Home » » வரட்சியால் வடக்கு மாகாணம், மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது

வரட்சியால் வடக்கு மாகாணம், மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படியாழ்ப்பாணத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பகுதியாக, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. அங்கு, 11,640 குடும்பங்களைச் சேர்ந்த 47,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை, காரைநகர், சங்கானை, தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், 10,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளோரைக் கொண்டுள்ளன.
அடுத்த அதிகளவிலான பாதிப்பை, வடமேல் மாகாணம் சந்தித்துள்ளது. அங்கு, 82,513 குடும்பங்களைச் சேர்ந்த 281,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 149,962 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 131,051 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக, கிழக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 59,003 குடும்பங்களைச் சேர்ந்த 211,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகளவிலான பாதிப்பை, திருகோணமலை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது. அங்கு, 27,646 குடும்பங்களைச் சேர்ந்த 105,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 65,341 பேரும் அம்பாறையில் 40,548 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியின் காரணமாக, 314,049 குடும்பங்களைச் சேர்ந்த 1,093,717 (1 மில்லியன் 93 ஆயிரத்துக்கு எழுநூற்று பதினேழு) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணம், மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 133,678 குடும்பங்களைச் சேர்ந்த 462,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், யாழ்ப்பாணத்தில் 124,206 பேரும், முல்லைத்தீவில் 115,308 பேரும், வவுனியாவில் 85,771 பேரும், கிளிநொச்சியில் 83,378 பேரும், மன்னாரில் 54,152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |