Home » » மூதூரில் பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்

மூதூரில் பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்





அஸ்ஹர் இப்றாஹிம்

மூதூர் பிரதேச செயலகத்தில் ஏற்பாட்டில் இன்று இவ்வாண்டுக்கான பிரதேச சாகித்திய விழாவும் கலைஞர் கெளரவிப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.முபாரக் அவர்களின் தலைமையில்  சம்பூர் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.எம்.ஜயவிக்ரம  பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அரூஸ், பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபலரத்தினம், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், சுகாதார வைத்திய அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர், வைத்தியர்கள்  கலந்து சிறப்பித்தனர். 

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக கலை இலக்கிய மலர் "முத்து - மலர் 4"  வெளியீடு செய்யப்பட்டதோடு மூதூர் பிரதேசத்தை சார்ந்த 41 கலைஞர்கள்  பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு கலை கலாசார நிகழ்வுகளும்  இடம்பெற்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |