11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றுடன் ஓய்வு !

Saturday, December 31, 2022


 60 வயது நிறைவடைந்ததையடுத்து 11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர்.


இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 09 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை பொலிஸ் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எப்.யு. பெர்னாண்டோ ஆகியோர் இன்று முதல் ஓய்வுபெற உள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அகஸ்டஸ் பெரேரா, வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன், வடக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விஜித குணரத்ன, சமூக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஜகத் பலிஹக்கார ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளனர். .

கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான கித்சிறி ஜயலால் அபோன்சு, களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான எஸ்.டி.எஸ்.பி சந்தநாயக்க, நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான எச்.எஸ்.என். பீரிஸ் மற்றும் மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரிஷாந்த ஜயக்கொடி ஆகியோர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

நிதி அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றறிக்கை !


 அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் ஒதுக்கப்படும் ஒதுக்கீடு வரம்புகள் அடுத்த வருடத்திற்கு மிகையாகாத வகையில் செலவுகளை நிர்வகிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, 2023 ஆம் ஆண்டு அரசாங்க செலவினங்கள் முன்னெப்போதையும் விட மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவதற்கு அரசாங்க நிறுவனங்கள் வழங்கிய சுற்றறிக்கை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

READ MORE | comments

60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலை – அதிபர் செயலகம் பணிப்புரை

 


இன்றைய தினத்துடன் ஓய்வுபெறவுள்ள தொடருந்து சேவை ஊழியர்களை, தேவை ஏற்படும் பட்சத்தில், அத்தியாவசிய சேவை என்ற விதத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அதிபர் செயலகம், இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அரச சேவையிலுள்ள 30,000திற்கும் அதிகமானோர் இன்றுடன், ஓய்வூ பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய கொள்கைக்கு அமைய, 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வூ பெறவுள்ளனர்.

பெருந்தொகையான அரச ஊழியர்கள்

60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலை – அதிபர் செயலகம் பணிப்புரை | Government Employee Government Staffs Salary

அரச நிர்வாக சேவை, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள், முப்படை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் கடமையாற்றும் அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வூ பெறவுள்ளனர்.

இந்தளவிலான பெருந்தொகையான அரச ஊழியர்கள், ஒரே நேரத்தில் ஓய்வூ பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

READ MORE | comments

அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு !

 


தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று (30) இரவு மீட்டுள்ளனர்.


தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பேரூந்து பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது.

இதன் போது இரவு 8 மணியளவில் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கே.ஹேரத்,உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் தலைமையிலான பொலிஸார் குறித்த பேரூந்தை இடை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது குறித்த பேருந்தின் பின் ஆசனத்தின் இருக்கையின் கீழ் காணப்பட்ட பொதி ஒன்றை மீட்டனர். குறித்த பொதியை சோதனை செய்த போது ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 95 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர் மற்றும் சாரதி, நடத்துனர் ஆகியோர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர்.

சுமார் 2 மணித்தியாலங்களின் பின் அவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர். இதனால் குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் தமது பயணங்களை தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளை !

 


நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


வெள்ளிக்கிழமை (டிச 30) அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபா பணம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால் , அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து , ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால் , ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஹிக்கடுவை, காலி, பத்தேகம உள்ளிட்ட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள உத்தரவு...

 


31-12-2022

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன், வீதிகளில் பாடசாலை மாணவர்களை சோதனையிடுவதையும், காணொளி பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டின் இது வரை 510 பிரசவங்கள் - வரலாற்று சாதனை என்கிறார் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர்

Thursday, December 29, 2022


 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 


காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டின் இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது வரலாற்று சாதணையாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான வரலாறாகும்.

கொவிட் 19 கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் தொடக்கம் முழுமையான சேவைகளை மக்களுக்கு வழங்க ஆரம்பித்தது.

அதில் ஒன்றுதான் குழந்தை பிரசவங்களாகும். இதனடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2022 டிசம்பர் 28ம் திகதி இது வரைக்கும் 510 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் 508 சுகப்பிரசவங்கள் நிகழ்ந்துள்ளதுடன் இரண்டு குழந்தை வயிற்றுக்குள் மரணித்து பிறந்துள்ளன.

இந்த வரலாற்றை அடைவதற்கு காரணமாக இருந்த இந்த விடுதியின் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ மாதுகள், ஊழியர்கள், சிற்றூழியர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதுடன், பொது மக்கள் இந்த வைத்தியசாலையை எந்த வித அச்சமோ பயமோ இன்றி மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

Tuesday, December 27, 2022

 08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஜனவரி 01, முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

புதிய செயலாளர்கள்

8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் | President Appoints New Secretaries 08 Ministries

இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எச்.கே.டி.டபிள்யூ. எம்.என்.பி. ஹபுஹின்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்டச் செயலாளராக பணியாற்றிய கே. மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம். யமுனா பெரேரா, மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் | President Appoints New Secretaries 08 Ministries

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றிய எம்.எம். நைமுதீன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பி.பி. குணதிலக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிபரின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராவும், விவசாய அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவிக் காலம் நீடிப்பு

மேலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோரின் பதவிக் காலம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

READ MORE | comments

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

 


ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா அவர்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .


அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயதுடையவர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ( 9g 850mg) ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் ,
அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது இவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது

இன்றிலிருந்து முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத்


தண்டணை 7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இறக்காமம் அஷ்ரபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழாவும் பணி நிறைவு பெற்றுச் செல்லும் அதிபர்கள் கௌரவிப்பும்!

 




அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில்  "அரிவரி கொரிவரி | மீண்டும் பள்ளிக்கு போகலாம்" அஷ்ரபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழா  அஷ்ரப் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) முதல்வர் எம்.ஐ. மாஹிர் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

1897 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்களை பூர்த்தியாக்கும் அஷ்ரப் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களை பாடசாலையோடு இணைத்து அதன் கல்வி வளர்ச்சியில் சமூகத்தை இணைப்பாக்கம் செய்து சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி கல்வி ரீதியாக மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

"உயரிய கல்வி ; பண்பட்ட சமூகம்" எனும் மகுட வாசகத்தினை அடிப்படையாக் கொண்டு 1979  - 2017 (ஆண்டு க.பொ.த. சா/த) வரையிலான 35 வகுப்பு மாணவர்களை ஒன்றிணைந்து இந்த "அரிவரி கொரிவரி | மீண்டும் பள்ளிக்கு போகலாம்" நிகழ்வு இடம்பெற்றது. 

இந்  நிகழ்வில் 35 வகுப்புக்களும் பாடசாலை அபிவிருத்தி சார்ந்த முன்மொழிவுகளை முன்வைத்ததுடன் வெற்றிகரமாக செயற்படுத்தியும் வருகின்றனர்.

அஸ்றபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழாவில்,  கல்லூரியில்  சேவையாற்றி பணி நிறைவு பெற்றுச் செல்லும் ஏ.எச். ஜசீன் ,  குறித்த பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றி அதிபராக தரம் உயர்ந்து றோயல் கனிஷ்ட கல்லூரி மற்றும் அல் அமீன் என்பவற்றில் பணி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.ஆர்.எம். ஐனுல் றிபாயா ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் கே.எம்.ஆர்.  குறூப் மற்றும் 1999 அஷ்ரபியன்ஸ் அனுசரணையில் ரூபா 102,000.00 பெறுமதியான பாடசாலைக்கான பிளேசர்கள் (Blazers) அஷ்ரபியன்ஸ்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அஷ்ரபியன்ஸ்களான  உப தவிசாளர் ஏ.எல். நௌபர் (மௌலவி), இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி, பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எம். சியாத், பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எல். நிசார், கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூட் லெப்பை ,  பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். அமீன், பிரதி அதிபர் திருமதி ஏ.எம். இர்பானா, வாங்காமம் ஜீ.எம்.எம்.எஸ் வித்தியால அதிபர் ஏ.ஹாறுடீன், வாங்காமம் ஒறாபிபாஷா வித்தியால அதிபர் யூ.எல். தாஹிர் றோயல் கனிஷ்ட கல்லூரி அதிபர் எம்.ஏ. பஜீர், குடுவில் ஹிறா வித்தியாலய அதிபர். ஐ. பசீல்,  
 ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் எம்.எச்.வஹாப் (இஸ்லாஹி), ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவர் ஏ.எல். ஜூஹிர், உறுப்பினர் ஏ.எல். தாஹா செயினுடீன் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், வகுப்புசார் பிரதிநிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தர்.
READ MORE | comments

மூதூரில் பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்





அஸ்ஹர் இப்றாஹிம்

மூதூர் பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் இன்று இவ்வாண்டுக்கான பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.முபாரக் அவர்களின் தலைமையில்  சம்பூர் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம்.ஜயவிக்ரம  பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அரூஸ், பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபலரத்தினம், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், சுகாதார வைத்திய அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர், வைத்தியர்கள்  கலந்து சிறப்பித்தனர். 

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக கலை இலக்கிய மலர் "முத்து - மலர் 4"  வெளியீடு செய்யப்பட்டதோடு மூதூர் பிரதேசத்தை சார்ந்த 41 கலைஞர்கள்  பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு கலை கலாசார நிகழ்வுகளும்  இடம்பெற்றன.
READ MORE | comments

சாய்ந்தமருது நஸ்லின் றிப்கா அம்பாறை மாவட்ட இலக்கிய போட்டியில் முதலிடம்

 



அஸ்ஹர் இப்றாஹிம்

கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய போட்டித் தொடரில் "வீழ்வேன் என்று நினைத்தாயோ " எனும் தலைப்பில் திறந்த பிரிவில் செய்யுளாக்கம் போட்டியில் சாய்ந்தமருது எம்.ஸி.நஸ்லின் றிப்கா அன்ஸார் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

READ MORE | comments

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி கலைப்பிரிவு மாணவர்களுக்கு நாடகமும் அரங்கியலும் செயலமர்வு

 



அஸ்ஹர் இப்றாஹிம்

பட்டிருப்பு மத்திய மகா வித்தி
யாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிகுடியில் கடந்த சனிக்கிழமை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு
தோற்றவிருக்கும் கலைப்பிரிவு
நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும்  மாணவர்களுக்கான கற்பித்தலுடன் கூடிய செய்முறை செயலமர்வு இடம்பெற்றது.

பாடசாலை முதல்வர் எம். சபேஸ்
குமார் அவர்களின் வழிகாட்ட
லிலும் கலைப்பிரிவு பகுதித்தலைவர்
மற்றும் ஆசிரியர்களின் நெறிப்படுத்த
லிலும் இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச் செயலமர்வுக்கு வளவாளராக
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி
எஸ்.சந்திரகுமார்  கலந்து
கொண்டு சிறப்பித்தார்கள்.
READ MORE | comments

சாரதி அனுமதி பத்திரத்தில் புதிய மாற்றம்..! விரைவில் நடைமுறை

 


வாகன சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

அபராதங்களை விதிக்கும் முறை 

சாரதி அனுமதி பத்திரத்தில் புதிய மாற்றம்..! விரைவில் நடைமுறை | Vehicle License New System Sri Lanka

இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த திட்டம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பெரும் எண்ணிக்கையில் ஓய்வு பெறும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் : தாய் -சேய் சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் !


 அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தாய் சேய் நல சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.


குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் 60 வயதை கடந்த பெண் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் மற்றும் சேய் நலச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சுகாதார அமைச்சிடம் எந்த திட்டமும் இல்லை என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

திருகோணமலையில் இருந்து கல்முனையை நோக்கிய பசுமைப்புரட்சி விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டியோட்டம்

Monday, December 26, 2022

 


அஸ்ஹர் இப்றாஹிம்


"துவிச்சக்கரவண்டி ஓட்டமா மூலமாக  மீள் காடாக்கம்" என்ற பாரியதொரு சூழலியல்சார் எண்ணக்கருவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அவர்கள் மத்தியில்  விழிப்புணர்வூட்டும் CYCLING GREEN குழுமத்தின் துவிச்சகரவண்டி ஓட்டம் இன்று திருகோணமலையில் இருந்து கல்முனை  வரை ஒழுங்கு செய்யப்பட்டது. 

இதன்போது மூதூரில் இயங்கும் மூதூர் ரைடர்ஸ் ஹப் (MUTUR RIDERS HUB), எலைட் அகடமி (ELITE ACADEMY) , மூதூர் லயன்ஸ் கழகம் (Lions Club of Muthur United ) என்பன ஒன்றிணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு செய்தனர். 
இதன்போது 2000 இற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் அன்பளிப்பு செய்யப்பதோடு அவற்றை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான வழிகாட்டலும்  தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முஹம்மட் றியாஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  
READ MORE | comments

இந்த வருடத்தின் இறுதியில் 30,000 அரச ஊழியர்களுக்கு ஓய்வு !

 




இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களை சமநிலைப்படுத்துவதற்கான பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்வி அமைச்சில் 800 வெற்றிடங்கள் உள்ளதாகவும், விரைவில் இதற்கான பரீட்சைகள் நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல்

 


ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன், உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்புடன் ஒப்பிடும் போதே ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதம் குறைவு

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல் | Sri Lanka Diesel Price Today Decrease

நாட்டில் எரிபொருள் பயன்பாடு தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் ஒருவர் கூறுகையில், நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

எரிபொருளின் தேவை

50 முதல் 100 ரூபாவால் சடுதியாக குறையவுள்ள எரிபொருள் - வெளியான தகவல் | Sri Lanka Diesel Price Today Decrease

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.

நெருக்கடிகளுக்கு முன்னர் உள்ள காலப்பகுதிகளில் சுமார் 4000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்பட்ட நிலையில் தற்போது அது 2000 மெட்ரிக் தொன்களாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

READ MORE | comments

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 18 வருடங்கள் பூர்த்தியானதையொட்டி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நினைவு நிகழ்வு

 


அஸ்ஹர் இப்றாஹிம்

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்த அனைத்து இன் மக்களினதும்  நினைவாக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை  இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும்,துஆ பிராத்தனையும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் ,  அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் தாதி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.  
READ MORE | comments

முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் ஓட்டுத்தோழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

 



அஸ்ஹர் இப்றாஹிம்

30 வருட காலமாக இயங்காமல் இருந்த முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு  விஜயம் செய்த கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்  காதர் மஸ்தான் , ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்  குலசிங்கம் திலீபன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரதேச செயலாளர், அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு கள ஆய்வு  விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதுடன் இன்னும் ஒரு சில மாதங்களில் குறித்த ஒட்டு தொழிற்சாலையை செயற்பாட்டுக்குரியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

READ MORE | comments

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்: ஜனவரி 2ம் திகதி முதல் நடைமுறை


உறுதி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கையின் அரச ஊழியர்கள் புதிய ஆண்டுக்கான முதல் நாளில், நாடு பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதால் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே வெளியிட்டுள்ளார்.

கிராமப்புற அலுவலகங்கள் முதல் தேசிய உணவுப் பாதுகாப்புக்குழு வரையிலான பொது ஊழியர்கள் தங்கள் வழக்கமான கடமைகளைத் தாண்டி இந்த தேசியப் பொறுப்பைச் செய்ய தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று மாயாதுன்னே கூறியுள்ளார்.

அத்துடன் அரச செலவினங்களைக் குறைப்பதற்கும், அரச வருவாயை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் 

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்: ஜனவரி 2ம் திகதி முதல் நடைமுறை | Government Employee Government Staffs Salary

பொருளாதார நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்ள மற்ற நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களிலிருந்து அரச ஊழியர்கள் பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்றும் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய மத்திய அரசு, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, 'செழிப்பு மற்றும் சிறப்பின் காட்சிகள்' என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை அரச துறை ஊழியர்கள் எடுக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

அனைத்து பெற்றோர்களும் , பிள்ளைகளும் கட்டாயம் படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்

 


Kurunews.com

26-12-2022


இலங்கை மாணவர்களை ஆக்கிரமித்து உள்ள ஐஸ் போதைப் பொருள் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும்.

*▫️ஐஸ் போதைப் பொருள் என்பதன் சுருக்கமான வரைவிலக்கணம்*

பனிக்கட்டி (ஐஸ் கட்டி) வடிவில் அல்லது பளிங்கு துகள்கள் வடிவில் இருக்கும் இந்தப் போதைப்பொருளின் உண்மையான பெயர் *மெதம் பெடலின்* ஆகும். 

இது ஆய்வகங்களில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு இரசாயனப் பொருள் ஆகும்.

இது மனிதனின் மைய மூளை நரம்புத்தொகுதியினைத் தூண்டி *தற்காலிகமான ஒரு இன்பத்தை வழங்கும்*


இந்தப் போதைப் பொருளின் மிகக்கொடிய ஒரு தன்மை என்னவென்றால் இதனை *ஒரு தடவை நுகர்ந்தாலும் அதனுள் இருந்து மீள முடியாமல் போய் விடும்* என்பதாகும்

*▫️ஐஸ்  பாவனைக்கு உள்ளாவதன் கொடிய விளைவுகள் என்ன?*

• வயது வித்தியாசம் இன்றி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட நேரிடும்

• வாழ்க்கை வெறுத்து, நிதானம் தவறிய நிலைக்கு தள்ளப்பட்டு சிறுபிள்ளை செய்யும் வேலை ஒன்றைக் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

•தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் இல்லாமல் சென்று , மீண்டும் தொடர்ந்து பல நாட்கள் தொடர்தூக்கத்தில் இருக்க நேரிடும்

•வழமையாக இருக்கும் உடல் எடை தீவிரமாக குறைந்து மோஷமான உடல் தோற்றத்தை உருவாக்கும்.

•பற்கள்  அனைத்தும் கரை படிந்து, உருக்குலைந்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கும்.

•இரத்தபந்த உறவுகளை கூட அடையாளம் தெரியாமல் சென்று  ஆன் பெண் வேறுபாடு இல்லாமல் , வயது வித்தியாசம் பார்க்காமல் நடந்துகொள்ளும் கொடூர மிருகங்கள் போல் நடவடிக்கைகள்  மாற்றமடையும்.

• இறுதியில் தன்னை தானே தாக்கிக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை முடிக்க நேரிடும்.

*🔴உங்கள் பிள்ளைகள் இந்தப் பாவனைக்கு உள்ளாகி இருப்பார்களா❓*

• உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் *உஷார் ஆகுங்கள்‼️*

•உடல் தோற்றங்களில் அக்கறை காட்டாத விதத்தில் நடந்து கொண்டால் *உஷார் ஆகுங்கள்‼️*

•வழமைக்கு மாற்றமான செயல் நடத்தைகளை அவதானித்தால் *உஷார் ஆகுங்கள்‼️*

•காரணம் இல்லாமல் சிரித்தல்,  காரணம் இல்லாமல் பேசுதல் போன்ற நடவடிக்கைகள் தென்பட்டால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•எக்காரணமும் இன்றி தீவிரமாக உடல் வியர்த்தால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•கண்களை வேகமாக அசைத்தால் அல்லது கண்கள் அரைவாசி மூடியது போன்று சிவந்து காணப்பட்டால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•வழமைக்கு மாற்றமாக உணவுகளில் விருப்பமின்றி நடந்தால்  *உஷார் ஆகுங்கள்‼️*

*எனது மகன், மகள் தவறு மாற்றாங்கள் என்ற குருட்டு நம்பிக்கையை விட்டு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருங்கள்*

 

NURSERY செல்லும் மாணவர்கள் முதல் உயர்தரங்கள் கற்கும் மாணவர்கள் வரை அனைவரும் இலக்கு வைக்கப்பட்டு உள்ளனர்

போதைப் பொருள்  என்று தெரியாமல் கூட உங்கள் பிள்ளைகளில் உடலிற்கு செல்வததற்கான வாய்ப்புக்கள் ஏராளம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

*பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்❓*

▫️தயவு செய்து வீட்டு உணவுகளை மாத்திரம் பாடசாலைக்கு கொடுத்து அனுப்புங்கள்.


*பாடசாலை சிற்றுண்டிககளில் கூட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.*

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக  எவரும் எதையும் செய்யலாம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. தயவு செய்து இந்த விடயத்தில் எவர்களையும் நம்ப வேண்டாம். 

▫️பகுதி நேர வகுப்புக்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணிப்பு செய்யுங்கள் .

▫️வீட்டு ,வகுப்பறை குப்பைத் தொட்டிகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள்,கண்ணாடி குழாய்கள், மூடி இல்லாத பேனா,எரித்த பத்திரிகை ,மூடி இல்லாத லைட்டர் போன்றவைகள் தென்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

▫️பிள்ளைகளுடன் அதிக நெருக்கத்தை உருவாக்குங்கள்

▫️செல்போனின் செயற்பாடுகள் என்றும் உங்கள் கண்காணிப்பில் இருக்கக் கூடியதாக அமைத்து வையுங்கள்.


▫️காரணம் இன்றி பணம் கொடுப்பதை முற்று முழுதாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*பெண்பிள்ளைகள் அதிகமாக இலக்கு வைக்கப்பட்டு உள்ளதோடு, பாதிக்கபட்டும் உள்ளனர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் என இவரை சந்தேகித்தாலும் உடனடியாக உரிய தரப்பினருக்கு தகவல் வழங்குங்கள்*

கிட்டத்தட்ட உங்கள் கழுத்தில் சுருக்கு விழுந்தமாதிரியான ஒரு பரிதாபமான ஒரு நிலைதான் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள், கொடிய பிடியிலிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுங்கள்.

READ MORE | comments

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதிலும் உள்ள உணவகங்கள் மூடப்படும் : அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் !

Sunday, December 25, 2022


 எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதிலும் உள்ள உணவகங்களை மூடப்போவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் அசேல சம்பத் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரி முதலாம் திகதி மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஹோட்டல்கள் மூடப்படும். மறுபுறம், இந்த முட்டை பிரச்னையை தீர்க்காவிட்டால், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து, பேக்கரிகளும் மூடப்படும் என தெரிவித்தார் .
READ MORE | comments

தாழமுக்கம் தொடர்பான தகவல்கள் !


 இன்று காலை 05.30 மணிக்கு செய்யப்பட்ட பகுப்பாய்வுகளின்படி தாழமுகம் தொடர்பான தகவல்கள்:


நேற்றைய (24.12.2022) தினம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து வந்து இன்று காலை 05.30 மணிக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.

இது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு-வட கிழக்காக 110km தூரத்திலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 150km தூரத்திலும்

நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 330km தூரத்திலும்

சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 500km தூரத்திலும் காணப்படுகின்றது.

இது இன்று மதியம் தென்மேற்கு திசையில் மேலும் நகர்ந்து திருகோணமலை பிரதேசத்தின் ஊடாக இலங்கையை ஊடறுத்து சென்று நாளை காலை கன்னியாகுமரியின் Comorin பிரதேசத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது 45km/h-55km/h வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65km/h வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை மறுதினம் முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும்.

இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இன்ற காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனத்த மழை பெய்யும் எனவும்

சில பிரதேசங்களில் 150mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் காலி முதல் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரும் வரை துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும்,

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை எதிர்வு கூறலை அவதானமாக செவிமடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சூரிய குமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.


READ MORE | comments

இன்று நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ உறவுகள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

 


இன்று நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ உறவுகள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

READ MORE | comments

இந்த வருடத்தில் 61 சுற்றிவளைப்புகள் : இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு !

Saturday, December 24, 2022


 இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.


அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

09 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், 18 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் !

 பாறுக் ஷிஹான்)




மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் வெள்ளிக்கிழமை(23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது.


இவ்வாறு முதலை பிடியினால் காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
READ MORE | comments

பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

 



24-12-2022

சகல பாடசாலைகளைகளில் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும்.

மாணவ மாணவியருக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய பிரஜைகளை உருவாக்குவது இதன் நோக்கங்களாகும்.


READ MORE | comments

வருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப்படும் விதம் !

Friday, December 23, 2022


 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அதனடிப்படையில்,

ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை.

சம்பளம் ரூ.150,000 என்றால் வரி ரூ. 3500

சம்பளம் ரூ.200,000 என்றால் வரி ரூ. 10,500

சம்பளம் ரூ.250,000 என்றால் வரி ரூ. 21,000

சம்பளம் ரூ.300,000 என்றால் வரி ரூ. 35,000

சம்பளம் ரூ.350,000 என்றால் வரி ரூ. 52,500

சம்பளம் ரூ.400,000 என்றால் வரி ரூ. 70,500

சம்பளம் ரூ.10 லட்சம் என்றால் வரி ரூ. 286,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
READ MORE | comments

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்கள் கைது !

 


பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, இது தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு - கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை

Wednesday, December 21, 2022

 


மழை 

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது.

இதன் காரணமாக இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்று அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் இன்னும் சிறிது நேரத்தில் கன மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.

26.12.2022 வரை மழை

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு - கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை | Weather Today Sri Lanka

அதேவேளை எதிர்வரும் 26.12.2022 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |