இலங்கையில் உள்ள எவருக்காவது காய்ச்சல் ,இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதற்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கான இடங்களை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் 11 அரச வைத்தியசாலைகள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே மேற்படி அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த அரச வைத்திய சாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாமெனவும் எந்தவொரு தனியார் வைத்தியசாலைக்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments: