உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கடந்த 21ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து நேற்றைய தினம் இரு பள்ளிவாசல்கள் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களுக்கும் தொழுகைக்கு முஸ்லிம் மக்களை செல்லவேண்டாம் எனவும் தொழுகையினை அவர்களின் வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறும் முஸ்லிம் விவகார அமைச்சு அறிவித்திருந்தது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஜும்மா தொழுகை நடந்த பள்ளிவாசல்களுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதேவேளை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகை30 நிமிடங்கள்மாத்திரம் இடம்பெற்றதோடு, பள்ளிவசலுக்கு வெளியிடங்களிலிருந்து தொழுகைக்கு வருகை தந்த முஸ்லிம் மக்களை பொலிஸாரும் இரானுவத்தினரும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியே பள்ளிவாசலுக்குள் அனுமதித்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மலையகபகுதிகளில் ஹட்டன்,பொகவந்தலாவ பகுதிகளில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தொழுகைகள் இடம்பெற்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொம்பனித் தெருவில் நடத்திய தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது பள்ளிவாசல் மௌழவி ஒருவரின் கட்டிலின் கீழ் இருந்து 46 வாள்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இது தொடர்பில் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments: