Home » » சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுமுறை சற்று முன்னர் அறிவிப்பு!!

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுமுறை சற்று முன்னர் அறிவிப்பு!!


 எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சாதாரணதர மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 27 ஆம் திகதி வரை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் பெப்ரவரி முதலாம் திகதி முதல் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |