Home » » மட்டக்களப்பு விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி! - 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பு விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி! - 3 பேர் படுகாயம்

மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்ன பகுதியில், இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். 3 இராணுவத்தினர் காயமடைந்தனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புணானைப் பகுதியில் இருந்து வெலிக்கந்தை நோக்கி சென்று கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து வீதியில் அருகே நின்ற மரமொன்றில் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பொலனறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |