Home » » க.பொ.த சாதாரண தர பரீட்சை வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை!

க.பொ.த சாதாரண தர பரீட்சை வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை!


எதிர்வரும் 3ஆம் திகதி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடைய வகுப்புக்கள் , கருத்தரங்குகள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளுக்கும் நாளை (27)திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடிவடையும் வரை அந்த பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள் , கருத்தரங்குகள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , மாணவர் சந்திப்புக்கள் , கலந்துரையாடல்கள் போன்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் இந்த அறிவிப்பை மீறுவோர் தொடர்பாக 1911 , 119 , 0112784208 , 0112784537 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான வகுப்புகள் , கருத்தரங்குகளை தடை செய்யும் சட்டத்திற்கு அமையவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |