நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில், உள்மட்டத்தில் கலந்தாலோசித்தபின்பே கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்த தகவலை வழங்கியுளார்.தற்பொழுது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால் அதுகுறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாதென அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்த தகவலை வழங்கியுளார்.தற்பொழுது முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால் அதுகுறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாதென அவர் கூறியுள்ளார்.
நேற்று இரவு இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்றில் அவர் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கவேண்டிய கடத்தில் உள்ளார்.
அதனையடுத்து நாட்டில் எழுந்துள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் சிறுபான்மைக் கட்சிகள் சில தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளன.
சிறுபான்மை இனத்தின் பெருங்கட்சியாகவுள்ல கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அனைவரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையிலேயே சம்மந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 comments: