இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று புதன் கிழமை நண்பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிராவோடை 4 பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த சனுஸ்தீன் முகமட் சாஹீர் என்னும் 16 வயதுச் சிறுவனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களாலேயே மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து அடித்தும் கூரிய ஆயுதத்தினால் குத்தியும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தற்போது சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 comments: