Home » » யானையுடன் மோதிய எரிபொருள் தொடருந்திலிருந்து டீசலைச் சேகரித்தவருக்கு நேர்ந்த கதி!

யானையுடன் மோதிய எரிபொருள் தொடருந்திலிருந்து டீசலைச் சேகரித்தவருக்கு நேர்ந்த கதி!

யானைக் கூட்டங்களுடன் மோதி விபத்துக்குள்ளான எரிபொருள் தொடருந்திலிருந்து வழிந்த எண்ணெயைச் சேகரிக்க முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடருந்துத் திணைக்களத்தில் பணிபுரிவதுடன் இவர் இன்றைய தினம் கெக்கிராவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யானைக் கூட்டங்களுடன் மோதி விபத்துக்குள்ளான எரிபொருள் தொடருந்தின் இரண்டு தாங்கிகள் சேதமடைந்தன. இதனால் அதிலிருந்து டீசல் கசிந்த நிலையில் அதனை பிரதேச மக்கள் சேகரித்துள்ளனர்.
பொலிஸாரின் குறிக்கீட்டால் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களோடு மக்களாக எரிபொருளினைச் சேகரித்த குற்றத்திற்காக தொடருந்துத்திணைக்கள ஊழியர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |