தியாகம் என்ற உன்னதமான தத்துவங்களை உலகிற்கு எடுத்தியங்கிய இவ் ஈதுல் - அல்ஹா தியாகத்திருநாள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் தேவையான தத்துவங்களையும், கோட்பாடுகளையும் கொண்டுள்ளது. விட்டுக்கொடுப்பும், தியாகமும் நிறைந்த ஒரு சமூதாயத்திலோ நாட்டிலோ எவ்விதமான இன்னல்களுக்கும், இடர்களுக்கும் இடமிருக்க மாட்டாது. எமது நாட்டில் பற்றியெரிந்த இனத்தீயாயினும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், இழப்புகள் ஆயினும் அன்றைய பொறுப்பு மிக்கவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்திருந்தால் எமது இத்தீவு பேரழிவுகளையும், இழப்புகளையும் கண்டிருக்காது. காலம் கடந்தாயினும் இனி உள்ள பொறுப்பு மிக்கவர்களும், அரசியல் தலைமைகளும் இன்னொரு சமுதாயத்திற்கான உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களை வழங்குவதிலும் பரந்த மனதுடன் விட்டுக்கொடுப்புடன் செயற்படுபவர்களாக இருந்தால் எதிர்காலம் எமது நாட்டிற்கு சுபீட்சமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» இலங்கையிலும் உலகமெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் ஈதுல் - அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சி.சந்திரகாந்தன்
இலங்கையிலும் உலகமெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் ஈதுல் - அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சி.சந்திரகாந்தன்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: