Home » » 20ஆம் திகதிக்குமுன் பேச்சுவார்த்தை - ஆயினும் இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை 26 ஆம்திகதிய சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும்.

20ஆம் திகதிக்குமுன் பேச்சுவார்த்தை - ஆயினும் இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை 26 ஆம்திகதிய சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும்.

ஆசிரிய, அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கப்பட்ட நிலையில் - இடைக்கால சம்பள அதிகரிப்பு  தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கிணங்க - கடந்த 3 ஆம் திகதிக்கு முன்னர் - சுற்றுநிருபமாக வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.





ஆனால் சுற்றுநிருபமாக வெளியிடப்படாத நிலையில் - தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என்ற முன்வைப்புக்கிணங்க - இன்று 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கலை 11 மணிக்கு - பேரணி ஆரம்பிக்கப்பட்டு - லோட்டஸ் வீதியூடாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. குறித்த பேரணியில் பல ஆயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


ஜனாதிபதி செயலகத்தை பேரணி வந்தடைந்தபோது - தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதிசெயலாளர் றோகண அபேரத்னவுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


2மணி நேர பேச்சுவார்த்தையின் பின்னர், 


இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பாக - முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக - எதிர்வரும் திங்கட்கிழமை - ஜனாதிபதிசெயலகம் , கல்வியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கூடி ஆராய்ந்து வரும் 20 ம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி - தொழிற்சங்கத்துக்கு சாதகமான விடயம் குறித்து செய்யக் கூடியவற்றை அறிககையாக தருவதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது.


ஆயினும் - வரும் 26 ஆம்திகதி நடபெறவுள்ள சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் - இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை - அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடமுடியாது எனவும் தெரிவித்தார். வெற்றியின் இறுதி தருணத்தில் - ஆசிரியர்கள் வரும் 26 ஆம் திகதி முழுமையாக போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.


போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை -ஆர்ப்பாராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு பொலிஸார் கால்களால் உதைத்து தள்ளினர். ஆயினும் -ஜனாதிபதி  செயலகம் முன்பாகவே தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் கூடியிருந்தனர்.


ஜனநாயக முறையில் அதிபர் ஆசிரியர் போராடியவேளை - ஆசிரியர்களை தாக்கிய பொலிஸாரின் அடாவடித்தன செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் - அரசு இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |