Home » » சம்மாந்துறையில் பத்து மாத இரட்டை சிசுக்கள் கொடூரமாக படுகொலை!

சம்மாந்துறையில் பத்து மாத இரட்டை சிசுக்கள் கொடூரமாக படுகொலை!

பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளன.
சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இரட்டை குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சுயநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மனநோய் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய அலியார் சியாதுல் ஹக்கிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த இரட்டைப் பெண் குழந்தைகளை கழுத்து அறுத்து கொலை செய்ததாகவும், அறுத்த கத்தியை அவ்விடத்தில் வைத்துவிட்டு பின்னர் தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என குறித்த தாய் கூறியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |