Home » » மட்டக்களப்பு தாழங்குடாவில் நடந்த பயங்கரம்! உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்!

மட்டக்களப்பு தாழங்குடாவில் நடந்த பயங்கரம்! உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 60 வயது மதிக்கத்தக்க பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றதுடன் இன்னமும் சடலம் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கொண்ட சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |