Home » » மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி விபத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர் -

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி விபத்தில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர் -

நேற்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது -
பிந்திய இணைப்பு-
விபத்தில் காயமுற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர் -
குறித்த 2 பேரும் கிரான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்
ஒருவர் செங்கலடி- நீர்ப்பாசன திணைக்களத்தில் பணி புரியும் ஆதித்தன் (34வயது ) ,மற்றவர் விநாயகம் ஜெயபிரதாப் எனும் 24 வயது நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது – உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |