Home » » மகனைக் கத்தியால் வெட்டி விட்டு உயிரை மாய்த்தார் தந்தை!

மகனைக் கத்தியால் வெட்டி விட்டு உயிரை மாய்த்தார் தந்தை!

வடமராட்சி- கரவெட்டி, தேவரையாளி பகுதியில்,மகனைக் கத்தியால் வெட்டிய தந்தை தனது உயிரை மாய்த்துள்ளார். 63 வயதுடைய பாக்கியராஜா என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார். தந்தையின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 7.00 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதன் காரணமாக ஆத்திரமடைந்த தந்தை மகனை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார்.இதன் பின்னரே, தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டார். நெல்லியடி பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |