Home » » சாய்ந்தமருதில் நடந்தத என்ன? தற்போதைய நிலை என்ன?

சாய்ந்தமருதில் நடந்தத என்ன? தற்போதைய நிலை என்ன?

தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலின் பின் சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் உள்ள வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, இராணுவம் பதிலுக்கு தாக்கிய நிலையில் 4 மணித்தியாலங்கள் வரை மோதல்கள் நடைபெற்றுள்ளன.
அதனைத்தொடர்ந்து குறித்த பகுதி முழுமையாக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விசேட தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மேலும் மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு பெண்களும் அடங்குவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இதில் இருவரே உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |