Home » » சாய்ந்தமருது பிரதேசத்தில் அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேசத்தில் அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு

 




( அப்துல் பாஸித்)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது - 02 ஆம் கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.றம்ஸா தலைமையில் இன்று ( 14) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீமின் வழிகாட்டவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி சங்கங்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகளாக சாய்ந்தமருது பிரதேசத்தில் 2842 சமுர்த்தி பயனாளிகளுக்கு 71 லட்சத்தி 79 ஆயிரத்து 400 ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |