Home » » மர்மப்பொருள் வெடித்து எழுதுமட்டுவாழ் இளைஞர் காலை இழந்தார்

மர்மப்பொருள் வெடித்து எழுதுமட்டுவாழ் இளைஞர் காலை இழந்தார்

எழுதுமட்டுவாழ் தெற்கில் மர்மப்பொருள் வெடித்ததில் கட்டடத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றின் கட்டடத் தொழிலாளியான மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரதீபன் (வயது- 20 ) என்பவரே இந்தச் சம்பவத்தில் இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர் உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எத்தகைய வெடிபொருள் வெடித்தது என்பது தெரியவரவில்லை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |