Home » » ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

 


ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா அவர்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .


அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயதுடையவர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ( 9g 850mg) ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் ,
அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது இவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது

இன்றிலிருந்து முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத்


தண்டணை 7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |