Home » » வாழைச்சேனை சிறுவன் கொலைப் பின்னணியும் தொடரும் கைதுகளும்!

வாழைச்சேனை சிறுவன் கொலைப் பின்னணியும் தொடரும் கைதுகளும்!

வாழைச்சேனை – மீராவோடை பகுதியில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கூரிய ஆயுதம் மற்றும் முச்சக்கரவண்டியொன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இக் காலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நேற்று மாலை குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டார். இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் தொடர்பே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்ட சிறுவனின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |