Home » » பறவையால் செயலிழந்த என்ஜின் : ஒற்றை எஞ்சினுடன் 2 மணி நேரமாக வானில் பறந்த ஶ்ரீலங்கன் விமானம்

பறவையால் செயலிழந்த என்ஜின் : ஒற்றை எஞ்சினுடன் 2 மணி நேரமாக வானில் பறந்த ஶ்ரீலங்கன் விமானம்


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி பயணித்த ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்றின் இயந்திரத்தில் பறவையொன்று மோதியதால் அந்த இயந்திரம் இயங்காத நிலையில் மற்றைய தனி இயந்திரத்தின் உதவியுடன் இரண்டு மணித்தியாளங்களின் பின்னர் அந்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிரக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அந்த விமானத்தில் 268 பயணிகளும் 12 ஊழியர்களும் இருந்துனர்.

குறித்த விமானம் இந்திய எல்லைக்கு மேலாக பயணித்துக்கொண்டிருந்த போது பறவையொன்று முன்பக்க இயந்திரமொன்றில் மோதியுள்ளது. இதன்போது அந்த இயந்திரம் செயலிழந்துள்ளது. எவ்வாறாயினும் மற்றைய தனி இயந்திரத்தின் உதவியுடன் தொடர்ந்தும் டுபாய் நோக்கி பயணிக்க முடியாது அந்த விமானம் மீண்டும் 2 மணித்தியாளங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் வேறு விமானமொன்றின் ஊடாக பயணிகள் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |