Home » » முதன் முறையாக மோசமான வீழ்ச்சியில் இலங்கை ரூபாயின் பெறுமதி! காரணம் வெளியானது

முதன் முறையாக மோசமான வீழ்ச்சியில் இலங்கை ரூபாயின் பெறுமதி! காரணம் வெளியானது

 


இலங்கை ரூபாயின் பெறுமதி கூர்மையான சரிவுக்கு நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மையும் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 200 ரூபாயைத் தாண்டியது.

இந்த ஆண்டு டொலர் 200 ரூபாயைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி வரலாற்றில் முதல்முறையாக டொலரின் விற்பனை விலை 200 ரூபாயைத் தாண்டியது.

நாட்டில் ஒரு நிலையான அரசியல் மற்றும் நிலையான பொருளாதாரம் நிறுவப்படும் வரை அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வருவது நிச்சயமற்றது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வணிக பொருளாதார மற்றும் மேலாண்மை பீட பேராசிரியர் ஜானக் குமாரசிங்க, கூறினார்.

இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க, அனைத்து தொழில்களும் ஒன்றிணைந்து உள்ளூர் தொழில்களை மேம்படுத்தவும் அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைக்கவும் வேண்டும் என்று அவர் கூறினார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |