யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரியமொஹிதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களில் பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று காலை மீட்கபட்டுள்ளது.
உதித்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து நாட்டில் பல பாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். நாவாந்துறை மற்றும் ஐந்து சந்திப் பகுதியில் பெருமளவிலான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்;டனர் இதன்போதே மேற்படி பள்ளிவாசலில் குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
குறித்த பொருட்கள் மீட்க்கட்டதை தொடரந்து சுகாதாரப்பிரிவினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற சுகாதாரப்பிரிவினர் பொருட்களை ஆய்வு செய்ததுடன் பாவனைக்குதவாத தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர் பொறிக்கப்பட்ட பொதிகளையும் பொறுப்பெடுத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தேயிலை கைப்பற்றப்பட்டமை தொடர்பில் குறித்த பள்ளிவாசலின் தலைவர் மற்றும் மௌலவி இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை பள்ளிவாசல்களில் உள்ள அறைகள் வாடகைக்கு கொடுப்பது வழமை என்றும் இவ்வாறு தேயிலை கைப்பற்றப்பட்ட அறையும் கண்டியைச் சேர்ந்ந வர்த்தகர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பை அடுத்து அவர் கண்டிக்கு சென்று விட்டதாகவும் பள்ளிவாசலைச் சேர்ந்த ஒருவர் ஐ.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.
0 comments: