Home » » கனரக போர் உந்துகளில் இராணுவக் கமாண்டோக்கள்! கடும் இறுக்க நிலையில் கொழும்பு!!

கனரக போர் உந்துகளில் இராணுவக் கமாண்டோக்கள்! கடும் இறுக்க நிலையில் கொழும்பு!!

கொழும்பில் தற்பொழுது கனரக வாகனங்களுடன் முப்படையினரும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் எதிரொலியாக இன்றைய தினமும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து நேற்றைய தினமும் பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. முப்படைகளையும் சேர்ந்த சிறப்பு கமாண்டோ அணிகள் போர்க் கருவிகள் பொருத்திய போர் உந்துகளில் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை அனைத்து அனைத்து வெளிநாட்டு தூதரகங்களினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களைக் கூட்டமாக நிற்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |