Home » » சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது

சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாகஆற்று மண் ஆகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இதற்காகபயன்படுத்திய ஒரு உழவு இயந்திரமும்ஒரு டிப்பர் வாகனமும்  கைப்பற்றப்பட்டுள்ளதாகசவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சவளக்கடை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி .எம்.எம்.நஜீம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டசுற்றிவளைப்பின் போது நாவிதன்வெளி பிரதேசத்தினை சேர்ந்த ஒரு உழவு இயந்திரமும்சம்மாந்துறையை பிரதேசத்தினை  சேர்ந்த ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்அதனுடன் தொடர்புடைய இரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களையும்கைப்பற்றப்பட்டுள்ள இருவாகனங்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |