மின்னேரியாக் குளப்பகுதி உள்ளிட்ட தேசிய பூங்கா வளவில் தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, நேற்றுவரை 350 இற்கும் மேற்பட்ட யானைகள் இந்த பூங்கா பகுதியில் நின்றதாக கூறப்பட்டுள்ளதுடன் இதனைப் பார்த்த வெளிநாட்டவர்கள் கடும் அதிர்ச்சியினை அடைந்துள்ளனர்.
நாளாந்தம் இந்த பகுதியில் பிரவேசிக்கும் ஜீப் வண்டிகளின் எண்ணிக்கை 300 இற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன்முலம் நாளாந்தம் 35 லட்சம் ரூபா வருமானமாக பெறப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜீப் வண்டிச்சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முதலானோர் பூங்கா சட்ட விதிகளுக்கு அமைவாக செயற்படவேண்டும் என அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.
0 comments: