தென்னாபிரிக்காவில் ஆணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பெண்கள் 3 பேரை அந்நாட்டு பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த ஆண் 31 வயதானவரெனவும் , 3 நாட்கள் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவ் இளைஞன் வீதியில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வாகனமொன்றில் வந்த பெண்கள் அவர் செல்லவுள்ள இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர்.
பின்னர் அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று முதலில் பணத்தைக் கேட்டதாகவும் , தன்னிடம் பணம் இல்லாமையால் ஆயுத த்தைக் காட்டி தன்னை கட த்தியதாகவும், பின்னர் தனக்கு குளிர்பானமொன்றைக் குடிக்க கொடுத்ததாகவும் அதனைக் குடித்ததும் தான் மயக்கமடைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப் பெண்கள் கண் மற்றும் கைகளை கட்டிப்போட்டு இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.தன்னை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: