Home » » குழந்தை சுஜித் உயிருடன் இருக்கிறானா இல்லையா.!? உண்மை நிலவரம் இது தான்..!!

குழந்தை சுஜித் உயிருடன் இருக்கிறானா இல்லையா.!? உண்மை நிலவரம் இது தான்..!!

திருச்சி குழந்தை சுஜித் பற்றிய எதிர்பார்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டது. காரணம் இனி குழந்தை உயிர் தப்புவதற்கு 1% வாய்ப்புகள் கூட் இல்லை. வெறும் கை மட்டுமே இது வரை தெரிந்து வந்த நிலையில் நேற்றிரவு குழிதோண்டும் அதிர்வினால் தற்போது 85 அடி வரை குழந்தை சென்றுவிட்டது. ஏற்கனவே இரண்டாவது ரிக் இயந்திரம் குழி தோண்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 50 அடி கூட தோண்டப் படவில்லை.
குழந்தை 85 அடியில் இருந்தால் 90 மேற்பட்ட அடி குழி தோண்ட வேண்டும். அது மட்டும் இன்றி கீழே சென்று சுரங்கம் தோண்ட வேண்டும். கீழே சுரங்கம் தோண்டும் போது கல் பாறைகள் இருந்தால் அது இன்னும் கடினமாகும். குழி தோண்டவே இன்னும் 5 மணி நேரங்கள் தேவைபடுகிறது என மீட்பு குழுவினர் கூறி வருகின்ற நிலையில்
சுரங்கம் தோண்டும் வழியில் பாறை இருந்தால் அதற்கும் சில மணி நேரங்கள் தேவை படுகிறது. ஆக குறைந்தது 8 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்பது முடியாத விடயமாகும். அம்மா காப்பாற்றுவேன் என்றார் காப்பாற்றுவாள் என ஏங்கிக் கொண்டிருந்த குழந்தை தனது மரணம் வரை நம்பிக்கையோடு இருந்திருக்கும். விதி யாரையும் விட்டு வைப்பதில்லை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |