உலகையே திரும்பிப்பார்க்க வைத்த விமானி அபிநந்தனின் செயல்! பாகிஸ்தானிலும் தமிழனின் புகழ்!

Thursday, February 28, 2019

 இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வீசியுள்ளது. மேலும், இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே குண்டு வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இந்திய ராணுவ விமானம் பதிதாக்குதலுக்கு பாகிஸ்தானுக்குள் சென்றது.
நேற்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவரை கைது செய்த வீடியோவையும் வெளியிட்டனர்.





போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். டில்லியில் பணிபுரிந்து வருகிறார். அவரது பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர் என்றும் அவரது மாமா செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனையடுத்து,அபிநந்தனை கண்களை மூடி, கைகளை கட்டி ரத்தம் படிந்த முகத்துடன் இழுத்துச்செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்ததால், இந்திய மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.


அபிநந்தனை கண்களை மூடி, கைகளை கட்டி ரத்தம் படிந்த முகத்துடன் இழுத்துச்செல்லும்போதும் நெஞ்சை நிமிர்த்தி கெத்தாக நடந்துவரும் வீரத்தமிழன் அபிநந்தனின் செயல் உலகையே வியக்கவைத்தது. உயிர்போகும் நிலைமை வந்தால்கூட தாய்நாட்டிற்காக அடிபணியாமல் நெஞ்சை நிமிர்த்தி பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் இராணுவ மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில்.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கேள்வி: உங்களுடைய பெயர் என்ன ?


பதில் :wing Commander அபினந்தன்.
பாகிஸ்தான் இராணுவ அதிகாரி: நாங்கள் உங்களை நன்றாக நடத்தினோமா?
பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். அவர்களிடமிருந்து என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து, உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி. இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.


கேள்வி : நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்?.
பதில்: என்னால் இதற்கு பதில் அளிக்க முடியும். ஆனால் எந்த இடம் என்று குறிப்பிட்டு நான் சொல்ல மாட்டேன்.
தென்னிந்தியாவில் இருந்து வருகிறேன்.
கேள்வி : உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
பதில் : ஆம் sir! ஆகி விட்டது.
கேள்வி : நீங்கள் அருந்தும் டீ நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பதில் : டீ மிகவும் அருமையாக உள்ளது என்றார்.
கேள்வி : நீங்கள் வந்த விமானத்தின் பெயர் என்ன என்றார் ?
பதில் : Sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
கேள்வி : உங்களுடைய இலக்கு என்ன ?
பதில் : Sorry மேஜர் அதை என்னால் சொல்ல முடியாது.
உயிரே போனாலும் தாய் நாட்டின் ரகசியத்தை சொல்ல மாட்டேன் என்று வீரத்தோடு அங்கு இருக்கும் நீ வீரத் தமிழன் என இந்தியர்கள் புகழ்ந்துவருகின்றனர்.
READ MORE | comments

மாகாண சபை தேர்தல்கள் இந்த வருட நடுப் பகுதியில்!

Wednesday, February 27, 2019

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேனரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன.
இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் என பலரும் தேர்தலை நடாத்த வேண்டுமென கோரி வருகின்ற போதும் தேர்தல் நடாத்தப்படாமல் இழுபட்டுக் கொண்டே செல்கின்றது.
இவ்வாறானதொரு நிலைமையிலையே அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாண சனபை முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்தாவிட்டால் அநன்த மாகாண சபை முறைமை எதற்காக என்றும் அதற்கான தேர்தலை தொடர்ந்தும் நடாத்தாவிட்டால் அந்த முறைமையையே நீக்கலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு மாகாண சபைக்கான தோர்தல் நடாத்தப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்த ஆண்டுக்குள் மாகாண சனபைக்கான தேர்தல் நடாத்தப்படாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் இந்தப் பதவியில் இருந்தே தான் விலத்தப் போவதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளரான மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிய வருகின்றது. ஆனால் அவ்வாறு உடனடியாக தேர்தலை நடாத்துவதற்குரிய சாத்தியங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் தேர்தலை நடாத்துவதாயின் ஆகக் குறைந்தது 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையாக உள்ளது.
ஆதனால் இத் தேர்தல் மே 31 ஆம் திகதியளவனில் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை. இவ்வாறானதொரு நனிலையிலையே மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியளவில் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தேர்தல் திணைக்கள தகவல்கனள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் மாகாணங்களுக்கான இத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியமானது. ஆனால் தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
இதே வேளை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றும் தேர்தலை நடாத்த தயார் என்றும் தேர்தலை சந்திக்க தயார் என்றும் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தாலும் தேர்தல் என்பது நடக்காமலே உள்ளது. ஆகவே இத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் உறங்குபவர்களை எழுப்ப முடியும் ஆனால் உறங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதென்பது போலவே கருதுவதாக தெரிய வருகின்றது.
READ MORE | comments

விமானி அபினந்தன் பாகிஸ்தான் பிடியில்! இந்தியா ஒப்புக்கொண்டது !!

இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கியதை இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தற்போது உறுதி செய்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், "இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி அபினந்தனை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அபினந்தன் இன்னும் திரும்பவில்லை. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்.
இந்த சந்திப்பில் வேறு எந்த கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கப்போவதில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தகவல் கிடைக்கும்போது உங்களுக்கு தெரிவிக்கிறோம்" என சுருக்கமாகக் கூறிச் சென்றார்.
READ MORE | comments

விமானப்படை தாக்குதல் அபாயம்? இந்தியா-பாகிஸ்தானில் பல விமான நிலையங்கள் மூடல்


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்கள் எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன் தயார்நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதனால் இருநாடுகளும் எல்லைப்பகுதியில் மீண்டும் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, பூந்தார், காகல் விமான நிலையங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், டெல்லிக்கு வடக்கே வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாகிஸ்தானின் உள்ள இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், சிலால்கோர் ஆகிய விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் உள்நாட்டு விமானச் சேவைகள் மட்டுமின்றி, பிறநாடுகளில் இருந்து மேற்கண்ட விமான நிலையங்களில் இறங்கி வேறு விமானங்கள் மூலம் மற்ற இடங்களுக்கு செல்லும் ‘டிரான்சிஸ்ட்’ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல வெளிநாட்டு விமானங்கள் இங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மிக வீரியமான விமானப்படை தாக்குதலும், அதற்கு எதிர்தாக்குதலும் விரைவில் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.(15)
READ MORE | comments

பறவையால் செயலிழந்த என்ஜின் : ஒற்றை எஞ்சினுடன் 2 மணி நேரமாக வானில் பறந்த ஶ்ரீலங்கன் விமானம்


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி பயணித்த ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்றின் இயந்திரத்தில் பறவையொன்று மோதியதால் அந்த இயந்திரம் இயங்காத நிலையில் மற்றைய தனி இயந்திரத்தின் உதவியுடன் இரண்டு மணித்தியாளங்களின் பின்னர் அந்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிரக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்த விமானத்தில் 268 பயணிகளும் 12 ஊழியர்களும் இருந்துனர்.

குறித்த விமானம் இந்திய எல்லைக்கு மேலாக பயணித்துக்கொண்டிருந்த போது பறவையொன்று முன்பக்க இயந்திரமொன்றில் மோதியுள்ளது. இதன்போது அந்த இயந்திரம் செயலிழந்துள்ளது. எவ்வாறாயினும் மற்றைய தனி இயந்திரத்தின் உதவியுடன் தொடர்ந்தும் டுபாய் நோக்கி பயணிக்க முடியாது அந்த விமானம் மீண்டும் 2 மணித்தியாளங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் வேறு விமானமொன்றின் ஊடாக பயணிகள் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -(3)
READ MORE | comments

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி? காணொளி ஆதாரமென்கிறது பாகிஸ்தான் (video)

இந்தோ பாகிஸ்தான் எல்லையில் கடும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமது F-16 போர்விமானங்கள் இந்திய வான்படையின் இரண்டுகலங்களை சுட்டுவீழ்த்தியதாக இன்று பாகிஸ்தான் படைத்தரப்பு உரிமைகோரியுள்ளது.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லையென இந்தியா மறுத்தாலும் சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து ஒரு விமானி கைதுசெய்யப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்திய விமானியென கூறப்படும் காயங்களுக்கு உள்ளான ஒருவரையும் அவரது குரலையும் காணொளி ஒன்றில் காட்டியுள்ளது.
அந்த காணொளியில்"என் பெயர் விங் கொமாண்டர் அப்ஹி நந்தன். என் சேவை எண்27981 . நான் ஒரு பைலட். என் மதம் இந்து மதம். ஏன ஆங்கிலத்தில் குறிப்பிடும்குரல் அதற்குமேலும்; விபரங்களை சொல்லும்படி பணிக்கப்பட்டபோது இவ்வளவுதான் இப்போதைக்கு சொல்லமுடியுமென அந்தக்குரல் குறிப்பிடுகிறது.


READ MORE | comments

மட்டக்களப்பு தாழங்குடாவில் நடந்த பயங்கரம்! உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 60 வயது மதிக்கத்தக்க பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுடன் இன்னமும் சடலம் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கொண்ட சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்


புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது, அதில் இருந்த பைலட் பாராசூட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. (15)
READ MORE | comments

வரவு செலவை தோற்கடிக்க மகிந்த அணி இரகசிய திட்டம்!


அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் இதன்போது அதனை தோற்கடிப்பதற்கு எடுக்கப்படக் கூடிய சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. -(3)
READ MORE | comments

மட்டக்களப்பு - கொழும்பு விமான சேவை வெள்ளிக்கிழமை ஆரம்பம்


மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமொரு உள்ளுர் விமான சேவையொன்று எதிர்வரும் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

 இதன் முதலாவது சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விமானசேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம் பெறவுள்ளன.

இந்த தினங்களில் தினமும் காலையில் 10 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மட்டக்களப்பு உள்ளுர் விமான நிலையத்தினை வந்தடையும். பின்னர் 11.30 மணிக்கு திருகோணமலைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து பின்னர் மாலை 3.30 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

முதலில் இரண்டு பேருக்காக தயாராகும் தூக்கு மேடை

Tuesday, February 26, 2019


முதற் கட்டமாக இரண்டு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தீர்மானத்தை அடுத்த வாரமளவில் ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளோரில் 18 பேருக்கு அந்த தண்டனையை வழங்க முடியுமென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

ஏறாவூரில் மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவு!


ஏறாவூரில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொல்களங்களையும், மாட்டிறைச்சிக் கடைகளையும் இரு வாரங்களுக்கு மூடுமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பணிப்புரையை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏறாவூர் நகர சபை மற்றும் பற்று பிரதேச சபைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி ஏறாவூர் நகர சபைப் பிரிவில் உள்ள 14 இறைச்சிக் கடைகள் நாளை (புதன்கிழமை) தொடக்கம் இரு வாரங்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகள் காரணமாக அதிகளவான மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு சுகாதாரமான மாட்டிறைச்சிகளை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஜெனிவா தீர்மானங்களை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்! - பிரித்தானியா விடாப்பிடி

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்
மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. எனினும், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
உலகின் சில நாடுகளது மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கரிசனை கொண்டுள்ளது. இலங்கையில் இராணுவத்தினர் அதிகளவான காணிகளை மக்களிடம் வழங்கி வரும் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது. ஆனாலும், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மதுஷின் கூட்டாளி வீட்டில் இராணுவ சீருடைகள், ரவைகள் மீட்பு!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையின் பிரபல பாதாளக் குழு தலைவரான மாக்கந்துர மதுஷின் பிரதான துப்பாக்கிதாரியின் கம்புறுப்பிட்டிய வீட்டிலிருந்து இராணுவ சீருடைகள், ரி-56 துப்பாக்கி ரவைகள் 21 உள்ளிட்ட பொருட்கள் நேற்று மீட்கப்பட்டதாக மாத்தறை குற்றவிசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் வீட்​டிலிருந்தே குறித்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பன்னிப்பிட்டிய பிரதேச வீடொன்றிலிருந்த 7000 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கைவிலங்கினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரின் 53 வயடைய தந்தை குறித்த வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
READ MORE | comments

1971 இந்திய- பாகிஸ்தான் யுத்தத்தின் பின்னர் முதல் தடவையாக இந்திய ஜெட் விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல்


1971 ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் யுத்தத்திற்கு பின்னர் முத்த தடவையாக பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைந்து இந்திய போர் விமானங்கள் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தமது விமானப்படை பதில் நடவடிக்கைகளை எடுத்தபோது இந்திய விமானங்கள் அவசரமாக குண்டுகளை போட்டுவிட்டு திரும்பிச்சென்று விட்டதாகவும் சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இந்தியா, “பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், பாகிஸ்தானின் வான் எல்லையை இந்திய விமானங்கள் மீறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய துருப்புகளும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்டகால நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு இருக்கும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
“இந்திய விமானப் படை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாக செயல்பட்டுவிட்டது” என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை விமானங்களை துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தது என அவர் டிவிட்டரில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
D0TOxK0XgAEGzDm
இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் விமானிகளை வணங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை விமானிகளின் தைரியத்துக்கு தலை வணங்குகிறேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
ஆனால், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
READ MORE | comments

சித்திரவதைகளுக்கு எதிராக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஐ.நா அறிக்கை

சித்திரவதைகளில் ஈடுபட்டார்கள் என்று இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலரது பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இலங்கை அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் அது இலங்கையின் அரசியல் கொள்கைகளில் அர்த்தமற்றதாகி விடும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சித்திரவதைகளுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பல்கலைக்கழகங்களுக்கு 660 மாணவர்கள் கூடுதலாக அனுமதி

Monday, February 25, 2019





தேசிய பல்கலைக்கழகங்களுக்கு வழமையாக அனுமதிக்ப்படும் மாணவர்களின் தொகையைவிடவும் கூடுதலாக 660 மாணவர்களை இவ்வருடம் அனுமதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.

2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.

கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பட்டத்தக்கது.
READ MORE | comments

பஸ்களில் பாடல்களை ஒலி/ஒளி பரப்புவதில் கட்டுப்பாடு


பொதுப் போக்குவரத்து பஸ்களில் ஒலி , ஒளிபரப்படும் பாடல்கள் தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பாடல்களையே ஒலி /ஒளிபரப்ப முடியுமென்பதுடன் அதற்கான சத்த அளவும் நிர்ணயிக்கப்படவுள்ளது.

தனியார் பஸ்களில் ஒலி /ஒளி பரப்படும் பாடல்கள் தொடர்பாக பயணிகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது வடக்கு


காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தின் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என்பன முடக்கப்பட்டுள்ளன.அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கிளிநாச்சி அரச பேருந்து சாலையில் அனைத்து பேருந்துகளும் தரிக்க விடப்பட்டுள்ளதுடன், சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் இன்று நடத்தப்படுடும் முழு அடைப்புப் போராட்டத்தினால், வுனியா மாவட்டம் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. இன்று வவுனியாவில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார், அரச பேருந்து சேவைகள் நடைபெறவில்லை. மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம் முற்றாக செயலிழந்துள்ளது. வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. திருநெல்வேலிச் சந்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீறி வர்த்தகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.(15)

24 25
READ MORE | comments

முடிவுக்கு வருகிறதா அம்லாவின் கிரிக்கெட் வாழ்க்கை?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டு ள்ளார். அம்லாவுக்கு இடமில்லை.
தென்னாபிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ம் திகதி ஜோகன்னஸ் பேர்க்கில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் வருமாறு
டு பிளசிஸ், டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ் , இம்ரான் தாஹிர் , டேவிட் மில்லர்,வியான் முல்டர் , லுங்கி நிகிடி , அன்ரிச் நோர்ட்ஜே, பெலுக்வாயோ , பிரிட்டோரியஸ் ,ரபாடா ,ஷம்சி, ஸ்டெயின் ,வான் டெர் டஸ்சன்.
READ MORE | comments

அடுத்தமாத இறுதி வாரத்தில் நேர்முகப்பரீட்சை!

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும்.
இதுவரை கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் தகவல்கள் கணனிக்குள் பதியப்பட்டு வருவதாக ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

சர்வதேசப் பாடசாலைகள் கல்வியமைச்சில் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்படும் - அகில விராஜ் காரியவாசம் -

Sunday, February 24, 2019


இலங்கையில் இயங்குகின்ற சகல சர்வதேசப் பாடசாலைகளும் கல்வியமைச்சில் பதிவுசெய்யப்படுவதைக் கட்டாயமாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது

சர்வதேசப் பாடசாலைகள் உகந்த தராதரங்களைப் பேணுகின்றனவா என்பதை இந்த கட்டாயப்பதிவின் மூலம் உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்திருக்கிறார்.

" நாட்டில் எத்தனை சர்வதேசப்பாடசாலைகள் இயங்குகின்றன என்பதையும் எம்மால் உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.இந்த பாடசாலைகள் மிகப்பெருந்தொகைப் பணத்தை கட்டணமாக அறவிடுவதாகவும் அவற்றின் கல்வித்தரம் குறித்தும் பெருமளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

ஒரு வகுப்பில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, வசதிக்குறைபாடுகள், ஆசிரியர்கள் சிலரின் கல்வித்தராதரம் ஆகியவை பிரச்சினைக்குரியவையாக இருக்கின்றன" என்று காரியவாசம் குறிப்பிட்டார்.

குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொள்வதற்கு சர்வதேசப்பாடசாலைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அவ்வாறு நிவர்த்திசெய்யாத பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.சர்வதேசப்பாடசாலைகள் வெறுமனே வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கல்வியமைச்சர் கூறினார்.
READ MORE | comments

நாளை முதல் மீண்டும் மழை! இடி , மின்னல் தொடர்பாக அவதானமாக இருக்கவும்


நாளை (25) முதல் நாட்டில் பல பிரதேசங்களில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இடி , மின்னல் நேரத்தில் அது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
READ MORE | comments

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வடமாகாணத்தின் தலைநகரானயாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ( ADJF ) பெப்ரவரி மாதத்திற்கான கூட்டம்  கடந்த  சனிக்கிழமை  காலை10.00 மணிக்கு தலைவர் கலாபூசணம் எம்.பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
2018/2019ம் ஆண்டுக்கான நிருவாக சபையின் இறுதி மாதக் கூட்டமாக இந்தக் கூட்டம் நடைபெற்றதுபோரத்தின் எதிர்காலநடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


READ MORE | comments

கொழும்பில் நேற்றிரவு வான் ஒன்றைத் திறந்த அதிரடிப் படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பில் நேற்றைய தினமும் 294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுளதாக அதிர்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதியைவிட இது அதிகமானதாக காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடதொகுதி வாகனத் தரிப்பிடத்தில் வைத்து ஒரு சிற்றுந்திலிருந்தே இவை நேற்றிரவு மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி 2.94 பில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இது கைப்பற்றப்பட்டதுடன் பாணந்துறை கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட போதைபொருளில் நேற்றிரவு கைப்பற்றப்பட்டதே அதிகமானதாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் நாள் 231 கிலோவும், டிசம்பர் 31ஆம் நாள் 278 கிலோவும், இவ்வாண்டுஜனவரி மாதம் 17ஆம் நாள் 5 கிலோவும், ஜனவரி 22ஆம் நாள் 90 கிலோவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
READ MORE | comments

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது

Saturday, February 23, 2019

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டிய நிகழ்வுகள்  பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி  மாணவர்களால்  இன்று  ( 22 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  பாடசாலை பிரதி அதிபர்,எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என்.கருணாநிதி  மற்றும் சாரணிய  மாணவர்களும் கலந்து கொண்டனர்.




READ MORE | comments

கிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - பொன்னுத்துரை உதயரூபன் -


கிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும்  ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என    இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கான கட்டாய  இடமாற்றம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டும் என கிழக்குமாகாண ஆளுநர்  அறிவித்துள்ளமை  சட்டநியாயாதிக்கத்திற்கு முரணான செயற்பாடாகவுள்ளது 

அவர் மேலும் தெரிவிக்கையில் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்தின் படி தரம் 1,2 இல் ஒரு ஆசிரியரும், தரம் 3,4 இல்  ஒரு ஆசிரியரும் கற்பிக்கவேண்டும். இந்த நிலையில் இவ்வாறான இடமாற்றம் நடைபெறுவதனால் ஆரம்பக்கல்வியின் நிலைமை பெரிதும் மோசமான நிலையினை அடையும் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபமும் மாணவர்களது உரிமையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கிழக்குமாகாணத்தில் அதிகமாக ஆரம்பக்கல்வி வீழ்ச்சிகண்டு இருக்கின்றது. அதாவது கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் வெளிவலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர் இவர்களை கட்டாயமாக ஆளுநர் தான் நினைத்தபடி இடமாற்றம் செய்வது சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாகச் செயற்படுகின்றார். 
இவ்வாறு இடமாற்றம் செய்வதனால் வகை 3 ஐச் சேர்ந்த அரம்பக்கல்வியில் இருக்கும் அதிகமான பாடசாலைகள் மூடும் நிலை ஏற்படுத்தக்கூடும் .அதாவது அருகில் உள்ளபாடசாலை சிறந்தபாடசாலை என்பது சகல வளங்களையும் கொண்டதாக அமையவேண்டும் ஆனால் ஆளுநர் அவர்கள் ஆசிரியர் வளங்களை சில பகுதிகளுக்கு கிடைக்காமல் இடமாற்றம் செய்வதனால் அத்திட்டம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மத்திய அரசாங்கத்தினது கல்விக்  கொள்கைக்கு முரணாகவே ஆளுநரின் செயற்பாடு இடம்பெறுவதனைக்காணமுடிகின்றது
 பொதுச்சேவை ஆணைக்குழுவின் 1589ஃ 30 அதிவிசேட வர்த்தமானியில்; குறிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத்திட்டத்திற்கும் சேவைப்பிரமாணக்குறிப்புகளுக்கும்  அமைவாக குறிப்பிட்ட பாடசாலையில் தங்களது சேவைக்காலத்தினை நிவர்த்திசெய்யவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஇந்த நிபந்தனைகளை ஆளுநர் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 அதாவது குறித்தபாடசாலையில் நியமனத்தில் வழங்கப்பட்ட கால எல்லைவரை கடமையாற்றவேண்டும் இதனை மீறி அக்காலங்களை பூர்த்திசெய்யாத ஆசிரியர்களையும் கட்டாயம் தங்களது மாவட்டத்திற்கு  இடமாற்றம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாக இருப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளை மீறும் நடவடிக்கையாக இருக்கின்றது இதனை  வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இடமாற்றம் ஒன்று மேற்கொள்ளவேண்டுமானால் இலங்கை சனநாயகச் சோசலிய குடியரசின் தாபனவிதிக்கோவை  அந்த தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்ற சபை தொடர்பானதும் கல்வியமைச்சின் 2007 20 சுற்றறிக்கையின்படியும் இடமாற்றசபைதான் ஆசிரியர்களது இடமாற்றத்தினைத் தீர்மானிக்கவேண்டும் இதனை மாற்றி ஆளுநர் இவ் இடமாற்றத்தை வழங்குவது அவ் அதிகாரங்களை மீறும் செயற்பாடாக அமைகின்றது. 

READ MORE | comments

சிக்கலில் 59 எம்.பிக்கள் : பெயர் விபரங்கள் இதோ


நவம்பர் 14 , 15 , 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் அது தொடர்பான அறிக்கை சபையில் சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 54 எம்.பிக்களும் , ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 4 எம்.பிக்களும் , ஜே.வி.பியை சேர்ந்த ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த பெயர் விபரங்கள் வருமாறு.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

எஸ்.பி. திசாநாயக, ஆனந்த அழுத்கமகே, பிரசன்னா ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த குணசேகர , டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன , லொஹான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, ரோஹித அபே குணவர்த்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜயக்கொடி, காஞ்சன விஜயசேகர, பிரியங்கர ஜயரட்ன , சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அலுத்கமகே , ரஞ்சித் டி சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி.சானக, ஜயந்த சமரவீர , அருந்திக பெர்ணான்டோ, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச , செஹான் சேமசிங்க, தேனுக்க விதானகே, அனுராத ஜயரத்ன, சாரதா துஸ்மந்த, சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளே, சனத் நிஷாந்த பெரேரா , கனக ஹேரத் , தாரனாத் பஸ்நாயக்க , ஜனக பண்டார தென்னகோன், ரமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்ஷன டி சில்வா , ரொஷான் ரணசிங்க, அனுராத ஜயரட்ன , வாசுதேவ நாணயகார, சி.பி. ரத்நாயக , டீ.பி.ஏக்கநாயக, லக்‌ஷ்மன் யாப்பா, தாரக பாலசூரிய. லக்‌ஷ்மன் வசந்த பெரேரா, ஜனக வக்கும்புற, பந்துல குணவர்த்தன, நிசாந்த முதுகெட்டிகம, சாலிந்த திசாநாயக, பிரேமலால் ஜெயசேகர, எஸ்.பிரேமலால் ஜயரட்ன , விஜித பேருகொட, பிரியங்கர ஜெயரத்ன , சனத் நிஷாந்த பெரேரா

ஐக்கிய தேசிய கட்சி

பாலித தேவரபெரும, துஷார இதுனில் , சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக

ஜே.வி.பி

விஜித ஹேரத்

ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. -(3)
READ MORE | comments

கஞ்சிப்பானை இம்ரானின் சகா கொலன்னாவையில் கைது!


டுபாயில் மாகந்துர மதுஷுடன் கைதாகிய போதைப் பொருள் கடத்தல் காரரான கஞ்சிப்பானை இம்ரானின் நண்பர் ஒருவர் கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தில் கைதாகியுள்ளார்.

மொஹமட் நவுபர் அலி என்ற நபரே இவ்வாறாக கைதாகியுள்ளார். இவரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)
READ MORE | comments

மாசாஜ் நிலைய போர்வையில் இளம் பெண்களை விற்கும் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு


கொழும்பை அண்மித்த இரத்மலானை பகுதியில் ஆயூர்வேத மசாஜ் நிலையமென்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 4 பெண்களும் அந்த நிலையத்தை நடத்திச் சென்ற பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக கைதாகிய பெண்களில் 24 வயது முதல் 36 வயதுக்குற்பட்ட பெண்கள் அடங்குவதாகவும் இவர்கள் அங்கொடை , உடபுஸ்ஸலாவை மற்றும் கொலன்னாவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |