ஐ எஸ். ஐ. ஏஸ். ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு இராணுவ பயிற்சியளித்து வந்தவர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் இருந்த வீட்டை சுற்றிவளைத்தபோது அவர் தப்பி ஓடமுயற்சித்தநிலையில் அவரை துப்பாக்கி பிரயோகம் செய்து கைது செய்த சம்பவம் கடந்த 24 ம் திகதி மட்டு கும்புறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கும்புறுமூலை பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த முன்னாள் இராணுவத்தில் கடமையாற்றிய வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டமாவடி மீராவேடையைச் சேர்ந்த ஆமிமுகைதீன் என்பவர் ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு குண்டு தயாரிப்பது மற்றும் இராணுவ பயிற்சியளித்து வந்துள்ளதாக சிஐடி யினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவரை தேடி வந்ததையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார்
இந்த நிலையில் அவர் கும்புறுமூலை பகுதியிலுள்ள தென்னம் தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான 24 ம் திகதி பிற்பகல் 02.00 மணியளவில் அந்த பகுதியை புலனாய்வு பிரிவு மற்றும் சிஐடி யினர் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது அவர் அங்கிருந்து தப்பியோட முற்பட்டபோது புலனாய்வு பிரிவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை மடக்கிப் பிடித்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments: