இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் காசிம் சஹ்ரான் உயிரிழந்து விட்டாரா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மரபணு பரிசோதனையான டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
மொஹமட் காசிம் சஹ்ரான் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு தரப்பு தெரிவித்து வருகின்றது.
எனினும் சஹ்ரான் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில், சஹ்ரான் என்பவர் உயிரிழந்தார் என்றே கூறப்பட்டது.
ஷங்கிரி-லா ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட கொலையாளியின் தலைக்கும், சஹ்ரானின் தோற்றத்துக்கும் தொடர்பில்லை என்று ஒரு தரப்பு கூறுகின்றது.
இருப்பினும், உயிரிழந்த நபரின் தலையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது சஹ்ரான் உயிரிழந்துள்ளதாகவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதியான முடிவொன்றுக்கு வருவதற்காக, மரபணு பரிசோதனையான டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது.
0 comments: