வீட்டுக்கு தீ வைத்து தனது சொந்த மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருவிட, தெவிபகல, கிரிபன்கல பிரதேசத்தில் (06) அதிகாலை ஒரு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 2 வயதான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயின் காரணமாக காயமடைந்த அந்நபரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சில காலமாக வீட்டை விட்டு வெளியேறியிருந்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இவ்வாறு தீ வைத்துள்ளார்.
27 வயதான சந்தேகநபர் இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments: