அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலினை அடுத்து பொலிஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
இவ்வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கணனி, ஹாட் டிஸ்க், தகவல் சேகரிப்பு பென் டிரைவர் உட்பட சில சந்தேகத்திற்கிடமான ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி குறித்த வீட்டினை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு குடியிருந்த சிலர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கிடைத்த தகவலினைத் தொடர்ந்து குறித்த வீடு நேற்று மாலை முதல் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
வாடகைக்கு பெறப்பட்ட இவ்வீட்டில் ஆறுபேர் அடங்கிய குடும்பமொன்று தங்யிருந்ததாகவும், அவர்களுள் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும், சிறுபிள்ளையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நேற்று அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 19 ஆம் திகதி குறித்த வீட்டினை வாடகைக்குப் பெற்றுக்கொண்டு குடியிருந்த சிலர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கிடைத்த தகவலினைத் தொடர்ந்து குறித்த வீடு நேற்று மாலை முதல் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
வாடகைக்கு பெறப்பட்ட இவ்வீட்டில் ஆறுபேர் அடங்கிய குடும்பமொன்று தங்யிருந்ததாகவும், அவர்களுள் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும், சிறுபிள்ளையொன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நேற்று அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
0 comments: