Home » » சீனாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞன்

சீனாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞன்

சீனாவில் இடம்பெற்ற 53 வது “ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் இலங்கை இளைஞன் ஒருவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
இதில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் மாதவன் ராஜகுமார் என்பவர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
நுவரெலியா - கொண்டகலை தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார்.
ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். 
இந்த நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய உடற்­கட்­ட­ழகர் போட்­டியில் மலையகத்தின் ராஜ­கு­மாரன் தங்கப் பதக்­கத்தை வென்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |