Advertisement

Responsive Advertisement

விவாக மற்றும் பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டங்கள் இணைய கணனி வசதிகளுடன் ஆரம்பம்

இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம் திங்கள் முதல் ஆரம்பம்.
இணைய கணனி வசதிமூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 26.11.2018 முதல் ஆரம்பமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதல் தடவையாக கணனி வலையமைப்பூடாக இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்றுக் கௌ்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
பொதுமக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது விடயமாக மேலும் தெரிவித்த மாவட்டச் செயலாளர், தற்போது அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்  விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதியளிக்கப்பட்டுள்ளது. ‪
இணையக் கணனி வசதியின் ஊடாக இந்த நாடளாவிய மற்றும் வெளிநாட்டில் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை திங்கட்கிழமை முதல் வார நாட்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதே போன்று இலங்கையில் மாகாண ரீதியான வலய அலுவலகங்களிலும், மாவட்ட ரீதியில் மாவட்ட அலுவலகங்களிலும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் இணையக் கணனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments