Home » » கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பெரும் பதற்றம்! படையினர் மீது குண்டு தாக்குதல்... எங்கும் துப்பாக்கிச் சூடு!! (Video)

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பெரும் பதற்றம்! படையினர் மீது குண்டு தாக்குதல்... எங்கும் துப்பாக்கிச் சூடு!! (Video)

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்பினருக்கும், அடையாளம் தெரியாத குழுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதன்போது இராணுவத்தின் மீது 3 குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிப்பிரயோகம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை சம்மாந்துறையில் வீடு ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீட்டில் இருந்து ஆயதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் திரை சீலையும் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்தே குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
a
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |