அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் உந்துருளி மூலம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வருகை தந்த சந்தேக நபர்களை நேற்று வியாழக்கிழமை (31) சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சென்னல்கிராமம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும், 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 14 கிராம் 800 மில்லி கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 57 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மற்றும் உந்துருளி உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments