Home » » மட்டக்களப்பு - வாகனேரி மக்களுக்கு குடிநீர் விநியோகம்

மட்டக்களப்பு - வாகனேரி மக்களுக்கு குடிநீர் விநியோகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வறுமையில் வாடும் பல கிராமங்கள் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி மக்கள் குடி நீருக்கு பல்வேறு இன்னல்களை தினமும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வாகனேரி வட்டாரத்திற்கான ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஷ்வரனின் அயராத முயற்சியின் காரணமாக இன்று குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையினால் மக்களுக்காக வழங்கப்படுகின்ற குடிநீர் பற்றாத வேளையில் தனது சொந்த முயற்சியில் வாகனேரி மக்களின் குடிநீர் பிரச்சினையை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் குடிநீரினை வழங்கியதாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வாகனேரி மக்கள் வாகனேரி குளத்தின் அருகில் பூவல் மூலம் குடிநீருக்கான நீரை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |