Advertisement

Responsive Advertisement

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதிலும் உள்ள உணவகங்கள் மூடப்படும் : அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் !


 எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதிலும் உள்ள உணவகங்களை மூடப்போவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன் தலைவர் அசேல சம்பத் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரி முதலாம் திகதி மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஹோட்டல்கள் மூடப்படும். மறுபுறம், இந்த முட்டை பிரச்னையை தீர்க்காவிட்டால், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து, பேக்கரிகளும் மூடப்படும் என தெரிவித்தார் .

Post a Comment

0 Comments