centers at places where more youths move about.
Addressing the inaugural ceremony Premier Wickremesinghe said that the funds spent to implement this program would be a precious investment in the country.
In addition, the prime minister said that the Sri Lanka Cricket Control Board was dissolved and a new board has been appointed instead.
He said the decision to dissolve Sri Lanka Cricket Control Board was taken in order to probe the corruption and irregularities that have been taken place in the past.
READ MORE | comments

கிழக்கில் தமிழ் மொழி மூலமாக பொது மக்கள் சேவைகளை உறுதிப்படுத்துங்கள் – ஆரிப் சம்சுடீன்

அரசியலமைப்பின் பிரகாரம் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைக்கமைய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் அரசகரும மொழியான தமிழ் மொழி மூலமாக பொது மக்கள் சேவைகைளப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி தனிநபர் அவசர பிரேரணையொன்றை கிழக்கு மாகாண சபையில் நாளை(31) முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணமாகும். இம்மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்கின்றனர். இருப்பினும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களாக தமிழ் மொழிபேசும் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
அத்துடன் இம்மாவட்ட செயலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரிய முறையில் அமுல்படுத்தப்படாததனால் இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது சேவைகளை தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்..
இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்ப அரச அலுவலகங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவது அவசியமாகும். இருப்பினும், இம்மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் தமிழ் மொழியில் தமிழ் பேசும் மக்கள் சேவையைப் பெற்றுவருதில் மிக நீண்டகாலமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தமிழ் பேசும் மக்கள் தங்களது மொழி உரிமையைப் பெற்று வாழ்வதற்கும், தங்களது மொழியில் அரச சேவையை பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதனால,; கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் கீழ் உள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள செயலகங்களில் தமிழ் மொழியில் இம்மாவட்ட மக்கள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுப்பது இ;ம்மாகாண சபையின் தார்மீகப் பொறுப்பாகும்.
இதன் பிரகாரம, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் அரசகரும மொழிச் செயற்பாட்டை உறுதிப்படுத்தி, இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கான சேவையினை தமிம் மொழியில் பெற்றுக்கொள்வதற்கு இச்சபையினூடாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்தத் தனி நபர் பிரேரனையை நாளை 31ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின்போது முன்வைக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர் மேலும் தெரிவித்தார்
READ MORE | comments

நாம் தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தினை பாவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை நாங்கள் ஒருபோதும் தமிழ் பேசும் மக்கள் அல்ல நாங்கள் தமிழர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் மட்டக்களப்பு நல்லை வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்.குடாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கோ, உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ கடிதம் அனுப்பவில்லை. முதலமைச்சரை விலக்கிப் பார்க்கின்றனர்.
இது ஐக்கிய தேசிய கட்சியின் பிரித்தாளும் தந்திரமாகும். ஏற்கனவே விடுதலைப் புலிகளை உடைத்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்.
அலிசாகீர் மெளானாவை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்தார்கள். அதனைப்போன்று தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் சக்தியில் பல சர்வதேச சதிகளும் உள்ளன. அதேபோன்று இலங்கையிலும் பல சதிகள் இருக்கின்றன. அதன் பின்னணியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை நோக்கி பல கேள்விகள் வருகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க வேண்டும் என்ற விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் தொடர்புகள் உள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அறிக்கையினை விடுத்துக் கொண்டுள்ளனர். மக்களை ஒருபாணியில் குழப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடாவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கட்சி பதிந்துள்ளது என தெரிவித்துள்ளார். சம்பந்தன் ஐயா கூறிய விடயமும் உண்மை. சுமந்திரன் ஐயா கூறிய விடயமும் உண்மை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி போட்டியிடும்போது அது தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட வேண்டும். அதனை அறிவிக்க வேண்டும். அதனையே சுமந்திரன் அவர்களும் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் எத்தனை கட்சி உள்ளது என்ற சந்தேகமும் இன்று பலரிடம் உள்ளது. இதில் எனக்கும் குழப்பம் உள்ளது.
சித்தார்த்தனும் ஆனந்த சங்கரி ஐயாவும் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின்போதே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டனர். அவர்கள் சேர்ந்ததன் பின்னர் அவர்கள் சேர்ந்த விதம் பிழையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களாகிய நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு கட்சிகளே உள்ளன. ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் தற்போது கட்சியொன்றினை ஆரம்பித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். சம்பந்தன் ஐயா ஆவர்கள் நான்கு கட்சிகள்தான் உள்ளது என்பதை தெளிவாக அறிவித்துள்ளார்.இந்த விடயம் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியில் இருக்கும் நாங்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும்.ஏனைய கட்சிகளை விட மிக முக்கிய கட்சியாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளது.
அடுத்தகட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதாக இருந்தால் எம்மை நோக்கிவரும் பரீட்சைகளில் வெற்றிபெற வேண்டும். நாங்கள் பரீட்சையென்று கூறுவது தேர்தல்களையாகும்.
ஒன்பதாவது பரீட்சையாக பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்றது. இது தொடர்பில் இரண்டு விதமாக பேசப்படுகின்றது. தொகுதி ரீதியாக, தற்போதுள்ள நடைமுறையில் நடத்துவது என சொல்லப்படுகின்றது.
இதன் காரணமாக அரசாங்கத்துக்குள்ளேயே குழப்புங்கள் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைத்தே ஆகவேண்டும். ஆயுள்காலம் ஒருவருடமே உள்ளது.
பாராளுமன்றத்தினை ஜனாதிபதியினால் மட்டுமே கலைக்கமுடியும். பிரதமரால் அதனைக் கலைக்க முடியாது. எந்த வகையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் நாங்கள் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளோம்.
தமிழர்கள் என்றால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பாகும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
முஸ்லிம் காங்கிரசை தத்தெடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியை விமர்சிப்பதற்கு,பிழையை சுட்டிக்காட்டுவதற்கு உரிமைள்ளது. ஆனால் வெற்றிலைக்கு வாக்களித்துவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
நாம் தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தினை பாவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தந்தை செல்வாவின் காலப்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களின்போது இஸ்லாமிய மக்களை இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே தமிழ் பேசும் சமூகம் என்ற பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட தமிழர்களை சிறுமைப்படுத்துகின்றது.
நாங்கள் ஒருபோதும் தமிழ் பேசும் மக்கள் அல்ல. நாங்கள் தமிழர்கள். நாங்கள் இன்னும் இனத்தினை அணைத்து செல்லவேண்டும் என்ற கொள்கையுடனேயே இருந்து வருகின்றோம்.இதனையே தந்தை செல்வா செய்துள்ளார் என்றார்.
READ MORE | comments

மட்டக்களப்பில்இழுத்து மூடப்பட்ட சம்சாக்கடை சம்சாவை சாப்பிட்ட மாணவி மயக்கத்தில்

மனித பாவனைக்குதவாத பழுதடைந்த சம்சாவை விற்பனை செய்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உணவு விற்பனை  நிலையம் சுகாதார அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்சாவை சாப்பிட்ட பாடசாலை மாணவியொருவர் சுகவீனமுற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் சம்சாவை வாங்கி இம்மாணவி சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டு சற்று நேரத்தில் வாந்தியும் மயக்கமும் ஏற்படவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிறுவர் வைத்திய நிபுணரான மேற்படி மாணவியின் தாய் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.
சமுசா உண்டபின் ஏற்பட்ட பிரச்சினையென அடையாளம் கண்டதனால் குறித்த சிற்றுண்டிச்சாலையை சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்ட போது பல நாட்களுக்கு முன் தயாரித்த பழுதடைந்த மனித பாவனைக்குதவாத பெருமளவு சமுசாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ரீ.எல்.ஏ.மனாப் முன்னிலையில் குறித்த சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செயயப்பட்டுள்ளதுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
READ MORE | comments

நெருங்கிய நண்பர்கள் குறித்து கவனத்துடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டுமா பிரியந்தவின் கொலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த பொலன்னறுவை ‘லக்ஷ உயனவை’ வசிப்பிடமாக கொண்டவர்.
கடந்த வியாழக்கிழமை இரவு பிரியந்தவுக்கும் அவரது நெருங்கிய நண்பருக்குமிடையிலான வாக்குவாதம் உச்சத்தை அடைந்ததை தொடர்ந்து பிரியந்த தனதுநண்பரினால் கோடரியால் பலமாக தாக்கப்பட்டார்.
அவர் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவர் ஆபத்தான கட்டத்தை அடைந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து பிரியந்த உயிரிழந்தார்.
பிரியந்த, கீத்தாஞ்சலி சமன்குமாரியின் அன்பு கணவரும் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். இவர் பொலன்னறுவை மாவட்டத்தின் பிரபல வர்த்தகராகவும் சிறந்த சமூக சேவையாளராகும் அப்பகுதி வாழ் மக்களால் அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை தனது கணவர் நன்கு திட்டமிட்டே கொலை செய்யப்பட்டி ருப்பதாக பிரியந்தவின் மனைவி கீத்தாஞ்சலி தெரிவித்தார். “சம்பவம் இடம்பெற்ற தினம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கணவர் என்னை கதுறுவெலவிற்கு வருமாறு அழைத்திருந்தார்.
நான் எனது பிள்ளைகளுடன் வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் போது, தொலைபேசியில் என்னை அழைத்த அவர் தான் இப்போது அரல கன்வில ஆலையில் இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அரலகன்வில விற்கு வருவதாகவும் கூறினார். நான் அரலகன்விலையை அடைந்ததும் எனது கண வர் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றேன்.
அவர் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் சிகிச்சையின் போதே உயிரிழந்துவிட்டார்” என்றும் அவர் கூறினார்.
“எனது கணவரை கொலை செய்தவர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக எனது கணவரிடம் நிறைய பணம் பெற்றுள்ளார். எனது கணவரும் தன்னால் இயன்ற பண உதவிகளை அவருக்காக செய்துள்ளார். இறுதியில் அந்த நபர் எனது கணவரையே திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்.” என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
பிரியந்தவின் மைத்துனரான உப்பாளி ஜயசிங்ஹ, “இருவருக்கிடையிலான வாய் தர்க்கத்தின் போதே பிரியந்த கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். மிகவும் இரக்கமான இதயம் கொண்டவர். தன்னை தேடி வருவோருக்கு தன்னாலான உதவிகளை செய்பவர். அவர் தனது நெருங்கிய நண்பர் ஒருவராலேயே கொலை செய்யப்பட்டமையானது நெருங்கிய நண்பர்கள் குறித்து கவனத்துடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டுமென்ற கசப்பான உண்மையை மீண்டும் எமக்கு ஞாபகப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
தனது சகோதரர் நாட்டின் ஜனாதிபதியானார் என்பதற்காக அவர் எவ்வித பெருமையையும் யாரிடமும் காட்டியிருக்கவில்லை. அவர் வழக்கம் போலவே தனது வியாபாரத்தை நடத்தி வந்ததுடன் அன்று பொலவே என்றும் அனைவருடனும் நட்புறவையும் பேணி வந்தார். இவரது எதிர்பாராத மரணம் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதெனவும் உப்பாளி தெரிவித்தார்.
READ MORE | comments

சாதாரண பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி முதலிடம் - தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்...

தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா/த பரீட்சையில் யாழ்.வேம்படி வேம்படியில் 246 மாணவர்கள் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இதில் 28 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 11 மாணவர்கள் ஆங்கில மொழிமூலம் 9ஏ சித்தியையும், 17 மாணவர்கள் தமிழ் மொழிமூலம் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும் யாழ்.இந்துக்கல்லூரியை பொறுத்த வரையில் க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றிய 263 பேரும் முழுமையாக சித்தியெய்தியுள்ளனர்.
மேலும் இதில் 18 மாணவர்கள் 9ஏ சித்தியையும் குறிப்பாக 8 மாணவர்கள் தமிழ்மொழியிலும்,10 மாணவர்கள் ஆங்கிலமொழியிலும் 9ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை யாழ்.இந்துக் கல்லூரி யாழ்.மாவட்டத்தில் ஆண்கள் பாடசாலையில் முன்னிலை வகிக்கும் அதேவேளை பெண்கள் பாடசாலையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள்
நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
கம்பஹா ஹொலி குரோஸ் கல்லூரியைச் சேர்ந்த சந்தினி நவரஞ்சன அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
விசாக்கா கல்லூரியைச் சேர்ந்த அமாலி நிவரத்தன மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியைச் சேர்ந்த எச்.அபேசிங்க, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலய மாணவி நுவனி நெத்சரனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
ஏனைய மாணவர்கள் விபரம் வருமாறு
04.தேவினி ருவன்கா ஹேமசிங்க - விசாகா மகளிர் மகா வித்தியாலயம் 
05.திவ்யாஞ்சலி உத்தரா ராஜபக்ஷ - தேவி பாலிகா மகா வித்தியாலயம்
06.ரன்சிக லசன் குணசேகர - தேர்ஷ்டன் கல்லூரி 
06.திலினி சந்துனிகா பரிஹக்கார - சுஜதா கல்லூரி - மாத்தறை 
06.அஞ்சன ரெவிரங்க அபயதீப மதரசிங்க - மொரவக்க கீர்த்தி அபேவிக்ரம மத்திய மகா வித்தியாலயம்.
READ MORE | comments

ஐ.சி.சி. லெவனில் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை

வ்வொரு உலகக் கோப்பை போட்டி முடிந்தவுடனும் ஐ.சி.சி. லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும். 2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஐ.சி.சி. வீரர்கள் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் அதிகபட்சமாக 5 நியூசிலாந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கு ஐ.சி.சி அணியில் இடம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் இந்த அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன் )- நியூசிலாந்து 

மார்ட்டின் கப்தில் -நியூசிலாந்து 

கோரே ஆண்டர்சன்- நியூசிலாந்து

டேனியல் வெட்டேரி- நியூசிலாந்து

ட்ரென்ட் பவுல்ட்-நியூசிலாந்து

ஸ்டீவன் ஸ்மித் -ஆஸ்திரேலியா

கிளன் மேக்ஸ்வெல்-ஆஸ்திரேலியா

மிட்செல் ஸ்டார்க்-ஆஸ்திரேலியா

சங்கக்காரா (விக்கெட்கீப்பர்)-இலங்கை

டி வில்லியர்ஸ்- தென்ஆப்ரிக்கா

மோர்கல்-தென்ஆப்ரிக்கா

பிரென்டன் டெயிலர் (12வது வீரர்)- ஜிம்பாப்வே

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே ஐ.சி.சி. நடுவர் குழு உறுப்பினர் ரிச்சர்ட் கெட்டில்ஃபாரோ மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய  குழு தேர்வு செய்துள்ளது.
READ MORE | comments

கிழக்கை பழிவாங்கும் தமிழ் தலைமைகள்! ஆதங்கத்தில் மட்டு ஆயர்.

“தலைமை பீடத்தில் உள்ளவர்கள் மட்டக்களப்பை ஒதுக்கி வைக்கும் மனப்பானமையை தான் நான் உணருகின்றேன் , இலங்கைக்கு வரும் எல்லாரையும் வடக்கிற்கு தான் கூட்டி செல்கிறார்களே தவிர கிழக்கிற்கு கூட்டி வருவது  குறைவு , பலர் நினைக்கிறார்கள் மட்டக்களப்பில் ஒன்றும் நடக்கவில்லை , மட்டக்களப்பு மக்கள் பாதிக்கப்படவில்லை , யுத்தமே நடக்கவில்லை.
ஆனால் மட்டக்களப்பில் தான் யுத்தம் ஆரம்பத்தில் தொடங்கியது , முதன் முதலில் மட்டக்களப்பு தான் பாதிக்கப்பட்டது.
அதன் பின்பு தான் மற்ற இடங்களில் தொடர்ந்தது , இதை யாரும் பொருட்படுத்துவது இல்லை
எங்களுடைய அரசியல் வாதிகள் இதை பற்றி சிந்திப்பதாயில்லை , கதைப்பார்கள் ஆனால் ஒன்றும் நடப்பதில்லை .
எங்களை பொருத்தவரை நல்ல தலைவர்கள் இல்லை , எல்லாரும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தான் அரசியலில் ஈடுபடுகிறார்களே தவிர மக்களுக்கு சேவையாற்றவில்லை ”  என  மட்டு. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா  தெரிவித்துள்ளார்.



READ MORE | comments

இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்றை அமைக்க தீர்மானம்

இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவகத்தில் பாரியளவு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த இடைக்கால கிரிக்கட் நிர்வாக சபையொன்று உருவாக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய இந்த நிர்வாக சபை உருவாக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk, wwwresults.exam.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்க்கமுடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது
கடந்த டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றது.
சில கட்டங்களாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஆறு லட்சம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்: ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று பி.ப 3.00 மணியளவில் பெரியநீலாவணை விஷ்னு வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின்போது குறித்த காரில் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


READ MORE | comments

18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி

கண்களைக் கலங்க வைக்கும் மிக உருக்கமான பதிவு
18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொப்பி என்ற இந்த 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இல ங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டனர். இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
இந்தநிலையில் தமது பெற்றோர் இலங்கையில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அவர்களை தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தமது பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெறாத பெருந்தோட்டப் பகுதி என்பது தெரியவந்தது. இந்தநிலையில் குறித்த தோட்டத்துக்கு சென்ற அவர் ஆங்கிலத்தில் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, அருகில் இருந்து சிறிய பெண் ஒருவர் தம்மை கட்டித்தழுவியதாக பொப்பி தெரிவித்துள்ளார். தாம், நம்பவில்லை என்றபோதும் அதுவே தம்மை பெற்றதாய் என்பதை கண்டு பொப்பி ஆனந்த மடைந்தார். இந்தநிலையில் தமது சகோதரிகளில் ஒருவர் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் அதேநேரம் மற்றும் ஒருவர் ஆசிரியையாக பணியாற்று வருவதாக பொப்பி அறிந்துள்ளார்.
இது குறித்து பொப்பியின் தாய் குறிப்பிடுகையில், ஏற்கனவே இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான தமது கணவர், குடிப் பழக்கம் காரணமாக இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது தாம் பொப்பியை வயிற்றில் சுமந்திருந்ததாக காலிங்கா என்ற அந்த தாய், குறித்த குழந்தையை வளர்க்க முடியாமையால் தமது தோட்டத்துக்கு உல்லாச பயணிகளாக வந்த பிரித்தானிய தம்பதியினருக்கு அந்த குழந்தையை தத்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் குறித்த குழந்தையான பொப்பி மீண்டும் வந்து தம்மை சந்திப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும் காலிங்கா குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி விபத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர் -

நேற்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது -
பிந்திய இணைப்பு-
விபத்தில் காயமுற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர் -
குறித்த 2 பேரும் கிரான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்
ஒருவர் செங்கலடி- நீர்ப்பாசன திணைக்களத்தில் பணி புரியும் ஆதித்தன் (34வயது ) ,மற்றவர் விநாயகம் ஜெயபிரதாப் எனும் 24 வயது நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது – உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

READ MORE | comments

மட்டக்களப்பில் மாபெரும் கூத்து பெருவிழா

Sunday, March 29, 2015

மட்டக்களப்பு,கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கம் நடாத்தும் மாபெரும் கூத்து விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்லடியில் ஆரம்பமானது.
கல்லடியில் உள்ள கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மைதானத்தில் இந்த நிகழ்வு கோலாகலமாக ஆரம்பமானது.
இளம் தலைமுறையினர் மத்தியில் மட்டக்களப்பின் பாரம்பரிய கலையான கூத்துக்கலையை கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வும் நடாத்தப்பட்டது.
ஏற்பாட்டுக்குழு அங்கத்தவர் க.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார,சமூக சேவைகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது அதிதிகள் பண்பாட்டு வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டமை சிறப்பம்சமாகும்.
அதனைத்தொடர்ந்து கூத்துப்பெருவிழானை சிறப்பிக்கும் வகையில் நொஞ்சிப்போடியார் களரியில் கூத்து நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன் உட்பட பெருமளவான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

அம்பாறை மாவட்டம் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம். ஆனால் எதிர்காலத்தில் Video

ஆயுதப் போராட்டத்தின் வெற்றிதான் இன்றைய அரசியல் என்பதனை மறந்து விடக்கூடாது. போராட்டத்தினை நடத்தியவர்களும் நாங்கள். அனைத்தையும் இழந்தவர்களும் நாங்களே.
ஆனால் இன்று பலனை அடைந்தவர்கள் யார்? கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சிரேஸ்ட சட்டத்தரணியும், தமிழரசிக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இன்று நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில்  உள்ள கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, மல்வத்தை பாண்டிருப்பு, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துரை, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்,
ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை தமிழரசுக் கட்சிக்காக உழைத்த பெரியார்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும்போதே சட்டத்தரணி தவராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
வடக்கையும் கிழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே ஜெனிவா செல்வதனை நிறுத்திவிட்டு அம்பாறை மாவட்ட மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
அம்பாறை மாவட்டம் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம். ஆனால் தற்போதும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்ந்தார்களா? என்ற வினாவை கேட்க வேண்டியிருக்கிறது.
தமிழர்களாகிய நாங்கள் சிறுபான்மையினம் அல்ல. சிறுபான்மை என்பது மொழி, இனம் அற்றவனே சிறுபான்மையினராக கனிக்கப்படுவான்.
தமிழர்களாகிய எங்களுக்கு இனம், மொழி ஆகிய இரண்டும் இருக்கின்றது. நாங்கள் வடக்கிலும் கிழக்கில் தொன்று தொட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே நாங்கள் சிறுபான்மையினர் அல்ல என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

2019ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் 10 அணிகளே - ரிச்சட்சன்

Saturday, March 28, 2015


2019ஆம் ஆண்டு இடம்பெற உள்ள 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தொடரில் பங்குகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இதனை தெரிவித்துள்ளார்.



இந்த தீர்மானத்தை மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



எனினும் அதனை நிராகரித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, ஆரோக்கியமான கிரிக்கெட்டை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக டேவிட் ரிச்சட்சன் குறிப்பிட்டுள்ளார்.



உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் அணிகள் குறைந்தபட்ச சமபல அணியாக இருப்பதே ஆரோக்கியமான கிரிக்கெட்டுக்கு கைகொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



டேவிட் ரிச்சட்சன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை விவகாரம்! சிக்குவாரா மகிந்த?

ரஸ்யா, உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பான விசாரணைகளில், இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சிக்கக் கூடும் என்று  இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மருமகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஸ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக உக்ரேனிய அரசாங்கம் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, உதயங்க வீரதுங்க, தற்போது காணாமற்போயுள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா,
தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராகப் போரிடும், உக்ரேனியர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையில், மகிந்த ராஜபக்சவும் கூட சிக்கிக் கொள்ளக் கூடும்.
உக்ரேனிடம் இருந்து இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதில் இருந்து, உதயங்க வீரதுங்க காணாமற்போயுள்ளார்.
உதயங்க வீரதுங்கவினால் விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை உக்ரேன் வழங்கியுள்ளது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, உதயங்க வீரதுங்க காணாமற்போயுள்ளதால்,நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஸ்யாவுடன் இலங்கை கலந்துரையாடவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கூல் கேப்டன் டோணியை கண்கலங்க செய்த தோல்வி..

Friday, March 27, 2015

ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்ற பிறகு டோணி கண் கலங்கிய போட்டோக்கள் வைரலாகியுள்ளன. உலக கோப்பையை வெல்ல தகுதியுடைய அணியாக கணிக்கப்பட்ட நடப்புச் சாம்பியன் இந்தியா, தொடர்ந்து ஏழு போட்டிகளிலும் வென்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. ஆனால், அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில்
ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோற்றது. கேப்டன் டோணி கடைசிகட்டம்வரை நின்று போராடியும், வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு கம்பெனி கொடுக்கவில்லை. எனவே, 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்க வேண்டியதாயிற்று. இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியில், இரு அணிகளின் கேப்டன்கள் கருத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். டோணியின் கருத்தை கேட்க அழைத்தபோது, டோணியின் கண்கள் கலங்கியிருந்தன. இதை டிவியில் பார்த்த ரசிகர்களும், செல்போன்களில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாக சுற்றிவருகிறது. கூலான கேப்டன் என்று அழைக்கப்படும் டோணியே கல் கலங்கிவிட்டார் என்பதுதான், ரசிகர்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான, அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்றபோது, அந்த அணியின் மோர்க்கல், கேப்டன் டி வில்லியர்ஸ் போன்றோர் அழுததும் ரசிகர்களை மிகவும் பாதித்திருந்தது. சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ள கருத்து இது: "டி வில்லியர்ஸ் கண்கள் கலங்கியபோது, எங்கள் கண்களும் கலங்கின.. டோணியின் கண்கள் கலங்கியபோது, எங்கள் இதயமும் கலங்கியது".


READ MORE | comments

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உணவு விசமானதில் பலர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு விசமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.

கடந்த 25ம் திகதி தாழங்குடாப் பிரதேசத்திலுள்ள திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டேரில் சிலர் உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு,வாந்தி மற்றும் நடுக்கம் போன்ற நோய்களினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முற்பகல் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு திடீர் சுகயீனமுற்று பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என 50க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களுள் ஐவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சிகிச்சைகள் இடம் பெற்றுவருவதாகவும் சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.

மண்முனை மற்றும் தாழங்குடா போன்ற பிரசேதங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை நண்பகல் தாழங்குடாவிலுள்ள திருமண வீட்டில் கோழி இறைச்சியுடன் புரியாணி உணவு உட்கொண்டதாகவும் அதன்பின்னரே திடீரென சுகவீனமுள்ளதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் தெரிவித்தனர்.

திருமண வீட்டின் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.









READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |